வெள்ளி, 20 ஜூலை, 2018

வயலும் வயல் சார்ந்த சூழலும்

வயலும் வயல் சார்ந்த சூழலும்

    மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் மனிதர்கள் வாழ்ந்ததாக நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.  அந்த வரலாற்று முற்காலம் தொடங்கி தமிழர்கள் இயற்கை சார்ந்த சூழலை வாழ்க்கை நெறியாகக் கொண்டனர்.  கால வளர்ச்சியில் மானிடப் பரவலும்இ மனிதப் பெருக்கமும் இயந்திரமயமும்இ தொழில் நுட்பங்களும் இயற்கை கழிவுகளை விதைத்துவிட்டது.  நிலம்இ பொழுதுஇ இயங்கும் இயங்காப் பொருட்கள் எனச் சூழலின் இயக்கமே வாழ்வாக இருந்தமைக்கான தகவல் பண்டைய இலக்கியங்களில் பதிவாகி உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் வயல் சார்ந்த சூழ்நிலையை காண்போம்.
வேளாண் நிலம்
    வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடைஇ ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும்
    சங்க இலக்கியங்களில் செயற்கை தொடா உயரத்தில் இருந்த தமிழ்ச்சமூகம் விழுமியங்களைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களில் உணவு சேகரிக்கும் வாழ்க்கை நிலையும்இ இவேட்டையாடும் வாழ்க்கை நிலையும்இ காடுகளை எரித்துப் பயிர் செய்யும் வாழ்க்கை நிலையும்இ கால்நடை வளர்ப்பு வாழ்க்கை நிலையும்இ பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கை நிலையும் குறிப்பிடப்படுகிறது. மருதத்திணை சார்ந்த அகப்புறப் பாடல்களில் வயலும்இ வயல் சார்ந்த சூழலும்இ விளைபொருட்களும்இ வேளாண் வாழ்வும் விரவிக்கிடக்கின்றன.
           பயிர்த்தொழில் செய்வவற்கு அடிப்படையாக விளங்குவது நிலம்இ சங்க இலக்கியங்களில் நிலத்தைச்சுட்டும் பல பெயர்கள் இடம் பெறகின்றது. நிலம்இ வன்புலமஇ மென்புலம் எனப்பகுத்து கூறப்படுகிறது. மேட்டு நிலம்இ வலிய நிலம்இ முல்லை நிலம் என்கிற பொருள்களில் வன்புலமும்இ பின்புலமும் சுட்டப்பெறுகிறது. இது முல்லை நிலத்தையும்இ குறிஞ்சி நிலத்தையும் குறிக்கிறது.
 நீர் வசதியள்ள நிலம் மென்புலம் ஆகும். நீர் வசதியறறது புன்செய் நிலம் ஆகும். மென்புலம் மருத நிலத்தையும்இ நெய்தல் நிலத்தையும் குறிக்கின்றது. மருத நில வயல்கள் தண்ணடை எனவும் கூறப்படுகிறது.

நிலமும் வளமும்
            மருத நிலம் வளம்மிக்கதாக இருந்தமையை சங்கப்பாடல்கள் வழி அறிய முடிகிறது. கரிகாற்சோழனின் பெருமைகளைப் பாடும் பட்டினப்பாலை
   "காடு கொன்று நாடாக்கி
   குளந்தொட்டு வளம் பெருக்கி
   பிறங்கு நிலை மாடந்துறந்தை போக்கிக்
   கோயிலொடு குடிநிறீஇ"(283 - 286)

எனக் காட்டை அழித்து நாடாக்கியும்இ குளத்தைக் தோண்டி நீரைப் பெருக்கியும் ஊரைப்பெரிதாக்கியும் செய்த வளச் செயல்களைப் பட்டியலிடுகிறது.
 “கழனி மாஅத்து விளைந்துகு  தீம்பழம்
 பழன வாளை கதூஉ மூரன்"  (குறுந்-8)
வயலை அடுத்துள்ள மாமரத்தின் இருந்து கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தைப்  பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுவதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன்....எனத் தொடரும் பாடல்பாடும் புலவர்கள் உவமை சொல்லும்போது இயற்கை சார்ந்த நிலவியல் சூழல்களை அழகாகச் சித்தரிக்கின்றனர்.
“கணைக்கோட்டு வாளைக் கமமஞசூன் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்”  (குறுந்-164)

எனத்திரண்ட கொம்பை உடையவாளை மீனும்இ

“அரிற்பவர்ப் பிரம்பின் விரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்" (குறுந்-91)

எனக்கொடியும்இ கனியும்இ கொண்டை மீனும்இ
“கற்றித் கேளி ராத்திய யுள்ளுர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை றுங்கொடுபெயரும்"  (குறுந்-293)
எனப் பனைமரமும்இ கள்ளும் நுங்கும்இ
"குறுகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெருஉம்" (குறுந்-127)
என்றும் பாடலில் நாரையானது கெண்டை முனை கவர்ந்து கொள்ள அதன் வாயினிறு தப்பிய அம்மீன் நீருள் குதித்திய பின்பு அக்குளத்தில் உள்ள தாமரையின் வெள்ளிய அரும்பைக் கண்டு அஞ்சும் வயல் பக்கம் காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடையவன் என்பதும்இ

“அயிரை பரந்த அந்தன் பழனத்து
ஏற்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்”  (குறுந்-178)

என்றும் பாடலில் அயிரை மீன்கள் நிறைய பெற்ற வயலில் மெல்லியக் கொடியைக் கொண்ட ஆம்பல் மலரைப் பறிப்பர். நீரைக்கண்டு விழைந்தோர்போல என்பதும்இ மருத நிலத்தையும் அதன் வளத்தையும் நீர் நிலையையும்இ நீர் நிலைகளில் வளரும் உயிரினத்தையும் சுட்டி இயற்கை சார்ந்த சூழலாக அமைகிறது.

காவிரிபாயும் மருதவளநாடு
           சங்கப்பாடல்களில் காவிரி ஆற்றின் சிறப்பும் நிலவளமும் இடம் பெறுகிறது. மூவேந்தவரின் சோழனை உயர்ந்தவராய்க் காட்டும் பாடல் (புறம்-35)
"அந்தன் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடு எனப் படுவது நினதே"
என நீர்வளஇ நீர்வளம் பெருக்கத்தையும் நன்செய் வேளாண்மையின் பரவலையும் சுட்டுவதோடுஇ
"வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயலே"
எனப் போர்கள் வெற்றிகூட உழும் கலப்பை நிலத்தில் உழுத ஊன்று காலிடத்து விளைந்த நெல் தந்த வெற்றியாகும்.
நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புகெல்லாம் உணவைக் கொடுத்தவர் ஆவார். உடம்பு உணவை அடிப்படையாகக் கொண்டது. உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்துவர் இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார்.
உழவும் உழவுக் கருவிகளும்
         சங்க இலக்கியங்களில் உழவுத்தொழிலும் உழவர்களும்இ உழவுக் கருவிகளும் இடம் பெறுகிறது.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லன மொழிப் பிறவகை நிகழ்ச்சி” (தொல்.மரபியல்-8)

எனத் தொல்காப்பியர் சுட்டும்இ சங்க கால மனிதர்களை  வீரர்கள் வீரர்களற்றார் எனப்பகுக்கும் மரபு இருக்கிறது வீரர்களே உயர்ந்தோராகக் கருதப்பெற்றனர். போர்களம் புகாதவர்களே ஏர்க்களம் காணத் தலைப்பட்டனர். உழிஞைப் பாடர்லகளில் உழவும்இஉழவு பேணப்படும் முறையும் இடம் பெறுகின்றது.

        நிலத்தின் விளைபொருள்களில் நெல்லே முதன்மையானது. ஒரு பெண்யானை அமரும் இடத்தில் ஏழு ஆண்யானைகள் உண்ணப்போதுமான நெல் விளைந்ததாகவும்இ வீட்டின் முகட்டளவு நெல் வளர்ந்திருந்ததாகவும் சுட்டப்பெறுகிறது. உழர்களைக்குறிக்க உழவர்இ உழத்தியர்இ கடையர்இ கடைசியர் என்றும் சொற்கள் சங்க இலக்கியங்களில் ஆளப்பெருகின்றன. பெரும்பாணாற்றுப்படைஇ மதுரைக்காஞ்சிஇ மலைப்படுகடாம் முதலியவற்றில் மருதநில உழவர்களின் வாழ்க்கைச் சிறப்புகள் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
       உழவர்கள் பயன்படுத்திய கலப்பை நாஞ்சில் எனப்பட்டது. பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் என்று பெரும்பாணாற்றுப்படை கூறும் நாற்றங்காலில் நாற்று விட்டுஇ வளர்ந்த பின் வயல்களில் நட்டதையும்  களையெடுப்பையும் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது.

“பழனக் காவில் பசு மயிலாலும்
பொய்கை வாயில் புனல் பொருபுதவின்
நெய்தல் மரபின் நிரைகட் செறுவின”; (பதிற்.27.(8.10)

என்பதில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்ட அணையிணை பொய்கை வாயில் புனல் பொருபுதவின் குறிப்பாக அமைகிறது. களையெடுத்தல்இ நாற்று நடுதல்இ விளை நிலங்களை காவல் செய்தல் ஆகியன பெண்களாலேயே நடை பெற்றிருக்கின்றன.


முடிவுரை
இயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம். செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள்.போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால்இ குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால்இ ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும். அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை. செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செயப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது.
    சங்க இலக்கியங்களில் பண்டைய வேளாண்மையும்இ இயற்கை சார்ந்த வாழ்வும் காடுதிருத்தி நாடாக்கும் முயற்சியின் பதிவுகளும் காணப்படுகின்றன. மரபு சார்ந்த வேளாண்மை இயற்கைக் கொண்டாடியது.  இயற்கை மனிதனைக் கொண்டாடியது.  மனிதன் உலக இன்பத்தை வாழ்வாக விவரித்து வாழ்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக