வெள்ளி, 20 ஜூலை, 2018

போர் மரபுகள்

 
                      போர் மரபுகள்

    உலகம் தோன்றியக் காலம் தொட்டு மனிதன் இயற்கையோடும்இ விலங்குகளோடும்இ நோய்களோடும் போராடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளான். அத்துடன் தன்னையும் தன் இனத்தையும் காக்க வேண்டிய நிலையிலும் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.  போர் பற்றியச் செய்திகளை மிகுதியாக விளக்கும் எட்டுத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.  புறநானூறு பல்பொருட்ச் செய்திகளை ஒருசேரத்  தரும் கருவூலமாக இருந்து வந்தாலும் அதிலும் மேம்பட்டு விளங்குவது போர்ப் பற்றிய செய்திகளே! என்பதைப் புறநானூறு பாடல்கள் புலப்படுத்துகின்றன.  இத்தகைய சிறப்புப்பெற்ற நூலானப் புறநானூற்றில் இடம்பெறும் போர் மரபு பற்றியச் செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.
அகராதிகள் தரும் விளக்கம்

    போர் என்றாலே நம் நினைவிற்கு வருவது போரினால் ஏற்பட்ட அழிவும் துன்பமுந்தான்.  இந்த கொடிய விளைவை ஏற்படுத்தும் போர் என்பதற்கு அகராதிகள் பல விளக்கங்களைத் தந்துள்ளன. “போர் என்பதற்கு போர்- சதயநாள்இ நெற்போர்இ பொந்துஇ போரென்னேவல்இ யுத்தம்” என்று கடிகத்தமிழ் அகராதி பொருள் தருகின்றது.  இவ்விளக்கத்தையே தமிழ் மொழி அகராதியும் தந்துள்ளது. இதன் மூலம் போர் என்பது மாறுபாடு கொண்ட இருமனிதர்களுக்கிடையே இரு ஊர்களுக்கிடையேஇ இருநாடுகளுக்கிடையேஇ படைகளின் துணையோடு பெருமளவில் நடைபெறுவது தான்   போர் எனக் கருதமுடிகிறது.போர் என்பது பகைமைக் காரணமாக உயிரின் மதிப்பு அறியாது ஒரு குழு மற்றொரு குழுவுடன் சண்டையிட்டு மடிவதே போர் எனபதை அறியமுடிகின்றது.
போரின் பழமை

    எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கேயோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது போரில்லாத உலகம் இல்லை.  போர்ப் பண்பு உயிரிகளின் குணமாக உள்ளது. போராட்டம் என்பது உயிரிகளின் இயற்றையான ஒரு பகுதி போர் புரிவதை உலகத்தின் இயற்கையாகவே சங்கப் புலவர்களும் கருதியுள்ளனர் என்பதனைஇ

     “ஒருவனை ஒருவன் அடுத்தலும் தொலைத்தலும்
   புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை||

என்ற இடைக்குன்றூர் கிழாரின் புறநானூற்றுப் பாடல் மெய்ப்பிக்கின்றது. இவற்றால் பண்டைக் காலம் முதல் இன்று வரை போர் மனித இனத்தின் முக்கியப் பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக புலனாகிறது.
போரின் தொடக்கம்

    கா.கோவிந்தன் பண்டைத் தமிழர் போர்நெறி குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.  அந்நூலில் மானுட வாழ்வில் போரும் பூசலும் தோன்றியதற்கான காரணங்களைச் குறிப்பிடுவதோடு காலந்தோறும் சில அமைப்புகளுக்குத் தக்கவாறு போர்முறை மாறி வந்துள்ள நிலைகளையும் விளக்கியுள்ளார்  பிறருடைய செல்வத்தைப் பறிக்கும் முகத்தான் தோன்றியதே முதற்போர் நிகழ்ச்சி என்கிறார்.
    வாழ்வில் பயன் காணாத மக்கள் வளமான செல்வம் உடைய மக்களைக் கணூந்தோறம் காழ்ப்புணர்ந்து அப்பெருவாழ்வு தங்களுக்கும் வரவேண்டும் என்ற ஆசை கொண்டனர்.  அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதற்கும் துணிந்து நின்றனர்.  செல்வர் தாம் பெற்ற இன்ப வாழ்வை வறியவர்க்குப் பகிர்ந்து அளிக்கம் விரிந்த உள்ளம் பெறாத நிலையில் அவ்விரு சாராருக்கும் இடையே மன வேறுபாடு ஏற்பட்டது இவ்வாறு தொடக்கத்தில் ஏற்பட்ட மன வேறுபாடு பின்னர் பகையாகவும் அதன் விளைவாகப் போராகவும் மாறியது அமைதி கெட்டது.  மனிதன் நாகரீகம் அடைந்த காலத்தில் குறுங்காடுகளை அழித்துப் புன்செய் நிலமாக்கி வேளாண்மை செய்தான். பின்பு அதே மனிதன் ஆடுஇ மாடுஇ எருமை போன்ற விலங்குகளைப் பேணி வளர்த்துச் செல்வத்தைப் பெருக்கினான்.   இதன்மூலம் படிப்படியாகத் தனியுடைமை நிலைபெறத் தொடங்கிய போது வர்க்கப் போராட்டமும் ஆநிரைகளைப் பகைவர் கொள்ளையிட்டு செல்வதும் அவற்றை விற்ப்பதும்   சங்கிலித் தொடர் போல போர் நிகழ்ச்சிகள் தோன்றியிருக்க வேண்டும்.
சங்க காலப் போர்

உணவுஇ உடைஇ உறையுள் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன்   தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.  அவனால் முடியாத போது அவன் சார்ந்துள்ள சமூகமோ அரசோ அத்தேவைகளை நிறைவு செய்ய வேண்டும.; ஒரு மன்னர் தன் நாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய இயலாத நிலையில் நட்பு நாடுகளின் உதவியை நாடுகிறான்.  அது கிட்டாத நிலையில் ஓர் அரசன் பிற நாடுகளுடன் போரிட்டு அவற்றின் வளம் பறித்துத் தன் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்கிறான் இதனையே பொதுமக்கள் நலங்கருதி போர்முறை எனக் கொள்ளலாம்.
புறநானூறு புலப்படுத்தும் போர்மரபுகள்

    பழந்தமிழர்களின் போர் நெறிகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்போரில் கையாண்ட மரபுகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.  பழந்தமிழர்கள் போரில் கையாண்ட மரபுகளை நான்கு நிலைகளாகப் பிரித்து அறிய முடிகிறது அவைஇ போருக்கு முன்னுள்ள மரபுகள்இ போர் நிகழும் போது மேற்கொள்ளப்படும் மரபுகள்இ போருக்குப் பின்னுள்ள மரபுகள்இ பொதுவான மரபுகள்.
 போருக்கு முன்னுள்ள மரபுகள்
    பண்டைக் காலத்தில் போர் என்றால் உடனே சென்று தாக்குவது இல்லை.  போருக்குப் போவதற்கு முன்பே முரசு அறிவிக்கப்பட்டுஇ வீரர்கள் திரட்டப்பட்டுஇ அவ்வீரர்கள்நீராடி. போர்க்கோலம் கொள்வர். அரசன் அவர்களுக்கான அடையாளம் பூக்களும்இ படைக்கலன்களும் வழங்குவான்.
    போருக்கு செல்கிறோம் என்ற அச்சவுணர்வு இல்லாமல் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் போர்க்களம் சென்றுள்ளனர்.  இவ்வாறு போருக்குச் செல்லும் முன்பு சில மரபுகளைக் கையாண்டுள்ளனர்.  அவைகள்.
    அமைச்சருடன் ஆலோசனைஇ ஒற்று ஆராய்தல்இ முரசு முழக்கி வீரர்களைத் திரட்டுதல்இ நிமித்தம் பார்த்தல்இ வாள்(ம)  நடை மங்கலம் செய்தல்இ ஊர்க்கயத்தில் நீராடுதல்இ அடையாளப் பூச்சூடல்இ வஞ்சினம் உரைத்து நெடுமொழி சவறல்இ மொழிப்பாட்டுன் விடைபெறுதல்.
போன்ற பலவற்றை மரபாகக் கையாண்டுள்ளனர் என்பதை புறநனூற்றுப் பாடல் புலப்படுத்தும். மன்னன் போர் பற்றிய நிகழ்வுகளைத் தன் அமைச்சர் முதலியவர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் இதனைஇ
     “திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கு||
என்னும் புறநானூறு பாடலில் மாறாத அரசியல் மாற்றம் என்பதில் அமைச்சர் களம் இருந்தனர் என அறிய முடிகிறது. போர்க்குப் புறப்படும் மன்னர்கள் போர்க்களத்திலே  வீரர்கள் எந்த சாரரின் வீரர்கள் என்பதை அறிய அடையாளப் பூக்களை சூடியுள்ளனர் என்பதைஇ சோழன்போராவைக் கோப்பெருநற்கிள்ளிப் போரில் ஈடுபட்டபோது அத்திப்பூ மாலை சூடியதை
       “ஊர்கொள வந்த பொருநனொடு
       ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே||
என்னும் பாடலில் சாத்தந்தையார் பாடியுள்ளதை அறியமுடிகிறது.
போர் நிகழும் பொழுதுள்ள மரபுகள்
    போர்க்கோலம் கொண்டுஇ இறைவனை வணங்கி வழிபட்டு போர்க்களம் செல்வதற்கு சில மரபுகளை கையாண்டார்களோ அதேபோல பகைவரோடு போரிட வந்தவர்கள் போரிலும்இ போர்க்களத்திலும் சில மரபுகளைக் கடைபிடித்துள்ளனர்.   அவைகள்இ
களம் நிறுவிப் போர்இ பகலில் மட்டும் போர்இ ஆநிரைகளைக் கவர்தல்இ ஆநிரைகளை மீட்டல்இ காவல்மரம் கடிதல்இ முரசும் சங்கும் முழுங்கப்படல்இ போர்க்கள ஒற்று ஆராய்தல்இ பூச்சூட அழைத்தலும் பூச்சூடலும்இ பாசறையில் தங்குதல்இ துணைப்படை நாடல் போன்ற அனைத்தையும்.
போர் நிகழும் மரபுகளாக கையாண்டுள்ளதை புறநானூறு பாடல்கள் புலப்படுத்துகின்றன.
     பகற்பொழுது சிறியதாக இருந்தாலும் தன்னை எதிர்த்து வந்தவர் அனைவரையும்இ பகற்பொழுதிலே வென்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதைஇ
     “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
        வம்ப மள்ளரே பலரே”
                எஞ்சுவர் கொல்லோஇ பகல் தவச்சிறிதே?  என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடலால் பகலில் மட்டுமே போர் செய்தனர் என்ற குறிப்பு காணப்படுகின்றது.  போன்று மேற்கண்ட நிகழ்ச்சிக்களையும் புறநானூறு பாடல்களில் இடம் பெற்றுள்ளதை காணமுடிகின்றது.
போருக்குப் பின்னுள்ள மரபுகள்
    தாம் மேற்கொண்ட போரில் வெற்றி யாருக்கு என்று முடிவானவுடன் வெற்றி பெற்ற மன்னன் பகைப்புலத்தில் தன் உரிமையை நிலைநாட்டுவான்.  இதன் காரணமாக பகை மன்னனையும்இ பகை நாட்டு வீரர்களையும் சிறைப்பிடிப்பான்.  அதன்பின் அவன் கையாண்ட மரபுகளாகஇ
 .    பகைவர்களைச் சிறைப்பிடித்தல்இ கள்ளுண்டு மகிழ்தல்இ களவேள்வி செய்தல்இ நடுகல் நாட்டல்இ மங்கல நீராட்டி பகை நாட்டு மன்னனாக முடிசூடல் போன்ற செயல்களை புறநானூறு பாடல்களால் உணரமுடிகிறது. போரில் தோற்ற மன்னனின் மணிமுடியைக் கவர்ந்து தன் காலுக்கு வீரக்கழலாக அணிந்தான் என்பதைஇ
        “நீயே பிறர் ஓம்பறு மறமன் எயில்
      அடிபொலியக் கழல் தைஇய
       வல்லாளனை; வய வேந்தே”
என்ற ஆவூர் மூலங்கிழார் பாடலில் பதிவு செய்துள்ளத்தைக் காணமுடிகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் தன் போர் வெற்றிக்குப்பின் பகைவர்களின் உடலைச் சமைத்துஇ பேய்களுக்கு உணவளித்தான் என்பதை புறநானூறு (372:5-12) பாடல் மூலமும் தெரிந்து கொள்ள முடிகின்றது. போரில் பகைவீரர்களால் விழுப்புண்பட்டு வீரமரணம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நடும் பழக்கம் இருந்ததைஇ
    “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
      சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்||
புறநானூறு விளக்கும் போர் நிகழ்ச்சிகள்
    “மண்ணாசையால் ஏற்பட்ட புறநானூறு போர் நிகழ்ச்சிகள்|
    மண்ணாசைக் காரணமாக தன்நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டி பல போர்கள் நடைபெற்றன என்பதை புறநானனூற்றில் காண முடிகின்றது.  போர்க்கு அடிப்படைக் காரணமாக துரை அரங்சாமி கூறுவது “அக வாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் அன்பு நெறியையே பின்பற்றி வாழ்ந்தவர் நிலைபெற்றிருந்த தமிழ்நாட்டில் போர் தோன்றக் காரணம் |மண் நசை எஞ்சாமன் நசை| தனக்குள்ளது போதாது என்ற காரணத்தால் ஒரு நாட்டு வேந்தன் மற்றொரு நாட்டு வேந்தன் மீது போர் குறித்து எழுவான் எனவே மண் நசையே போர்க் காரணமாகும்|| என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.
    தன் நாட்டு மக்கள் வளமாக வாழ்வதற்கு இடம் போதாது எனக் கருதி சேரமான் செல்வக் கடுங்கோ வாரியாதன் போர் செய்தான் என்பதைஇ
    “போகம் வேண்டிப் பொதுச்சூசொல் பொறாஅது
      இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப||
 என்று கபிலர் பாடியுள்ளார். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுப் பெருவழுதி வடக்கே இமயமலையும் தெற்கே குமரியும் கிழக்கே நீலக்கடல் வேலியும் மேற்கே ஆழ்கடலும் கொண்ட நிலப்பகுதியை ஆட்சி செய்தான் என்பதைஇ
    “வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
     தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்||
என்று காரிக்கிழார் என்ற புலவர் நான்கு திசைகளிலும் ஆட்சி செலுத்தினான் என்பதைப் பாடியுள்ளார். தமது நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டி போர் செய்தல் வேந்தர்க்கு அறம் என்பதைஇ
    “  .............. பிறனாளும்
        நாடூக்கல் மன்னர் தொழில் நலம்||
    மண்ணாசையால் போர் நிகழ்ச்சிகளில் பல அழிகள் நடைபெற்றதையும் புறநானூறு புலப்படுத்துகிறது.

முடிவுரை
    புறநானூற்றில் பல போர்கள் நடைபெற்றாலும் வெற்றி ஒன்றையே கருதிபல போர்கள் செய்துள்ளனர் என அறியமுடிகின்றது.  புறநானூறு புலப்படுத்தும் போர் மரபுகளாக போர் நிகழ்வதற்கு முன்புள்ள மரபு போர் நிகழும் போது கையாளும் மரபுஇ போர் நிகழ்ந்த பின்புள்ள மரபுஇ பொதுவான மரபு போன்றவற்றைக் காணமுடிகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக