வெள்ளி, 20 ஜூலை, 2018

கணிமேதாவியார் இயம்பும் அறங்கள்


கணிமேதாவியார் இயம்பும் அறங்கள்



    ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் 
ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறுநாவற்ப்பூ மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும் ஏலாதி, அதன் பாடல்கள் ஆறு கருத்துக்களைக் கொண்டு ஒரு அறநெறியை உணர்த்துவதாக அமைந்துள்ளது கணிமேதாவியார் இயம்பும் அறங்கள் பற்றிக்காண்போம்

நல்லவாழ்க்கை வாழ்பவன்

    உலகில் மனித இனம் மற்றவர்களைவிட தாம் சிறந்து விளங்வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாடிலே இயங்கி வருகிறது. செல்லவச்செழிப்புடன் ஒருவன் வாழ்ந்தான் எனில் அவன் செய்யவேன்டியவைகளாக

    உண் நீர்வளம், குளம், கூவர், வழிப்புரை
    தண்ணீரே, அமபலம்,தான் பாற்படுத்தான் - பண்நீர்
    பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வளாய்
    கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து
                            ஏலாதி – 51

     என்ற பாடலில் குளம், கிணறு, முதலான நீர்நிலைகள், வழிப் போக்கர் தங்குவதற்கு வாய்ப்பாக இலைக்குடில்கள், தண்ணீர்ப் பந்தல்கள், அம்பலங்கள்  போன்றவற்றை அமைப்பவன் மிகுந்த செல்வம் பெருகுபவனாகவும், பண்ணோடு கலந்தபாடலையும் ஆடலையும் கேட்டு அனுபவிக்க வாய்ப்புள்ளவனாகவும், தன்மனைவியுடன் ஊடலும் கூடலும் பெற்று இன்புற்றவனாகவும் உள்ளவன் இனிதே வாழ்பவன் என்று உரைக்கிறார்.

இல்லறமும் துறவறமும்

    வாழ்க்கையை அழகாக அகம் என்றும் புறம் என்றும் பகுத்து வாழ்ந்தவன் தமிழன். சுற்றத்தோடு இனைந்து பாசத்தால் கோட்டைகட்டி வாழவே மனிதன் இல்லறமாக வாழ்கிறான். இல்லற வாழ்வின் அனைத்து கடமைகளும் முடிந்த பின் இன்பத்தை துறந்து வாழ்வதே உன்மையான துறவறம் ஆகும். இதனை
   

    மனை வாழ்க்கை, மாதலம், என்று இரண்டும் மாண்ட
    வினை வாழ்க்கை ஆக விழைப, மனை வாழ்க்கை
    பற்றுதல், இன்றி விடுதல், முன் சொல்லும் போல்
    பற்றுதல் பார்த்து இல்தவம்
                    ஏலாதி – 73

    என்ற பாடலடியில் இவ்வாழ்க்கைத் துறவு வாழ்க்கை என்ற இரண்டுமே பெருமைக்குரிய நல் வாழ்க்கையே இல்வாழ்க்கை என்பது பற்றுதல் சார்ந்தது. துறவுவாழக்கை பற்றுதலை விடுவது; வீடு பேற்றின் மேல் பற்றைக் கொள்வது என்று உரைக்கிறார். இதையே

    துன்பமே மீதூரக் கண்டும் துறவுஊள்ளார்
    இன்பமே காமுறுவர், ஏழையார்,இன்பம்
    இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி
    பசைதல் பரியாதாம் ஆமல். ( நாலடியார். துறவு 10)

அறிவு இல்லாதவர் இல்வாழ்கை, துன்பம் மிகுதியாகவே காணப்படும் எனினும் துறவை விரும்பமாட்டார்கள். அறிவுடையவர் இன்பம் அடையும்போது அதை சீர்தூக்கி இல்வாழ்கை துறந்து துறவறத்தே விரும்புவார்கள் என இல்லறம், துறவறம் பற்றி நாலடியார் கூறிச்செல்கிறார்.

அரசன்
    கடிவாளம் இல்லாத குதிரை எவ்வாறு செல்லுமோ இதுப்போல கட்டமைப்பு இல்லாமல் மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள். வலியவன் எளியவனை வெல்வான். இந்த நிலை மாறி அனைவரும் சமம் என்ற நிலை வேண்டுமெனில் அரசாங்கமும், அரசனும் நிச்சயம் தேவைப்படுகிறான். யார் அரசன் என கணிமேதாவியார் பின்வருமாறு,

    பெய்யான், பொய்மேவான், புலால் உண்ணான் யாவரையும்
    வையான், வழிசீத்து, வால் அடிசில் நையாதே
    ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ்மண் அரசாய்ப்
    பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு
                            ஏலாதி – 44

    பொய் கூறாமலும், பிறர் கூறும் பொய்க்கு உடன்படாமலும், புலால், உண்ணாமலும், யாரையும், வையாமலும், வருவோரை வரவேற்று விருந்து உணவு கொடுத்துப் பகிர்ந்து உண்பவன் கடல் சூழ்ந்த இவ்உலகில் அரசனாகும் பெருமை பெறுவான் என்கிறார்.

     கொல்லான், உடன்படான், கொல்வார்இனம் சேரான்
    புல்லான் பிறர்பால், புலால் மயங்கல் செல்லான்,
    குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், கொல்யானை ஏறி
    ஆடிப் படுப்பான், பின் ஆண்டு அரசு.
                    ஏலாதி 42
பிற உயிர்களைக் கொல்லாமலும் மற்றவர் கொல்வதற்கு உடன்படாமலும் அவருடன் சேராமல் புலால் உணவிற்கு மயங்காமல் மக்களுக்கு உணவு அளிப்பவன் எதிரிகளை கொல்லும் யானை மீது ஏறி மற்றவரை அடிமைப்படுத்தும் அரசன் அரசனுக்கு அரசன் ஆவான்.   
முன்வினை

    உயர்ந்த பண்புடனும் சீர்திருத்திய நாகரீகத்துடன்; வாழவே மனிதன் என்றும் முயல்கிறான். ஒருவன் தன் வாழ்நாள் இலக்காக செல்வம் சேர்ப்பதையும் புகழுடனே வாழவே ஆசைக்கொள்கிறான். அவ்வாறு ஆசை கொள்பவர்களுக்கு கணிமேதாவியார் எச்சரிக்கை வகுத்து செல்கிறார் இதனை,

    பெருமை, புகழ், அறம் பேணாமை சீற்றம்
    அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்
    பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்
    சாபம்போல் சாரும், சலித்து
                    ஏலாதி – 60

    என்ற பாடலடியில் பெருமை, புகழ், அறம், சினவாமை, அரிய நூலறிவு, சால்பு அகிய உயர்குணங்கள் இல்லாத தீயோரைச் சார்ந்தால் இம்மைக்கும், மறுமைக்கும் பாவமும், பழியும், பகையும், இறப்பும், கேடும், அச்சமும் முனிவர் இட்டசாபம் போல வந்தடையும். என்கிறார்.

மனிதனின் தீய அடையாளங்கள்

    மண்ணில் உதிக்கும் எந்த குழந்தையும்  தர்மத்தை அறிந்து உதிப்பதில்லை. அவரவர் வளர்ந்த விதத்திலே நல்லவர்கள், தீயவர்கள் எனும் அடையாளத்தோடு வாழ்கிறார்கள். சந்தர்பமும் சுழ்நிலையும் மட்டுமே ஒருவனை நல்லவன் தீயவன் என்ற அடையாளத்தை தருகிறது. ஒருவனுக்குறிய தீய அடையாளங்களாக

    ஆர்வமே செற்றம், கதமே, அறையுங்கால்
    ஓர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா,
    மானமே …………………….
                            ஏலாதி – 61

    என்ற பாடலில் போரவா, பகை, சினம் ஒரு தலைப்பட்சம், கருமித்தனம், போலி மனம் என்ற ஆறும் மானுட உயிர்க்கு  தீய அடையாளங்கள் என்று கூறுகிறார்

சிறந்த நட்பு

     நட்பு எனும் ஆயுதம்  அனு ஆயுதத்தை விட வலிமைமிக்கது. உணர்வுகளால் நிறைந்த எதிர்பார்ப்பு இல்லா ஒரு உறவு நட்பு. நட்பு   உறவுகளிலிருந்து வேறுப்பட்டது காதலில் இருந்து மாறுப்பட்டது. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப அது  மாறி ஆக்கம் சேர்க்கிறது.
நல்ல நட்பு  என்பதற்கு,

    சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
    நாக்கு, ஆடு, நாட்டு, அறைபோக்கும், என நாக்காட்ட,
    நட்டர்க்கு இலையின், தமக்கு இயைந்த கூறு உடம்பு
    அடடார்வாய்ப் பட்டது பண்பு                      ஏலாதி – 79
                       

    என்ற பாடலடியில் இறப்பும், கேடும், பகையும், வருத்தமும், மகிழ்ச்சியும், நாவின் வழி வரும் பழியும், நண்பர்களுக்கு வந்து அவர்கள் பாதிக்கப்பட்டால் தாமும் அவற்றால் பாதிக்கப்பட்டது போல் உணர்வதே நல்ல நட்பின் அடையாளம் என்கிறார்.

    சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
    நேர்தல், பிரிவில், கவறலே, ஓதலின்
    அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
    மென் புடையார் வைத்தார் விரித்து
                    ஏலாதி – 68

    நண்பர்கள் இறந்தபோது பிரிவு தாங்காது இறந்தல், நண்பர்களுக்கு வறுமை வந்துள்ளபோது பொருள் கொடுத்து உதவுதல் இனிய சொற்களைக் கூறுதல், நண்பர்களுடன் கூடியிருத்தல், நண்பர்கள் வருத்தும் போது தாமும் வருந்துதல். நண்பர் பிரிய நேரின் கவலைப்படுதல் எனும் ஆறு குணங்களும் நட்பு எனும் அன்புடையார்க்கு உரியவை எனச் சான்றோர் தம் நூல்களில் விரித்துக் கூறியுள்ளனர்

தேவரால் பகழப்படுபவன்

    மற்றவாரால் ஒருவன் புகழப்பட அவன் பல்வேறு நன்மைகளை செய்திடவேண்டும். அவ்வாறு செய்கையிலும் மறந்தும் ஒரு சிறு தவறை செய்தாலும் கூட அவன் துற்றப்படுவான். இந்நிலையில் தேவர்களால் புகழ் மொழிகேட்க கணிமேதவியர்

    “கொலைபுரியான் கொல்லான் புலால்மயங்கான் கூர்ந்த
     அலை புரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்”

    கொலை புரியாதவன். பிறர் கொலை செய்வதை விரும்பாதவன்.  மாமிசத்தை உண்ணாதவன். பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் செய்யாதவன். பிறரிடம் வஞ்சம் கொள்ளாதவன், எந்த சூழ்நிலையிலும் தன் சூழ்நிலையில் மாறாமல்; இருப்பவர்களை   விண்ணவர்களும் போற்றி புகழ்ந்திடுவர் என்று கூறுகிறார்.

பொய்உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்
மெய் உரையான், உள்ளனவும் விட்டுஉரையான் அய்உரையான்
கூந்தல் மயில்அன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம், இவ்வுலகம் விட்டு
                        ( ஏலாதி 33)
பொய் சொல்லாதவனாய், புறம் கூறாதவனாய், பிறர் துன்பம் அடைவதற்கு காரணமானவற்றை கூறாதவனாய், தம் வருமையை மற்றவரிடதில் கூறாதவனாய் எவன் ஒருவன் உள்ளானோ அவன் விண்ணவர்கே வேந்தனாவன் என்கிறார் கணிமேதாவியார்.

    “இண்சொல் அளாவல் இடம் இனிதூண் யாவர்க்கும்
     வன்சொல் களைந்து வரும்பானேல் - மென்சொல்”

    வீட்டுக்கு வரும் விருந்தினரை இன்சொல் கூறுதல். விருந்தினருடன் கலந்துறவாடல். சுவையான உணவு அழித்தல். மனம் கோணாத வண்ணம் உபசரித்தல். அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடுசெய்து தருதல், பணிவு கலந்து சொல் கூறல்.  இத்தகையவனைத் தேவர்கள் விரைந்து வந்து விருந்தினராய் ஏற்றுக் கொள்வர்.

பெண்ணுக்கு அழகு கல்வி

    அன்பு கருனை பாசம் இவற்றின் உறைவிடம் பெண்மை என்றால் அது மிகையல்ல. நம் வரலாற்றில் பெண்கள் அடிமையாகவே அன்று முதல் இன்று வரை பார்க்கப்படுகின்றனர். பெண்களின் வாழ்க்கை ஆணை சார்ந்தே இருந்துள்ளதை இலக்கியம் மூலம்; அறிய முடிகிறது. பெண்கள் என்றாலே அழகுதான் நினைவுக்குவரும் அந்த அளவிற்கு அலங்கார பிரியராக பெண்கள் இருப்பார்கள் என்பதையும், அந்த அலங்காரம் எல்லாம் அழகல்ல என்பதையும் பின்வரும் பாடல் வழி 

    இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
    நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
    கழுத்தின் வனப்பும், பனப்பு அல்ல; எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு
                            ஏலாதி – 74

    ஒரு பெண்ணுக்கு இடையடிகோ, தோளழகோ நடையடிகோ, நாண் அழகோ, கழுத்தின் அழகோ அழகு அல்ல. அவர்கள், எண்ணாகிய கணக்கியலையும், எழுத்தாகிய இலக்கிய இயலையும் கற்றுக் கொண்டிருக்கும் அழகே தலையாது. பெண்ணுக்கு அழகு அவள் கல்வி கற்று சிறந்த அறிவு பெற்று இந்த சமூகத்தை காப்பதே அழகு. என்பதை அறியமுடிகிறது.

     கல்வி என்பது ஒரு மனிதனுக்கு அழியாத செல்வமாகும் ஒருவர் பிறப்பு முதல் இறப்புவரை கூடவே வரக்கூடியது கல்வியே  கல்வி ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பத்தை மேம்படுத்துவதற்கு மட்டும் அல்ல  சமுதாயத்தை மேம்படுத்துவதற்கே பெண்கல்வி அவசியம் என்பதை அன்றே வலியுறுத்திச் சென்றுள்ளார்.

முடிவுரை

    உலகில் உள்ள மக்களின் மனதில் உள்ள தீமைகளை போக்க நினைத்த கணிமேதாவியார் ஏலாதி என்ற மருத்துவ நூலை படைத்தார். பாடல்கள் அனைத்தும் ஆறு அறக்கருத்துகளை கொண்டு இயங்குகிறது. மக்கள், அரசர்கள், துறவரம், ஈகை, நட்பு, பெண், இவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை  மேற்ச்சொல்லிய படி அமைத்துள்ளார். மனிதன் எந்த உயிரையும் கொல்லாதவனாய் இருத்தல் வேண்டும். மனிதன் அறம் பொருள் இன்பம் வீடுபேறு பெறவேண்டும் என்பதையே அனைத்து அறயிலக்கிய புலவர்களின் பாடுபொருளாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக