வியாழன், 21 ஜூன், 2018

பாலக்கோடு வட்டார நாட்டுப்புற மருத்துவம்

 
                     பாலக்கோடு   வட்டார நாட்டுப்புற மருத்துவம்


நம் பண்பாட்டைப் போற்றும் எவரும் நம் முன்னோர்களின் பழமையான மருத்துவமுறையைப் போற்றாமல் இருக்கமுடியாது. நாம் ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகியும் உடனடி நிவாரணம் கருதியும் மூலிகை மருத்துவத்தைப் புறகணித்ததன் விளைவுதான் இன்றையபுதுமையான நோய்களும் மருந்துகளும் ஏற்படக் காரணமாகும் அதற்கு நாட்டுப்புறமருத்துவம் கொண்டு சரி செய்யும் முறையை இக்கட்டுரையில் காணலாலம்.

பழங்கால மருத்துவம்


உடலில் வலிஇ காயம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அதைதணிக்க முயல்வது ஓவ்வொரு உயிரினத்திற்குமுள்ள பொதுவான இயல்பாகும்.
ஓவ்வொரு உயிரினமும் ஒவ்வொருவிதமான முயற்சியை மேற்கொள்கின்றன உதாரணமாக முத்துச்சிப்பியை எடுத்துக்கொள்வோம் தன் வலியைக் குறைப்பதற்காகசிப்பி மேற்கொள்ளும் ஒரு முயற்சியின் விளைவுதான் முத்தை உற்பத்தி செய்து வளர்ப்பதாகும்.
மற்ற உயிரினங்களிடம் இந்த இயல்பு வெறும் உணர்வுப் பூர்வமாகமட்டுமே காணப்படுகிறது. ஆனால்இ மனிதன் மட்டும்தான் வலிஇ காயம்இ போன்றவற்றைச் சரி செய்யும் அறிவுப்பூர்வமான முயற்சியை மேற்கொள்கிறான்.
உடம்பில் ஏற்பட்டகாயத்தின் வலியைக் குறைக்கவும் அந்தகாயத்தை ஆற்றவும் ஆதிமனிதன் அருகில் கிடந்தபச்சிலையைப் பிடுங்கித் தேய்த்த நாளே மருத்துவத்தின் தொடக்க நாளாகும்.
பின்னர் நாளடைவில் அனுபவப் பூர்வமாக நோய்களைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கான பல மூலிகளைத் தெரிந்து கொண்டு நோய்களைப் போக்கியுள்ளான்.
ஒவ்வொருவரும்; காயத்திற்கோஇ விசக்கடிக்கோ இன்னும் பிறநோய்களுக்கான மருத்துவரை நாடமால் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டோ அல்லது வீட்டிற்கு அருகில் கிடைக்கும் சில செடி கொடிகளைக் கொண்டோ அந்Nhயை நீக்குவர். இதனை கை வைத்தியம் என்கிறனர்.
நாட்டுமருத்துவம் சமையலில்
நாட்டுப்புறமருத்துவத்;தை உற்று நோக்கினால் இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதைக் காணமுடிகின்றது.
கீரை வகைகள்இ தண்டுகள்இ கசப்புகாய்கறிகள்இ படிமங்கள்இ இஞ்சிஇ மிளகுஇ பூண்டுஇ சுக்கு வெந்தயம் போன்றப் பொருட்களை இயல்பாகவே தினசரி சமையலில் மக்கள் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன.

கைமருத்துவம்

“பாட்டிஇ
எம்மகனுக்கு சளி பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா ஒழுகுது”
“அப்படியா நொச்சி இலையைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா வேக வச்சி நீராவி பிடிக்க சொல்லு சளி ஓடி போயிடும்”
“பாட்டி
பல்லு பயங்கரமா வலிக்குது என்ன செய்ய”
“வெள்ள கொய்யா பழத்தோட இலையை நல்லா மெல்லு பல்லுவலி காணமாபோயிடும்”   
இம்மாதியான பேச்சுகளை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ கேட்டிருப்பீர்கள் இதைதான் கை வைத்தியம் அல்லது கை மருத்துவம் என்று கூறுவர்.
இம்மருத்துவ முறைகளை முன்னோரிடமிருந்து  தெரிந்து கொண்டவை. வீட்டிற்கு அருகில் கிடைக்கக் கூடியபொருட்களைக் கொண்டு உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்கு தரப்படுகின்றன.
 கை மருத்துவத்தால் குணமகாத நோய்களுக்கு மருத்துவரையோ பிறமருத்துவ முறைகளையோ நாடுவர். அவ்வகையில் நாட்டுப் புறமக்களால் நடைமுறை வாழ்கையில் பயன்படுத்திவரும் சில மருத்துவ முறைகளை இங்கு காணலாம்.

தலைவலி


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்குஇ இரண்டு இலவங்கம் சேர்த்து நன்றாக அரைத்து நெற்றியில் பத்தாகப் போட்டால் தலைவலி குணமாகும். வெயிலில் அலைவதால் சிலருக்கு தலையில் நீர்க் கோத்து கடுமையாக தலைவலி ஏற்படும். அப்போது மஞ்சளைத் தணலில் போட்டு கரியாக்கும் போது வெளிவரும் புகையை முகர்ந்தால் நீh ;கோர்வை சரியாகும்.


முடிவளர

    சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழும் அவர்கள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வந்தால் அவ்விடங்களில் முடிவளரும்.


ஜீரணம்

    ஒரு டம்ளர் தண்ணிரில் கரிவேப்பிலைஇ இஞ்சிஇ சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்இநெஞ்சுசளி
    மஞ்சளைத் தணலிட்டு சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும். பின் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்; ஆறும்.
    தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து நெஞ்சில் தடவிவந்தால் சளி குணமாகும்.

பழமொழி உணர்த்தும் மருத்துவம்

    இவைப் போன்று இன்னும் பல மருத்துவ முறைகளை அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்துகினறனர். இம் மருத்துவ முறைகளைப் பழமொழிகளின் வாயிலாகவும் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறும் பழமொழிகள் மக்களால் சாதரணமாக கூறப்படுவதில்லை.
    நோய் உண்டான போதும் கேலியாகப் பேசும் போதும் கூறுகின்றனர் .அவ்வாறான பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்.
    “விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்”   
    சொந்தகாரர்கள் வீட்டிற்கு சென்றால் மூன்று நாட்கள் மட்டுமே தங்க வேண்டும். அதிகநாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது ஒருமருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாகத் தெரிந்துவிடும். இல்லையே மருந்தை மாற்றவேண்டும் என்கிறதுபழமொழி.

    “இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு கொளுத்தவனுக்கு கொள்ளைக் கொடு”
    எள் என்பதால் நல்லசத்துள்ள உணவாகும். உடல் மெலிந்து இருப்பவர்கள் எள் உண்டால் உடல் பெருகும். உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளை உண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து அளவான உடலோடு ஆரோக்கியமாக இருப்பார்கள் என இப்பழமொழி எடுத்துரைக்கிறது.

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

   ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


  அவரைப் பூத்திருக்க சாவோரை கண்டதுண்டோ

  அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாளாம்


  ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

  சனி தோறும் நீராடு


  நோயைக் கட்ட வாயைக் கட்டு


  ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்று நீர் இரண்டும் போக்கும்.

    இதுப் போன்ற பழமொழிகள் அனுபவம்; வாய்ந்த பெரியோர்கள் வாயிலாக வழிவழியாக இன்றும் மக்களின் வழக்கத்தி;ல் நிலைத்து உள்ளது.
    நாட்டுப்புற மக்கள் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டும் வீட்டருகில் வளரும் ஆடு தொடாஇ முடக்கத்தான் கொடிஇ நாயுருவிசெடிஇ வாதனாமரம் இநொச்சிஇ குப்பை மேனி போன்ற எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் வீட்டிலேயே சிக்கனமாக பக்க விளைவு களற்ற மருத்துவத்தைப் பார்த்துக் கை கொள்கின்றனர்.

முடிவுரை


    எண்ணற்ற மருத்துவம் நாட்டுப்புற மக்களிடம் பொதிந்து கிடக்கின்றன. நாட்டுப்புற மக்கள் நோயின் தன்மையையும் அதற்குரிய காரணங்களையும் நோய்குரிய மருந்துகளையும் அறிந்திருந்தனர். எனவே நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் வாயிலாக மனித இனத்திற்கு தேவையான பல்வேறு மகத்தான அறிவியல் அறிவும்மருத்துவத்தீர்வுகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தருமபுரி வேடியப்பன் வழிப்பாடு

 

தருமபுரி  வேடியப்பன் வழிப்பாடு 

 
  இன்றை நவீன உலகத்தின் நாகரீக வளர்ச்சிகளுக்கு வித்திட்டது நாட்டு புறம். உண்மையான பண்பாடு மற்றும் கலாச்சாரங்களின் பிற்ப்பிடம் கிராமங்கள்தான்  நாட்டாரின் வாழ்வியலைப் பற்றி எடுத்துறைக்கும் ஒரு  துறையே நாட்டுப்புறவியல். காலம் காலமாக நம்பிக்கைகளும் சடங்குகளும்இ நீங்காமல் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.
 நாட்டாரின் நம்பிக்கைகள்; வழிபடும் தெய்வத்ததை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. அவ்வகையில் சிறுதெய்வம் முக்கிய இடத்தை பெறுகிறது. சிறுதெய்வ வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கிராமங்களில் காணப்படுகின்றன.

வழிபாடு விளக்கம்

    வழிபாடு என்பதிலிருந்து பிறந்ததே “வழிபாடு” என்னும் சொல் வணங்குதல் வழியில் செல்லுதல் பின்பற்றுதல் நெறிப்படுத்துதல் பூசனை முறை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. வழிபாடு என்றும் இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு’ என்றும் உள்ளத்தின் கதவுகளை இறைவனுக்காகத் திறந்து  வைப்பதே வழிபாடு என்றும் கூறுவர் தழிழறிஞர் - க.ப.அறவாணன்.

கடவுள் தோற்றம்


    மனிதர்;களிடம் வழிபாடு தோன்ற முதற்காரணம் அச்சவுணர்வே ஆகும்.  அதிமனிதனின்  முதல் உணர்வு நிலையே அச்சம். ஆதிமனிதன் என்பவன் விலங்கு நிலையானவன் அவன.; தன்னைக் காத்துக்;கொள்ள வேண்டும் என்ற அச்ச உணர்வே கடவுளை உருவாக்க காரணமாய் அமைந்தது
கோவில் அமைந்துள்ள இடம்

    தருமபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 20 கிலோமீடட்ர் தொலைவில் இருமத்தூர் உள்ளது. இங்கு தெண்பெணணையாறு ஒடுகிறது. அங்குதான் வேடியப்பன்  கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முதலில் கற்கள் வைத்து  பூசை செய்தார்கள் .
தற்போதுதான் கோவில் கட்டி  குடழுழக்கு விழா நட்த்தினார்கள். அங்கு சென்று வழிப்பட  முடியாத காரணத்தால் கீழ்ழரிக்கல் கிராமத்தில் 6 அடி உயரம் கொண்ட நான்கு கற்கள் வைத்து சிலை முன்பு இரண்டு வேல் வைத்து வழிப்படுகிறார்கள்;
காவேரிப்பட்டிணம் அருகில் நெடுகல் எனும் ஊரில் மிகப்பழமையான வேடியப்பன் கோவில் உள்ளது. அதேப்போல் காரிமங்கலம் அருகில் ஜகதோப் எனும் ஊரிலும் வேடியப்பன் எனும் கோவில் உள்ளது.
தருமபுரி பகுதியிலுள்ள வேடியப்பன் கோவில்கள் நடுகல் வழிபாட்டை சார்ந்தது. முற்காலத்தில் மரத்தடியில் வீரன் உருவம் பொறிக்கபட்டு வெட்டவெளியாக கோவில்கள் இருந்தன.

வேடியப்பன் வரலாறு    :

    செஞ்சியிலிருந்து தருமபுரி பகுதியில் குடியேறிய வன்னியர்களே இத்திருவிழாவைக் கொண்டாகிறார்கள்.
    செஞ்சியிலிருந்து 11 குடும்பங்கள் தருமபுரிக்கு குடிபெயர்ந்தார்கள் அதில் 10 குடும்பங்கள் பங்காளிஇ ஒரு வீட்டார்இ சம்மந்தி வீட்டார் ஆவார். வேடியப்பன் என்னும்  சொல்  சிவனுடைய வேடர் அவதாரத்தை குறிப்பதாகும்;. ஒரு நாள் அர்சுணன் தவம் செய்வதற்காக காட்டுக்கு செல்கிறான்.
அவ்விடத்தில் முகசுரன் என்னும் ஒரு அசுரனை துரியோதன் பாண்டவர்களை அழிக்கும்மாறு ஏவி விடுகறார்.  அப்போது அர்சுணன் தவம் புரிந்து கொண்டு இருந்தார். ஆவர் தவம் கலைந்து விடக்கூடாது என்று நினைத்து சிவபெருமான் வேடம் அவதாரம் எடுத்து அந்த அசுரனனைக் கொள்கிறார் மீண்டும்; அந்த முகசுரன் என்பவன் பன்றி அவதாரம் எடுக்கிறார். ஐயப்பனை அண்ணன் என்றும் வேடியப்பனை தம்பி என்றும் சிலர்குறிப்பிடுகிறார்கள்.
    வரலாற்று அறிஞர்கள் வேடியப்பன் உருவத்தை நடுகல்  என்று அழைக்கின்றனர். வீரன் போர் செய்வதைப்போல் கற்கல் பல காணப்படுகிறது. வேடியப்பனை குலதெய்வமாக மக்கள் வணங்குகின்றனர். இக்கோவில்களில் ஒரே இடத்தில் பல நடுகல் காணப்படுகிறது.

பூசை செய்தல்

    முதலில்  புற்றுக்கு ஆடு வெட்டி பூஜை செய்வார்கள் அதன் பிறகு தினமும் ஒரு கால பூஜை செய்யப்படுகிறது கோயில் கட்டிய பிறகு தற்போது பூஜைஇ ஒவ்வொரு  வெள்ளிக் கிழமைகளில் 12 மணியளவில் பூசை செய்கிறார்கள்.
    சில இடங்களில் வேடியப்பன்இ வீரபத்திரன் எனும் இரு வேறு வழிபாடும் நிகழ்கிறது. இவ்வழிபாட்டில் தலையில் தேங்காய் உடைக்கப்படுகிறது.
    வேடியப்பன் வாழிபாட்டின் போது பாத்திரத்தில் பஞ்சி சுடுவார்கள். பக்தர்கள் அதை கையால் எடுத்து வைப்பார்கள். பயபக்தியோடு இருப்பவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படுவது இல்லை. இத் திருவிழாவே உச்சகட்டமாக கருதப்படுகிறது.

பூசை பொருள்கள்

    தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களே பூசைக்குப் பயன்படுத்த படுகிறது. தேங்காய்இ பழம் பூ குங்குமம் சாம்பிராணி கற்பூரம் ஊதுபத்தி வெற்றிலைபாக்கு போன்றவைகள் பூஜைக்குரிய  பொருள்களாகும்.

திருவிழாக்கள்

    விழா என்னும் சொல் விழைவு என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது பழங்காலத்தில் தமிழர்கள் தைத்திங்களை  ஆண்டின் தொடக்கமாகக் கொண்டதால். வேடிப்பன் கோவில் தைப்பூசம் அன்றுதான் திருவழா கொண்டாப்படுகிறது.
    பங்காளிகள் சேர்ந்து ஐந்து ஆண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை விழா எடுக்கின்றனர். முப்பூசை செய்யப்படுகிறது.
    ஒவ்வெரு வருடமும் ஆடிஇ அல்லது ஆவணி மாதங்களில் திருவிழாக்கள் நிகழ்த்தபடுகிறது.

முப்பூசை


    ஆடுஇ கோழிஇ பன்றி எனும் மூன்றையும் பலியிடுவர்  சிறுதெய்வ வழிபாடுகளில் பெரும்பாண்மையாக முப்பூசை நடத்தப்படுகிறது.

காணிக்கைக் செலுத்துதல்

    பொங்கலிட்டுஇ கிடாய்வெட்டிஇ கோழி அறுத்துஇ பன்றி குத்தி  பலியிட்டுஇ வழிபாடு செய்கிறார்கள். குடும்பத்திலுள்ளவர்கள் தெவய்த்தின் காலடியில் குறிப்பிட்ட தொகையை    காணியாக வைக்கின்றனர்
பொங்கல் வைத்;து சாமிகும்மிடும் போது வெறறிலைப் பாக்கில் பணம் வைத்து கொடுப்பார்கள் இதை “காணிக்கைப் பணம்” என்று கூறுவார்க்ள்

முடிநீக்கல்


    குல தெய்வம் என்பதால் குழந்தை பிறந்த சில மாதம் கழித்து குழந்தைக்கு முடிநீக்கம் செய்யப்படுகிறது. மேலும் காது குத்தல் போன்ற சடங்குகளும் செய்யப்படுகிறது. தம் குலத்தைக் காப்பதாக மக்கள்ள நம்புகின்றனர். இன்றளவும் இவர்கள் வேடிஇ வேடியப்பன்இ முத்துவேடி என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் காணமுடிகிறது.

கரகவழிப்பாடு

    வேடியப்பனுக்குக் கரகமும் இருக்கின்றன. வெள்ளிகரகம் மூன்று உள்ளது. மேல் நிலையாக்கத்தின் முதல்படி இதுவாகும். கரகம் எடுத்து பூசை செய்து தலையில் வைத்து நடனம் ஆடுகின்றனர். கரகத்திற்கு ஆடு பலியிட்டு இரத்தம் தெளி போடப்படுகிறது.

நம்பிக்ககைள்:

தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் முதலில் மொட்டை அடித்து கிடாய் வெட்டி காது குத்துகிறேன் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் தெய்வத்திற்கு வேள் அடித்து வைக்கிறேன் என்று வேண்டுவர் இது ஒரு நம்பிக்கை ஆகும்

நவகிரகங்ளை ஒன்பது முறை சுற்றினால் தோசம் போய்விடும் என்பது  நம்பிக்கை.
குழந்தைகள் நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் சென்றால்   சாமிக்குக் கிடாய் வெட்டி பொங்களிடுவர்;

முறத்தில்  மஞ்சள் துணியால்  கல் வைத்து கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது  நம்பிக்கை

அரசு மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது  நம்பிக்கை

வேப்ப மரம் அரச மரத்தைச் சுற்றினால் திருமணம்  நடக்கும் என்பது நம்பிக்கை.

தன்னுடைய முந்தானைச்  சேலையைக் கிழித்து அதில் வளையல் வைத்து கட்டினால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இரண்டு சேவல்கள் சண்டையிடும்  அதை முடுக்கினால் தமக்கு

ஓற்றை தலைவலி வந்து விடும் என்பது நம்பிக்கை.

தெய்வததிற்கு படையல் இடும் முன்  எதையும் முன்னரே உண்ணக்கூடாது. அவ்வாறு உண்டால்  சாமி கண்ணைகுத்துவிடும் என்பது நம்பிக்கை.

ஒரு நல்ல காரியத்திற்குச் செல்லும் போது பூனையோ அல்லது விதவை பெண்ணோ எதிரே  வரக்கூடாது வந்தால்  அக்காரியம் விளங்காது என்று நம்பிக்ககை.

முடிவுரை


    குல தெய்வமாகஇ சிறு தெய்வமாக வணங்கப்பட்டு வருகிற வேடியப்பன் வழிப்பாட்டை சிலர் சைவசமயத்துடன் இணைத்தும்இ சிலர் வைணவ சமயத்துடன் இனைத்தும் கதை கட்டுகின்றனர். சிறு தெய்வத்தைத் தம் அறியாமையால் அல்லது பெரு தெய்வ பற்றால் இவ்வாறு கதை கூறுகின்றனர். வேடியப்பன் கோவில்களில் நவகண்டம்இ சுதை சிலைகளும் காணப்படுகிறது. வட தமிழ் நாடு முழுவதும் வேடியப்பன் கோவில்களில் இவை காணப்படுகின்றன. அங்கெல்லாம் பலியிடுவதையும் காணமுடிகிறது.
வேடியப்பன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாடாகக் கருதப்படுகிறது. வேடியப்பன் கோவில் அமைப்பு வரலாறுகள்இ பூசைசெய்தல் பூசைப்பொருள்கள் திருவிழாக்கள் காணிக்கைக் செலுத்துதல் நம்பிக்கைள் போன்றவற்றைக் காணமுடிகிறது.

கருப்பன் வழிபாடு



                           கருப்பன் வழிபாடு                                                     



நாட்டுப்புற  நகர்புற மக்களிடத்திலும் தெய்வம் பற்றிய நம்பிக்கை இருந்து வருகின்றன. சிறுதெய்வம், பெருதெய்வம் என்ற பாகுபாட்டிற்கேற்ப மக்கள் தங்கள் வழிபாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். சிறு தெய்வங்களில் ஒன்றான கருப்பனார் என்றழைக்கப்படும் சங்கிலி கருப்பனைப் பற்றிக் இக்கட்டுரையில் காண்போம்.

சங்கிலி கருப்பன்

கருப்பனார் பெரு தெய்வங்களுக்கு காவலாலியாகவும். மக்களைக் காக்கும் கடவுளாகவும் எண்ணப்படுகிறார். ஆனால் சங்கிலி கருப்பன் என்பவர் இன்றையச் சூழலில் முதன்மைத் தெய்வமாகக் வணங்கப்படுகிறார். இவருக்கு வழிவழியாக வழிபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மக்கள் பக்தியோடு அவரிடம் வேண்டினால் உடனே வரம் தருவதாக மக்கள் நம்புகின்றனர்.

உருவத் தோற்றம்

     கரிய நிற உடம்பும், உடம்பில் ஆயுதமாக சங்கிலியும் அணிந்திருக்கிறார். ஒரு கையில் பெரிய கொடுவாலும் மறு கையில் சங்கிலியும் பிடித்தவாறு காட்சியளிக்கிறார்.  வீரபராக்கிரமம் கொண்டவராகவும் காட்சியளிக்கிறார் தின்தோள் வலிமையும் சங்கிலியையும் உடம்பில் அணிந்திருந்த காரணத்தினால் சங்கிலி கருப்பன் எனப் பெயர் பெற்றிருக்கிறார்.

வேறு பெயர்கள்

     சங்கிலி கருப்பன், கருப்பனார், மின்னடியான், கருப்பு சாமி, வேடியப்பன், மூப்பனார், சின்ன மூப்பன், பெரிய மூப்பன் இன்னும் மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றார்.

ஊரும் வீற்றியிருக்கும் இடமும்

சேலம் மாவட்டம் பொன்னாம்மாப்பேட்டை இரயில்வே கேட்டையடுத்த புத்துமாரியம்மன் கோவிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெரிய வேப்ப மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார். அதன் அருகில் பெரிய கிணரும், தண்ணீpர் ஓடையும் அமைந்துள்ளது. இக்கோவில்  ஆதி காலத்தில் இங்கு தோன்றியதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

வழிபாட்டுப் பொருட்களும் வழிபடுவோரும்

     வழிபாட்டு பொருட்களாக பெரிய மாலையும், கிள்ளு சரம் பூவும், கற்பூரம், ஊதுபத்தி, தீப்பெட்டி, விளக்கு, விளக்கெண்ணெய், எலும்மிச்சை பழம் தேங்காய், வாழைப்பழம், கரும்பு, மஞ்சள், குங்குமம், காய், பழம் போன்றவையாகும்.

பூஜைகள்

முதலில் சாமிக்கு நீர் அபிசேகம் பால் அபிசேகம் மஞ்சள் அபிசேகம் நடைபெறும். சாமிக்கு  பூ மாலையாலும், எலுமிச்சை மாலையாலும் அலங்காரம் செய்வர். தேங்காய் உடைத்து ஊதுபத்தி பற்றவைத்து கற்பூரதீபம் காட்டி மணி அடித்து அருள் பாலிக்க வேண்டுவர்.

     பிறகு அனைவருக்கும் கற்பூரத்தைக் காட்டி ஆண்களுக்கு நெற்றியில் திருநீறுயிடுவதும், பெண்களுக்கு வலது கையில் திருநீறு கொடுப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார். பிறகு பக்தர்கள் கற்பூரதீபத்தட்டில் காணிக்கை செலுத்துவார்கள். அதன் பிறகு சாமியின் மேலும் காணிக்கையை வைக்கச் சொல்வார்கள்.

     பிறகு பூசாரியான மாரியப்பன் அனைவருக்கும் தீர்த்தத்தைத் தெளிப்பார். வந்த அனைவருக்கும் சுண்டலும், எலும்மிச்சை சாதமும், புளி சாதமும் அவுள் போன்ற உணவுகளை அனைவருக்கும் கொடுப்பார்.

     சாமியை தரிசித்து செல்லும் பக்தர்களுக்கு அரை மூடி தேங்காயும் இரண்டு வாழைப்பழமும் திருநீறும் அனைவருக்கும் கொடுப்பார். பிறகு எலும்மிச்சைபழம் கொண்டுவந்த பக்தர்களுக்கு அவர்கள் எத்தனை பழம் கொண்டு வந்தார்களோ அவைகளில் ஒன்றை மட்டும் சாமி அருகில் வைத்துவிட்டு மற்றவைகளை பக்தர்களுக்குக் கொடுப்பார். அவர்கள் வேண்டுதலுக்காக வீடு, காடு, வாகனம், வியாபாரம், பில்லி, சூனியம், கால் வலி போன்ற அனைத்திற்கும் அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திச் கொள்வர்.

     பிறகு கேட்கும் பக்தர்களுக்கு தீர்த்தம் தருவார். பூசாரியின் அண்ணனிடத்தில் பக்தர்கள் அனைவரும் அவரிடத்தில் தங்களுக்கு ஏற்படும் இன்பதுன்பங்களையும் கூறுவார்கள். அதற்கு அவர் தரும் வாக்கு அனைவரும் மன தைரியத்தை ஏற்படுத்தும்.

கண்ணேறு கழித்தல்

     பக்தர்கள் செல்லும் போது எலும்மிச்சை பழத்தை இரண்டாக அறுத்து சிகப்பைக் கொட்டி குடும்பம் குடும்பமாக சாமிக்கு ஐந்து மீட்டர் முன்னிலையில் நிற்க வைத்து சுற்றிப் போட்டு நெற்றியில் பொட்டும்.

கையில் பொட்டும், கால்களில் எலும்மிச்சை சாறையும் இடுவார்கள். இதனால் தனக்கு ஏற்பட்டிருக்கிற காத்து, கருப்பு, பயம், கண்ணேறு, கை, கால் வலி போன்றவை தன்னை விட்டு நீங்கி விட்டதாக நம்புவார்கள்.


கண்ணேறு கழித்தல் மந்திரம்

     காத்து, கருப்பு, பில்லி, சூன்யம், நல்ல கண்ணு, நொல்ல கண்ணு, நாய் பேய், பிசாசு எது பிடிச்சிருந்தாலும் உட்டு தூர ஓடிப்போயிரு. கருப்புசாமி எப்பவும் நீதாம்பா கூடவே இருக்கனும் நோய், நொடி, இல்லாமல் நல்லா வெட்சி இருக்கணும். உன் பிள்ளைகளை நீதாம்பா காப்பாத்தணும் கருப்பா வாடாப்பா ஏரிக்கையா தலையில என்று கூறுவர்.

கையுறை வழங்குதல்

     பக்தர்களுக்கு சங்கிலி கருப்பன் வேண்டியவற்றைத்  தந்தவுடன் பக்தர்கள் சாமிக்குத் தருவதாகச் சொன்னபடி அனைத்தையும் வழங்கவார்கள். மணி, அறுவாள், பணம், கிடாய், கோழி, முட்டை, காய், கறிகள் போன்றவைகளைத் தருவார்கள்.

சாமிக்கு படைக்கப்படும் உணவு

சுண்டல், பால், பழம், ஆட்டுக்கறியும் சுட்ட ஈரலும் (நெருப்பால் சுட்ட ஈரல்) கோழி ஈரல் மற்றும் மதுபானம், சாராயம், சுருட்டு, வாழைப்பழம், தேங்காய் போன்றவைகள் வைத்து படைக்கப்படும்.

     எலுமிச்சைச் சோறும், புளிச்சோறும் சர்க்கரைப் பொங்கலும் வைத்துப் படைக்கப்படும். கருப்பனாருக்கு பூஜை நடைபெறும்.

பூசாரி வாழ்கைவரலாறு

     பூசாரிமாரியப்பன், பூசாரியின் அண்ணன் சேகர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை மாரியப்பனுக்கு நாற்பது வயதும் சேகருக்கு ஐம்பது வயதும்  ஆகிறது. இருவரும் வீட்டில் நூல் நெய்யும் தறிப்போட்டு தங்களுக்கு வருமானத்தை ஈட்டி கொள்கின்றனர். இவர்களுக்கு ஒர் அம்மா இருந்தது சமீபத்தில் இறந்துவிட்டார், இவர் மட்டும் தனியாக சமைத்து உண்டு வாழ்கின்றார்.

     சங்கலி கருப்பன் வீட்டிருந்த இடமானது வேறொருவரின் சொந்த நிலம் இவர்களுக்கும் பூசாரிகளுக்கும் மனகசப்பு ஏற்பட்ட காரணத்தினால் தனது வீட்டிற்கு அருகிலே கருப்பனார் என்று பெருஞ்சிலையை வைத்து மக்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

சிலையின் உயரயமும் வடிவமைக்கப்பட்ட இடமும்

           கருப்பனார்  சிலையின் உயரம் ஏழு அடியாகும் இந்தச் சிலையை கோயம்புத்தூரில் செதுக்கப்பட்டு இங்கு கொண்டுவந்து ஒரு வருடம் தண்ணீரிலும் ஒரு வருடம் பழத்திலும் ஊறவைத்து வழிபாடு செய்தனர்.

யாகம் வளர்த்ததேவையான இயற்கைப் பொருள்கள்

     சந்தனகுச்சி


    கருப்பன் வழிபாடு
     வேங்கைக் குச்சி

     பொரசன் குச்சி

     வெளேறி

     வேப்பங்குச்சி

     செம்பளிச்ச

     கருங்கேறி

     கிளுவகுச்சி

     பாலகுச்சி

     வெள்ளமொண்டி

கருப்பாளகுச்சி

     ஆலகுச்சி

     சுடிறுகுச்சி

     வெள்ள எறுக்கங்குச்சி

யாகம் வளர்த்தவர்கள்

     யாகம் வளர்க்க வந்தவர்கள் பிரமாணர்கள் ஆவார்கள். சேலம்; ஈரோடு மாவட்டத்திலுள்ள  அனுபவம் வாய்ந்த பிராமணர்களை வரவழைத்து யாகம் நடத்தப்பட்டது.

     ஏழுநாட்கள் யாகம் நடத்தப்பட்டது. இதில் ஐந்து யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு யாக குண்டத்தில் மூன்று பிராமணர்கள் வீதம் பதினைந்து பிராமணர்கள் யாகம் வளர்த்தனர்.

யாகத்தின் பயன்கள்

உலக மக்களின் நன்மை வேண்டிக் கருப்பனார் சிலையைப் பிரதிஸ்டை செய்வதற்கு யாகம் வளர்க்கப்படுகின்றது. சிலையிலிருந்து வெளிப்படும் ஆத்மாவால் மக்களின் துன்பம் நீங்கி இன்பம் செழிக்கும் என்று நம்புகின்றனர். மாதம் மும்மாறி மழைபெய்யவும் எனவும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று நம்புகின்றனர்.

யாகத்திற்கத் தேவைப்படும் நாட்கள்

     யாகம் வளர்த்துவதற்கு குறைந்த பட்சம் ஏழுநாட்கள் தேவைப்படுகிறது. ஏழுநாட்கள் இரவு, பகல் என பார்க்காமல் யாகம் வளர்த்துவார்கள். மேலும் பதினான்கு நாட்கள் கால் மண்டலம் என அழைக்கப்படுகிறது. இருபத்தி எட்டுநாள் அரை மண்டலம் என அழைக்கப்படுகிறது. நாற்பத்தி எட்டு நாள் முக்கால் மண்டலம் என அழைக்கப்படகிறது. அறுபது நாட்கள் ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

     ஒரு மண்டலம் அரை மண்டலம் என யாகம் வளர்த்துபவர்கள் பொருளாதாரத்திலும் ஜனத்தொகையிலும் மேன்மை அடைந்தவர்களே இந்த யாகத்தை நடத்துவார்கள்.

பூஜை நடைபெறும் காலம்

     பூஜையைச் சிறப்பாகச் செய்வதற்கு செவ்வாய்க் கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் உகந்ததாக எண்ணுகிறார்கள். அம்மாவாசை, பௌர்ணமி அன்று விமர்சியாக வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது.

அம்மாவாசைக்கும் கருப்புசாமிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். அம்மாவாசை நாளன்று வெளிப்படும் காத்து, கருப்பு, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகள் வெளிப்படுவதைத் தடுப்பதற்காக கருப்புசாமி வழிபாடு நடத்தப்படுகின்றது.

கருப்பனாருக்கு பூறை நடைபெறும் நேரம்

     கருப்பனாரக்கு காலை ஐந்து மணிக்கு பூஜை நடைபெறும். மதியம் பன்னிரண்டு மணியளவில் இரண்டாம் பூஜை நடைபெறும். மூன்றாம் பூஜையாக மாலை ஏழு மணி அளவில் இறுதி பூஜை நடைபெறும். பூஜையை முடித்த பிறகு தான் நீராடிவிட்டு கறி உணவைச் சாப்பிடுவார். முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜையை நடத்தவார்.

பூசாரியின் சமயமும் சாதியும்

     பூசாரியானவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர். வன்னியர் குலத்தில் பிறந்து வளர்ந்தவர். பூசாரி பண்டாரர் வகுப்பைச் சாராதவர். ஆனாலும் தன்னைக் கடவுளுக்காகவும் மக்களுக்காவும் இறைப்பணியில் ஈடுபட்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் கூறும் வார்த்தைகளைக் கருப்பனார் வாக்கு கொடுத்ததாக நம்புகின்றனர்.

பக்தர்களின் சமயமும் சாதியும்

     பக்தர்கள் அனைவரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர். இங்கு வரும் பக்தர்கள் வன்னியர்,  நாடாh,;  குரும்பர் இன மக்களும். ஆசாரி இன மக்களும்,  வெள்ளாளர், சாணார், நாயக்கர் போன்ற இனத்தவர்கள் தவறாமல் வந்து வழிபடுகின்றனர். கீழ் வகப்பினர் யாரும் வருவதில்லை.


நாடி வரும் பக்தர்களின் ஊர்கள்

     சங்கிலிக் கருப்பன் என்ற கருப்பனாரைத் தேடி நாடிவரும் அதிக பக்தர்கள் வெள்ளாளகுண்டம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். சேலம், பொன்னம்மா பேட்டை கேட், கிச்சிப்பாளையாம், அம்மாபேட்டை, வாழப்பாடி, ஆத்தூர் முதலான ஊர்களிலிருந்தும் சங்கிலி கருப்பனை வழிபட வருகின்றனர்.

சங்கிலி கருப்பனின் அருகில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை      

     சங்கிலி கருப்பனின் அருகில் மக்கள் விவசாயம் செய்கின்றனர்.  ஆட்டோ ஓட்டுதல், நூல் நெய்யும் தறி ஓட்டுகின்றனர். ஆடு, மாடு, பன்றி வளர்த்தல் போன்ற தொழில்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

 மக்கள் ஓரளவிற்கு படிப்பறிவு பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். களி, கம்மஞ்சோறு போன்ற உணவுகளைச் சாப்பிடுகின்றனர்.

முடிவுரை

     மக்கள் எவ்வளவு நாகரிகம் அடைந்தாலும் அவர்கள் கடவுள் குறித்த நம்பிக்கைகளிலும் கடவுள் கொள்கைகளிலும் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.  அவ்வகையில் சங்கிலி கருப்பன் என்ற கருப்பனார் பெரும் சக்தி வாய்ந்த கடவுளாகக் கருதப்படுகின்றார். நினைத்ததை, வேண்டியவுடன் நிறைவேற்றுவதில் வல்லவராய்த் திகழ்கிறார். அவரை நாடி வரும் பக்தர்களுக்கு வீடு தேடி வரம் தருகிறார் என்று மக்கள் நம்புகின்றனர். துன்பத்தில் அவரை நினைத்தால் இன்பத்தை அள்ளிக் கொடுப்பார்.

புதன், 20 ஜூன், 2018

பழமொழிகளின் நடை அழகு



.இராஜ்குமார்
ஆய்வில் நிறைஞர்
தமிழ்த்துறை
பெரியார் பல்கலைகழகம் சேலம் 11
arajkumartamil88@gmail.com
பழமொழிகளின் நடை அழகு

தமிழில் கிடைக்கக்கூடிய இலக்கண நூல்களில் காலத்தில் முந்திய நூல் தொல்காப்பியம் ஆகும் அந்நூலில் செய்யுளிலியலில் இலக்கியம் படைக்கும் உத்திகளைப்பற்றி, விதிகளைப்பற்றியும் கூறுகிறது. பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்கள் இலக்கியம் படைக்கும் உத்திகளைப்பற்றி, விதிகளைப்பற்றியும்   கூறுகிறது. செய்யுள் நடையில் ஆய்வின் முன்னையோர்களாக நம்முடைய பழந்தமிழ் இலக்கணங்களைச் சுட்டுவதில் தவறில்லை. மேலை நாட்டுத் திறனாய்வு நெறிகளுள் நடையியல் ஆய்வு இன்று சிறப்புடன் திகழ்கின்றது. உல்மன், சேபிக், என்க்விஸ்ட் சுபிட்சர் போன்றோர் இத்தகைய நெறிகளைப் புலப்படுத்தினர். இலக்கியத்தைப்போலவே பழமொழிகளில் காணப்படும் நடையழகை இவ்வியலை ஆராய்வோம்.
நடையின் இலக்கணம்
நடை என்பது ஆசிரியரின் தன்மையை வெளிப்படுத்துவது.
நடை என்பது சொல்லோவியம் (ளவலநை ளை வாந அநவெயட piஉவரசந ழக வாந அயn றாழ றசவைந ) என்னும் குணத்தை அறியும் கலை  (phலளழைபழெஅள ழக வாந iனெ) என்று கூறுவர்.
                இலக்கியத்தின் இன்றியமையாதப் பகுதியாக விளங்குவது நடையாகும்.  படைப்பாளியின் எண்ணங்களையும் அவர் மனதில் எழும் உணர்வுகளும் உரிய சொற்களால் வடித்து கொடுக்கும் காலத் திறமையை நடை என்று கூறலாம். கம்பனின் காவியம் அனைவராலும் போற்றப்படுவதற்கு காரணம் கம்பனின் நடையழகே காரணமாக உள்ளது.  இலக்கியப் படைப்பாளிகளை இனம் கண்டுகொள்வதற்கு அவர்களது மொழிநடை பெரிதும் பயன்படுகிறது. தமிழ், வடமொழி இலக்கண நூலாரும், இலக்கியத் திறனாய்வாளரும் நடையின் இலக்கணம் குறித்துக் கூறுகின்றனர்.
சிறந்த நடையை அளந்து அறிவதற்குரிய அடிப்படைகள்      
ஜே.மில்ட்டன் முர்ரே என்பவர், “நடை என்பதனை மூவகையாக எடுத்துக்கொள்கிறார். ஒன்று நடை என்பது ஒருவருக்கே உரிய தனித்த வெளியீட்டு முறைமை: இரண்டாவது, வெளியீட்டு முறையில் பயன்படுத்தும் கலைத்திறன்; மூன்றாவது, இலக்கியகலையில் செய்து முடிக்கும் மகத்தான சாதனை. இம் மூன்றும் இலக்கிய நடையை அளந்து அறிவதற்கு பயன்படுகிறதைபோலவே பழமொழி நடையை அறிவதற்கும் பயன்படுகிறது”. 
வெண்பா பாட்டியல்
தமிழிலக்கணத்தில் (செய்யுளியலில்) கூறப்பட்ட இலக்கணங்களுள் சிலவும் பிறவும் நடையின் இலக்கணத்திற்குப் பொருந்தி விளங்குவதை நாம் காண முடிகிறது.
எடுத்த பொருளினோ டோசைனிதாய்
அடுத்தவை இகஞ்சொல்லாய் அணியும் தொடுத்த
தொடையும் விளங்க அவை துதிப்பச் சொல்லின்
இடமுடைய மாமதுர யாப்பு”.
என்று வச்சணந்திமாலை கூறும் இலக்கணத்தில் ஓசை, பொருள், அலங்காரம், தொடை, செய்யுள் அழகுகின் நடைக்கு இன்றியமையாத இயல்புகள் அமைகின்றனர்.

நடை பொருள்

உரையாசிரியர் இளம்பூரணர்,
ஆசிரிய நடைத்தே வஞ்சிஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
     எனும் செய்யுளியல் நூற்பாவில்நடையென்றது அப்பாக்கள் இயலும் திறம்என்றே பொருள் எழுதுவது உளங்கொளத்தக்கது. எனவேஎல்லாவகைத் திறன்களும் பொருந்தி நடக்கும் இயல்பினையே நடையெனலாம”;. என்றுநடை என்னும் சொல்லுக்கு . தமிழ்ப்பாவை இவ்வாறு விளக்கம் தருகிறார்.”
நடை என்னும் சொற்பொருளை  என்பது      இலத்தின் சொல்லின்  வழியாக பிறந்திருக்க வேண்டும் என்பர். முதலில் ஆசிரியரின் எழுத்து முறையை குறித்தது என்றும் அதன் பிறகுதான் ஆசிரியரின் கனவைத் தனித்துவ வெளிப்பாட்டைக் குறிக்கும் வகையில் அமைந்ததென்றும் கூறுவர், தனிமனித ஆளுமையைக் குறிப்பதாக பிரெஞ்சு மொழியில்  முதன் முதலாகக் கி;;பி.1330 ல் பயன்படுத்தப் பெற்றிருப்பதைக்காண முடிகிறது.
நடை நலம்
ஒரு கவிஞனின் படைப்பில் ஏதேனும் ஒன்றை மட்டும் பிரித்து இதுதான் நடைச்சிறப்பு என்று நாம் தனியாகவும் எடுத்துரைக்க இயலாது. இத்தகைய  உத்திகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் இழைந்தும் விளங்கினால்தான் செய்யுள் நடை நலம்  பெறுகிறது.
நடை சொல்லாட்சி
தமிழில்நடைஎன்பதற்குஇயக்கம்என்ற அடிப்படை ஒருமைப்பாடுடைய பல்வேறு பொருள்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று எழுதுகின்ற மொழியின் இயல்பைச் சுட்டுவதாகும். சென்னை பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரகராதிபாஸையின் போக்குஎன்று கூறுகிறது. நட என்பதே எல்லாச் சொற்களுக்கும் பகுதியாக விளங்குகிறது. சொல்லடை, வாக்கியநடை, செய்யுள்நடை, நூல் நடை என்ற வழக்காறுகளில் இச்சொல் ஆகுபெயர் பொருளிலேயே வருகிறது என்பர்.
தொல்காப்பியரும், பிறரும்நடைஎன்னும் சொல்லாட்சியைப் பல்வேறு இடங்களில் எடுத்தாண்டுள்ளனர் தொல்காப்பியரும், பிறரும் ஆண்டுள்ள ஆட்சியையும், வள்ளுவர்  சொல்லின் நடை என்று கூறுவதையும்  கிழே காணலாம்.
உரைவகை நடையே நான்கென மொழிப
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி
 வரும் இலக்கண, இலக்கியத்தில் நடை மொழியின் நடையைக்காணலாம்”.
நடைநயம் உணர்ந்த சான்றோர்
இலக்கியத்தை சூழ்ந்து பயின்றவர்கள் அதன் சொல் நோக்கையும், பொருள்  நோக்கையும் தொடை நோக்கையும், நடை நோக்கையும், கண்டு மகிழ்தனர் என்பதைப் பின்வரும் பாடலாலும் அறிய முடிகிறது பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எனப்படும் அழகிய மணவாளதாசன் பாடல்களை
சொல் நோக்கும் பொருள் நோக்கும்
தொடை நோக்கும் நடை நோக்கும்
எந்நோக்கும் காண இலக்கியம் ஆவது
எனும் பாடலால் பாராட்டிப் பாடினார்.
நடை வேறுபாடு
ஆசிரியர்(யுரவாழச), காலம்(யுபந);, நோக்கம்(Pரசிழளந);, கருத்து(வாநஅந) , இடம்(புநழபசயில);, மக்கள்(யுரனநைnஉந) முதலியவற்றால் நடையின் தன்மை வேறுபாடும். “திருவாசகத்திற்கு உருகாதவர்கள் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்பது திருவாசகத்தின் புகழ் இந்நூல் புகழ்வதற்கு காரணம் நடையழகேயாகும். ஒரு இலக்கியமானது ஆசிரியரின் மனநிலைக்கு ஏற்பவும் காலம், கருத்து, இடம், நோக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப நடை வேறுபடுகிறதை காணமுடிகிறது.
செய்யுள்
யாப்பிலக்கணம் ஒன்றே செய்யுளையும், உரைநடையையும் வேறுபடுத்துகிறது. பாடலுக்கு உறுப்பாக எழுத்து, அசை, சீர்,  தளை, அடி, தொடை என்பனவற்றைக் குறிப்பிடுவர்.
இந்த உறுப்புகளை ஏற்ற கவிஞர்கள் தாம் கருதிய பொருள் பொலிவுற, அணிநலம் திகழ அழைக்கப் பெறுவதே யாப்பு அல்லது செய்யுள் என்று கூறுவர் பழமொழிகளில் இடம் பெறும் மோனை, எதுகை, இயைபு ஆராயப்படுகிறது.


இரு சொற்களில் அமைந்த பழமொழிகள்
                பழமொழிகள் மனிதனின் அனுபவமொழி என்கிறோம். மனிதன் தான் பட்ட அனுபவத்தை இரண்டே சொற்களில் பழமொழியாக வடித்துள்ளனர்.
எல்லாம் நன்மைக்கே
உலகம் பலவிதம்
நாடகமே உலகம்
எம்மதமும் சம்மதம்
                மேற்கண்ட பழமொழிகள் மனிதனின் அனுபவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், இலக்கண நடைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது.
மூன்று சொற்களில் பழமொழிகள்
                பட்டதை எல்லாம்  எடுத்துச் சொல்ல பட்டப்படிப்பு தேவையில்லை என்பது பாமரர் வாக்கு அதுப்போலவே, மனிதன் தன்னுடைய எண்ணத்தை மூன்றே சொற்களில் பழமொழிகளாக வடித்துள்ளான் இதனை
ஆசை வெட்கம் அறியாதது.
சுத்தம் சோறு போடும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.
துறவிக்கு வேந்தன் துரும்பு’.
என்ற பழமொழிகள் மூலம் அறியமுடிகிறது.
நான்கு சொற்களில் பழமொழிகள்
வாழ்வது ஒருமுறைதான் வாழ்;தட்டும் வையகம் என வாழ்பவன் மனிதன். மற்றவர்களுக்கு அறிவுரையை பழமொழி வாயிலாக நான்கே சொற்களில் மனிதன் பின்வருமாறு கூறுகின்றனர்.
 அடக்கம் ஆயிரம் பொன்பெறும்.
 அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும்.
 பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’.
                உலக யதார்த்ததை இரண்டு, மூன்று, நான்கு சொற்களில் சொல்வதை காணலாம்.   
வாக்கிய அமைப்பு
                 சொல் நிலையில் மட்டுமல்லாமல் வாக்கிய நிலையிலும் ஒரே மாதிரியான வாக்கியங்களைக் கொண்டு வாழும் பழமொழிகள் 
அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்"
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்
பாடிக்கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்"
கூழ் ஆனாலும் குனிந்துக்குடி
கந்தையாயினும் கசக்கிக் கட்டு"
போன்ற பழமொழிகள் இரண்டு வாக்கியங்களைக் கொண்டவை. ஆனால் ஒரே மாதிரியான வடிவத்தைக் (முற்றுவினை பெயர்த்தொடர், நிபந்தனையச்சம் ) கொண்டு உள்ளமைக் காணத்தக்கது. இவற்றைப் போன்றே மூன்றுவாக்கியங்களைக் கொண்டுள்ள சில பழமொழிகளும் காணக்கிடக்கின்றன.
அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பான்;
ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்"
இவ்வாறு ஒரே வகையான இலக்கியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதைகளும் உள்ளன.
யாயும் ஞாயும் யாரா கியரோ"
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" போன்ற பாடல்கள் இத்தகைய நிலையில் உருவாக்கப்பட்டவை தாம்.
எதுகை
ஒரு செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு தொடுப்பது எதுகைத்தொடை எனப்படும். தொல்காப்பியம்அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்  என்றும் யாப்பெருங்கலக் காரிகைஇரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகைஎன்றும் கூறுகின்றன.
அவரை விதைச்சா
 துவரையா முளைக்கும்
ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்கனும்
 பாடி  கறக்கிற மாட்டை பாடி கறக்கனும்”;
பரணியில் பிறந்தவன்
 தரணி ஆள்வான்
புலிக்கு பிறந்தது
 எலி ஆயிறுமா
கொன்றால் பாவம்
 தின்றால் போச்சி
கல்லானாலும் கணவன்
 புல்லானாலும் புருசன்
விட்ட குறையோ
 தொட்ட குறையோ

இவ்வாறு பழமொழிகளில்  எதுகை அமைந்துள்ள பாங்கினை அறியமுடிகிறது.

மோனை

ஒரு செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்தாக வருமாறு தொடுப்பது மோனைத்தொடை எனப்படும். மோனை பற்றி தொல்காப்பியம்அடிதோறும் தளை எழுத்து ஒப்பது மோனைஎன்றும் யாப்பெருங்கலம்அடிமோனைத் தொடை எழுவாய் எழுத்து ஒன்றின் மோனைஎன்றும் கூறுகிறது.
பாவம்  ஓர் பக்கம்
பழி ஒரு பக்கமா
திருடனோட சேந்தா
 திருட்டு புத்திதான் வரும்
ஊள்ளுர் பொண்ணும்
ஊரோர கொல்லையும் உறவுக்கு ஆகாது
கூத்தாடி கிழக்கு பார்பான்
கூலிக்காரன் மேற்க பார்ப்பான்
வல்லு வல்லுனு கொலச்சா வாய்க்கு கேடு
வருசம் ஒரு புள்ள பெத்தா உடம்புக்கு கேடு
ஆடு மேய்க்கிறவனை கட்டினாலும் கட்டலாம்
ஆக்கி தின்றவனை கட்டிக்க கூடாது

இவ்வமைப்பு முறையில் பழமொழிகளில் மோனை இடம் பெறுவதை காணலாம்.
இயைபு
ஒரு செய்யுளில் ஒவ்வொரு அடியின் கடைசி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சொல்லோ ஒன்றிவருமாறு தொடுப்பது இயைபுத்தொடை எனப்படும.; இதை தொல்காப்பியம்இறுவாய் ஒப்பின் அஃது இயைபென மொழிப”(தொல்.1344) என்ற நூற்பா மூலமும், யாப்பெருங்களக் காரிகை இறுவாய் ஒத்தல் இயைபெனப்படுமே என்றும் கூறுகிறது.
 பாவம்  ஓர் பக்கம்
 பழி ஒரு பக்கம்”;
ஆக்க சலிச்சி அடுப்பு பால்லாச்சி
 குத்த சலிச்சி கொள்ள பால்லாச்சி
மாடு இல்லாதவன் மணவாளனாம்
 பொண்ணு இல்லாதவன் புண்ணியவானாம்
கூலிக்காரன்கிட்ட கூலிக்கு போககூடாது
 ஆள்காரன்கிட்ட ஆளுக்கு போககூடாது
கூத்தாடடி கிழக்கு பார்பான்
 கூலிக்காரன் மேற்க பார்ப்பான்”;
வல்லு வல்லுனு கொலச்சா வாய்க்கு கேடு
 வருசம் ஒரு புள்ள பெத்தா உடம்புக்கு கேடு
மாடு மேய்காம கெட்டது
 பயிர் பாக்காம கெட்டது
கல்லிக்கு புள்ள சாக்கு
 கவுண்டனுக்க ஊர் சாக்கு

பழமொழிகளில் இவ்வாறு இயைபு முறையும் அமைந்துள்ளது.
பழமொழிகளில் உவமை நயம்

                தொல்காப்பியர் உவமைக்கு விதி கூறியள்ளார். உவமையானது தொழில், பயன்பாடு, வடிவம், நிறம், எனும் நான்கின் அடிப்படையாய் பிறக்கும் என்கிறார். வினை பயன், மெய், உரு, என்ற நான்கே வகை பெற வந்த உவமைத்தோற்றம்”12  என்கிறார் தொல்காப்பியர் 
                ஒரு பாடல் இனிமையாக இருக்க இசை, பாடுபவரின் குரல், பாடல் வரிகள் அழகாக இருக்கவேண்டும் அதுபோலவே பழமொழிகள் படிக்காத பாமரமக்கள் கூட ஊவமையாக உவமை நயத்துடன்  பயன்படுத்துகின்றனர்.
எல்லாராலும் எல்லா நேரத்திலும் எல்லா வேலையும் செய்து முடிக்க முடியாது. எப்படிபட்டவராலும் ஒரு சில வேலைகளை செய்ய  முடியாது. அப்படிபட்ட சுழ்நிலையில் நேரம்தான் வீன் என்பதை வெளக்கெண்ணெய்க்குதான் கேடு பிள்ளை பிளைக்கிறதல்ல என்று உவமையாக சொல்லப்படுகிறது.
காதலர்கள் எல்லை மீறியபோது ஒரு சில நேரத்தில் தவறு நிகழ்கிறது. அந்த நேரத்தில் எல்லா தவற்றையும் ஆண் மீதே பழிபோடும் போது மற்றவர்களால் ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என்றும் உவமையாக கூறுகிறார்கள்.
அவசரக்காரர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களுக்குஅறுப்பதற்கு முன்பே ஆட்டு புடுக்கை எனதுன்னான்எனும் பழமொழி உவமையாக கூறபடுகிறது. மேலும் உவமையாக கூறப்படுகிற பழமொழிகள்
ஆக்க சலிச்சி அடுப்பு பால்லாச்சி
 குத்த சலிச்சி கொள்ள பால்லாச்சி
அக்காளுக்கு அரிசியாம்
தங்கச்சிக்கு தவிடாம”;
மாடு இல்லாதவன் மணவாளனாம்
பொண்ணு இல்லாதவன் புண்ணியவானாம்.”
போன்ற உவமைகளை பழமொழிகளில் காணமுடிகிறது.
கவிதையும் பழமொழியும்
                பழமொழிகள் சிறந்த உண்மைகளையும் செம்மையான அனுபவங்களையும் உள்ளடக்கி நிற்பதுடன் சிறப்பான வடிவ அமைப்பையும் கொண்டு விளங்குவன. இதே நிலையைத்தான் கவிதைகளிலும் காண்கிறோம். பழமொழி நாட்டு மக்களால் உருவாக்கப்படுவது. கவிதை, நயம் செறிந்த கவிதைப் பெருமக்களால் உருவாக்கப் பெறுவது. எனினும் கவிதைகளில் காணப்படும் எல்லாக் கூறுகளும் உத்திகளும் இதிலும் காணப்படுகின்றன.
                ஓரடிக் கவிதைகளைப் போல இவையும் சிறந்த அமைப்பைக் கொண்டு விளங்குகின்றன. கவிதைகளைப் பற்றிப் பேசும் அரிஸ்டாட்டில், எமர்சன் போன்றவர்கள்ஓரடியில் காணப்படும் சில சொல்லாக்கங்களும் சிறந்த கவிதைகளேஎனக்கூறிய போந்தனர் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்ட பழமொழிகளும் சிறந்த கவிதைப் பண்புகளைப் பெற்று விளங்குகின்றன என்றால் அதுமிகையாகாது.
தொகுப்புரை
                 மக்களின் உள்ளங்களில் இருந்து வெளியாகும் பழமொழிகள் யாப்பிலக்கண அடிப்படையில் மோனை, எதுகை, இயைபு முறையில் அமைத்து இயல்பாக வாழ்கையோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.                 பழமொழிகளின் நடை இலக்கணத்தையும், தமிழ் இலக்கண நூல்கள் தரும் இலக்கணங்களையும் கண்டோம், செய்யுள் இயற்ற தேவையான  மோனை, எதுகை, இயைபு சிறப்புகளை பழமொழியுடன் ஒப்புமைபடுத்தி இனம் கண்டோம்.                                         தமிழ் மொழியின் இலக்கிய நடையும் பழமொழியின் நடையும் ஆராயப்பட்டுள்ளது. இளங்கோவின் நடையும், கம்பனின் நடையும் பழமொழியோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
                 பழமொழி  நடையழகு எனும் இவ்வியலில் நடையின் இலக்கணம், நடை அளந்து அறிவதற்குரிய அடிப்படைத் தகுதிகள்  நடைப்பொருள் நடை நலம், நடை சொல்லாச்சி, நடை வேறுபாடு, போன்ற செய்திகளை காணமுடிகிறது.
                பழமொழியின் உவமை சிறப்புகள் நிறைந்தவையாக உள்ளதை அறிய முடிகிறது. சான்றாக இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் பழமொழியே கூறலாம். இதுப்போல் பல பழமொழியின் மொழியின் உவமை சிறப்புகளையும் 
                பழமொழியில் காணப்படும் உவமைகளை அடுக்கி உவமையின் சிறப்புகளையும் கவிதையும் பழமொழியும் எவ்வாறு ஒத்து போகிறது என்பதையும் இக்கட்டூரையில் காணமுடிகிறது. 

பயன்பட்ட நூல்கள்
1)            சுந்தரமூர்த்தி. .   -               நடையியல் இலக்கியம்
                நியூ சென்சுரி புக்ஹவுஸ்
                இரண்டாம் பதிப்பு 2013
                சென்னை 6000098
2)            பழமொழி நானூறு                 -            முன்றுறை அரையனார்
                 புலியூர்கேசிகன்
 முதல் பதிப்பு 2013
                ஜெயபாலன் பதிப்பகம்
                சென்னை.
1)            வதா இராமசுப்பிhமணியம்- தொல்காப்பியம்(பொருளதிகாரம்)
முதற்பதிப்பு மார்ச்2008
இரண்டாம் பதிப்பு, ஜனவரி 2012
பூம்புகார் பதிப்பகம்
127. பிரகாசம் சாலை பிராட்வே , சென்னை 600018