வியாழன், 21 ஜூன், 2018

பாலக்கோடு வட்டார நாட்டுப்புற மருத்துவம்

 
                     பாலக்கோடு   வட்டார நாட்டுப்புற மருத்துவம்


நம் பண்பாட்டைப் போற்றும் எவரும் நம் முன்னோர்களின் பழமையான மருத்துவமுறையைப் போற்றாமல் இருக்கமுடியாது. நாம் ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகியும் உடனடி நிவாரணம் கருதியும் மூலிகை மருத்துவத்தைப் புறகணித்ததன் விளைவுதான் இன்றையபுதுமையான நோய்களும் மருந்துகளும் ஏற்படக் காரணமாகும் அதற்கு நாட்டுப்புறமருத்துவம் கொண்டு சரி செய்யும் முறையை இக்கட்டுரையில் காணலாலம்.

பழங்கால மருத்துவம்


உடலில் வலிஇ காயம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அதைதணிக்க முயல்வது ஓவ்வொரு உயிரினத்திற்குமுள்ள பொதுவான இயல்பாகும்.
ஓவ்வொரு உயிரினமும் ஒவ்வொருவிதமான முயற்சியை மேற்கொள்கின்றன உதாரணமாக முத்துச்சிப்பியை எடுத்துக்கொள்வோம் தன் வலியைக் குறைப்பதற்காகசிப்பி மேற்கொள்ளும் ஒரு முயற்சியின் விளைவுதான் முத்தை உற்பத்தி செய்து வளர்ப்பதாகும்.
மற்ற உயிரினங்களிடம் இந்த இயல்பு வெறும் உணர்வுப் பூர்வமாகமட்டுமே காணப்படுகிறது. ஆனால்இ மனிதன் மட்டும்தான் வலிஇ காயம்இ போன்றவற்றைச் சரி செய்யும் அறிவுப்பூர்வமான முயற்சியை மேற்கொள்கிறான்.
உடம்பில் ஏற்பட்டகாயத்தின் வலியைக் குறைக்கவும் அந்தகாயத்தை ஆற்றவும் ஆதிமனிதன் அருகில் கிடந்தபச்சிலையைப் பிடுங்கித் தேய்த்த நாளே மருத்துவத்தின் தொடக்க நாளாகும்.
பின்னர் நாளடைவில் அனுபவப் பூர்வமாக நோய்களைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கான பல மூலிகளைத் தெரிந்து கொண்டு நோய்களைப் போக்கியுள்ளான்.
ஒவ்வொருவரும்; காயத்திற்கோஇ விசக்கடிக்கோ இன்னும் பிறநோய்களுக்கான மருத்துவரை நாடமால் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டோ அல்லது வீட்டிற்கு அருகில் கிடைக்கும் சில செடி கொடிகளைக் கொண்டோ அந்Nhயை நீக்குவர். இதனை கை வைத்தியம் என்கிறனர்.
நாட்டுமருத்துவம் சமையலில்
நாட்டுப்புறமருத்துவத்;தை உற்று நோக்கினால் இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதைக் காணமுடிகின்றது.
கீரை வகைகள்இ தண்டுகள்இ கசப்புகாய்கறிகள்இ படிமங்கள்இ இஞ்சிஇ மிளகுஇ பூண்டுஇ சுக்கு வெந்தயம் போன்றப் பொருட்களை இயல்பாகவே தினசரி சமையலில் மக்கள் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன.

கைமருத்துவம்

“பாட்டிஇ
எம்மகனுக்கு சளி பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா ஒழுகுது”
“அப்படியா நொச்சி இலையைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா வேக வச்சி நீராவி பிடிக்க சொல்லு சளி ஓடி போயிடும்”
“பாட்டி
பல்லு பயங்கரமா வலிக்குது என்ன செய்ய”
“வெள்ள கொய்யா பழத்தோட இலையை நல்லா மெல்லு பல்லுவலி காணமாபோயிடும்”   
இம்மாதியான பேச்சுகளை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ கேட்டிருப்பீர்கள் இதைதான் கை வைத்தியம் அல்லது கை மருத்துவம் என்று கூறுவர்.
இம்மருத்துவ முறைகளை முன்னோரிடமிருந்து  தெரிந்து கொண்டவை. வீட்டிற்கு அருகில் கிடைக்கக் கூடியபொருட்களைக் கொண்டு உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்கு தரப்படுகின்றன.
 கை மருத்துவத்தால் குணமகாத நோய்களுக்கு மருத்துவரையோ பிறமருத்துவ முறைகளையோ நாடுவர். அவ்வகையில் நாட்டுப் புறமக்களால் நடைமுறை வாழ்கையில் பயன்படுத்திவரும் சில மருத்துவ முறைகளை இங்கு காணலாம்.

தலைவலி


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்குஇ இரண்டு இலவங்கம் சேர்த்து நன்றாக அரைத்து நெற்றியில் பத்தாகப் போட்டால் தலைவலி குணமாகும். வெயிலில் அலைவதால் சிலருக்கு தலையில் நீர்க் கோத்து கடுமையாக தலைவலி ஏற்படும். அப்போது மஞ்சளைத் தணலில் போட்டு கரியாக்கும் போது வெளிவரும் புகையை முகர்ந்தால் நீh ;கோர்வை சரியாகும்.


முடிவளர

    சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழும் அவர்கள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வந்தால் அவ்விடங்களில் முடிவளரும்.


ஜீரணம்

    ஒரு டம்ளர் தண்ணிரில் கரிவேப்பிலைஇ இஞ்சிஇ சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்இநெஞ்சுசளி
    மஞ்சளைத் தணலிட்டு சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும். பின் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்; ஆறும்.
    தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து நெஞ்சில் தடவிவந்தால் சளி குணமாகும்.

பழமொழி உணர்த்தும் மருத்துவம்

    இவைப் போன்று இன்னும் பல மருத்துவ முறைகளை அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்துகினறனர். இம் மருத்துவ முறைகளைப் பழமொழிகளின் வாயிலாகவும் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறும் பழமொழிகள் மக்களால் சாதரணமாக கூறப்படுவதில்லை.
    நோய் உண்டான போதும் கேலியாகப் பேசும் போதும் கூறுகின்றனர் .அவ்வாறான பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்.
    “விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்”   
    சொந்தகாரர்கள் வீட்டிற்கு சென்றால் மூன்று நாட்கள் மட்டுமே தங்க வேண்டும். அதிகநாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது ஒருமருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாகத் தெரிந்துவிடும். இல்லையே மருந்தை மாற்றவேண்டும் என்கிறதுபழமொழி.

    “இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு கொளுத்தவனுக்கு கொள்ளைக் கொடு”
    எள் என்பதால் நல்லசத்துள்ள உணவாகும். உடல் மெலிந்து இருப்பவர்கள் எள் உண்டால் உடல் பெருகும். உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளை உண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து அளவான உடலோடு ஆரோக்கியமாக இருப்பார்கள் என இப்பழமொழி எடுத்துரைக்கிறது.

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

   ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


  அவரைப் பூத்திருக்க சாவோரை கண்டதுண்டோ

  அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாளாம்


  ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

  சனி தோறும் நீராடு


  நோயைக் கட்ட வாயைக் கட்டு


  ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்று நீர் இரண்டும் போக்கும்.

    இதுப் போன்ற பழமொழிகள் அனுபவம்; வாய்ந்த பெரியோர்கள் வாயிலாக வழிவழியாக இன்றும் மக்களின் வழக்கத்தி;ல் நிலைத்து உள்ளது.
    நாட்டுப்புற மக்கள் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டும் வீட்டருகில் வளரும் ஆடு தொடாஇ முடக்கத்தான் கொடிஇ நாயுருவிசெடிஇ வாதனாமரம் இநொச்சிஇ குப்பை மேனி போன்ற எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் வீட்டிலேயே சிக்கனமாக பக்க விளைவு களற்ற மருத்துவத்தைப் பார்த்துக் கை கொள்கின்றனர்.

முடிவுரை


    எண்ணற்ற மருத்துவம் நாட்டுப்புற மக்களிடம் பொதிந்து கிடக்கின்றன. நாட்டுப்புற மக்கள் நோயின் தன்மையையும் அதற்குரிய காரணங்களையும் நோய்குரிய மருந்துகளையும் அறிந்திருந்தனர். எனவே நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் வாயிலாக மனித இனத்திற்கு தேவையான பல்வேறு மகத்தான அறிவியல் அறிவும்மருத்துவத்தீர்வுகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக