புதன், 20 ஜூன், 2018

கிரேக்க மொழி

                                                கிரேக்க மொழி 



                     கிரேக்கம் உலகச்செம்மொழிகளில் ஒன்று என நாம் அறிவோம். கிரேக்கம் என்பது ஓரு மொழியா? அதன் முந்தைய இடம் எது? அம்மொழியில் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் யவை? இலக்கிய பாடுபொருள்கள் யாது? போன்ற வினாக்களுக்கு விடைத்தேடுவேம்.  மேலும் தழிழ் மொழிப்போல் புகழ்பெற்ற கிரேக்கர்கள் பற்றியும் இக்கட்டூரையில் காண்போம்.

கிரேக்க நாடும் கிரேக்கமொழியும். 

                    தொன்மைத் தன்மையும் இலக்கண இலக்கியப் பாரம்பரியமும் உடைய மொழிகளே செவ்வியல் மொழிகள் என்றழைக்கப்பட்டன. ஓரு மொழியின் அம்மொழி இலக்கியத்தின் தொன்மை தன்மையை அறிய அந்நாட்டின் நாகரிகத் தோற்றம், அடிப்படைச்சான்றாக அமையும் என்பர் வரலாற்றறிஞர்கள், ஐரோப்பிய மொழிக்குடுபத்தில் கிரேக்கம் ஒர் உட்பிரிவாகும். கிரேக்கத்தின் தாய்மொழி ஆர்க்டோ -சைட்ரியன் மொழியாக இருக்கலாம் என்பர் ஆய்வாளாகள்.
ஐரோப்பிய மொழிக்குடுபத்தில், ஒர் உட்பிரிவு கிரேக்க மொழியாகும். முன்பு கிரிஸ் என்றழைக்கப்பட்டுப் பின்புதான் கிரேக்கம் என்றாகியது. உலக மொழிகளில் தொன்மையானது கிரிஸ். கிரேக்கர் என்பது உரேமர்கள் இட்ட பெயர்களாகும். கிறஸ்து சகாப்தத்திற்கு முன்பு (சுமாh; கி.மு 5 ) .கிரிஸைச் சார்ந்த யுpபியா என்ற பிரதேசத்து கிரையி என்ற ஜாதியினர் இத்தாலியின் மேற்குப் பக்கத்கில் நேப்பிளில் குடியேறினர். இவர்களைக் கிரேக்கர்கள் என்று அழைத்தனர். இவர்கள் இதன் பிறகு எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தார்களோ அந்தபிரதேசம் முழுமையும் கீரீஸ் என்று அழைக்கபடலாயிற்று. அங்கு வசித்த அனைவரும் கிரேக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.
முன்பு கிரிஸிற்கு ஹெல்லாய் என்ற பெயர் இருந்தது. கிரேக்கத்தின் முத்த சந்ததியினர் ட்யுக்கோலின் இ பிக்ரா என்ற இருவர் ஆவர். ஆவர்களின் மகன் ஹெலலன் ஆவான் . அவன் வழிவந்தவர்கள் ஹெலன்னியர்கள் இவர்கள் வசித்த பிரதேசம் ஹெல்லாய் ஆகும்.
ஹெல்லனுக்கு இயோனஸ், டோரஸ் என்ற இரண்டு பிள்ளைகள் அயோனி, அக்கிஸிஸ்; என்ற இரண்டு பேரப்பிள்ளைகள் இருந்தனர் இவர்கள் சந்ததியினர் தான் கிரேக்கர்களுக்குள்ள நான்கு பிரிவினராகிய அயேர்லீயர், டோரியர், அயோனியர், அக்கீயர், ஆவார்.
இந்நான்கு பிரிவுகளினடிப்படையில் தான் கிரேக்க வரலாறு பிரிவினருள் ஒருவரான அக்கீர்யர்கள் பெலாப் பொனேசியாவுக்கு வந்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர். இவர்கள் பெலாஜ்ஜிய மைசீகியர்ககுத் தங்கள் பண்பாடு மொழி முதலிவற்றைக் கொடுத்து அவர்களுடன் கலந்தனர் . கி.மு 1250 இல் பெனகலாஜ்ஜியர்களை அக்கியர்கள் ஆளும் சாதியினராயினர். இந்த
ஐக்கியத்திலிருந்துதான் கிரேக்க நாகரிகம் ஆரம்பமாயிற்று என்பார் வெ. சுhமிநாதசர்மா (கிரிஸ் வாழ்ந்த வரலாறு பக்க 24 29).
இந்நான்கு குழுவினரும் பேசிய மொழிகள் கிரேக்க மொழிகள் என்று அழைக்கப்பட்டன . இந்த நான்கு கிரேக்க மொழிகளும் 24 எழுத்துடன் ஒரே வடிவத்தைத்தான் முதலில் பயன்படுத்தின பின்பு அயோனிக் கிரேக்கம் ஆதிக்கம் செலுத்தி ஏனைய மூன்றையும் பின்னுக்குத் தள்ளியது. என்று கிரேக்க வரலாறுகள் சுட்டுகிண்றன.
மேலும் கிரேக்கத்தில் முதன் முதல் எழுத்து ஹெமரின் காப்பியங்கள் ஐயோனிக் வட்டத்தில் எழுதப்பட்டதால் இக்காப்பியம் ஐயோனிக் காப்பியங்கள் என்று குறிப்பிடும் தன்மையும் இங்கு நினைவு கூரத்தக்கது. செவ்வியல் மொழியான கிரேக்கம் பல வட்டர மொழிகளுக்கும் இடம் கொடுத்தது. கிரேக்க நாகரிகத்தின் நாகரிகத் தேற்றத்தை ஒட்டி கிரேக்கமொழி கிருஸ்து சகாப்தத்திற்கு முன்பே தோன்றி வளர்ந்த தொன்மைத்தன்மையும் இலக்கண பாரம்பரியமுடையது. என வரலாற்றுத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்

கிரேக்க மொழி இயல்புகள் 

                       தமிழ் மொழியைப்போலவே கிரேக்க மொழிக்கும் பல இயல்புகள் உள்ளன அவை நாகரிகம் தோன்றிய தொன்மைக்காலத்தில் உருவானது.
சிறந்த இலக்கண இலக்கிய வளமும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் உடையது.  திருந்திய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது.
திருந்திய மொழிக்குடும்பத்தின் முலமொழி கிரேக்க மொழி ஆகும்
திருந்திய வரிவடிவ அமைப்பு உடையது.
தனித்து இயங்கும் அமைப்பு உடையது
பல வட்டார மொழி வளர்ச்சிக்கு இடமளித்தல்
எண்ணற்ற ஒலிவகைகளைத் தன்னகத்தே உடையது.
கிரேக்க மொழி: கிரேக்க  மொழிக்குடும்பத்தின் எழுத்து முறையை தோற்றுவித்த பெருமையுடையது.

கிரேக்க இலக்கிய பாடுபெருளகள்

                           தமிழ்மொழியானது சங்ககாலத்தில் காதலையும் வீரத்தையும், அடுத்தடுத்த காலங்களில் பக்தி, சமுகதின் பொறுப்புகளை பாடுப்பொருளாக கொண்டிருந்ததை போல் கிரேக்க மொழியும்  உலகப் பொதுமையில் நாட்டம், தற்சார்பின்மை பாராட்டும்; படைப்பாளின் இனம் காட்டாமல் பாடுபொருளில் கவனம் செலுத்துதல், பாடுபொருலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையிலும் வடிவச் செம்மை பாதுகாக்கபடுதல், தனிமனிதரின் இனம் காட்டாது பொது மனித மாதிரிகள் இனம் காட்டுதல், இயற்கை புனைவுகளும் வாழ்வுடன் இயந்த தன்மையுடையதாகச் செவ்வியலில் காணப்படும் கருத்து வெளிபடுத்தும் முறையில் காரண-காரிய இயைபுகள் காணப்படும் இறந்தகால மரபுகளை போற்றும் பண்புடையது. மேலும்
சமுதாயசிந்தனைகளை வெளிபடுத்தும் இயல்புடையது, மரபு வழிப்பட்ட கவிதை நடையை கொண்டதாகவும்,  இன்பம் நோக்கியதகாவும்  தனிபட்ட இலக்கிய யுத்தி கொண்டதாகவும்  செவ்வியல் மரபுக்குட்பட்ட கற்பனை கொண்டதாகவும், சமயம் சாh;ந்த தொன்மக் கதை உருவகத்திற்கு இடமளித்துள்ளது. இது போன்று பல்வேறு இலக்கிய வகமைகளை பாடுப்பொருளாக கொண்டுள்ளது.

கிரேக்க எழுத்துகள் 


                  தமிழர் எவ்வாறு தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழி எழுத்து, சில கிரந்த எழுத்துகளை பயன்படுத்தியுள்ளனரோ அதுப்போல கிரேக்கா;களும்  இருவகையான எழுத்துகள பயன்படுத்தியுள்ளனர். 14 ஆம் நூற்றாண்டில் லிணியா;1 எழுத்து வகையும், சில ஆண்டுகளுக்கு பின் லிணியர்2 என்ற எழுத்து வகையும் பயன்படுத்தினர்

கிரேக்க இலக்கிய பிரிவுகள் 


            தமிழ் இலக்கியத்தை எவ்வாறு பழங்காலம், செவ்வியல் காலம் அல்லது சங்க இலக்கிய காலம், பக்தியிலக்கிய காலம், காப்பிய காலம், சிற்றிலக்கிய காலம் உரைநடை இலக்கிய காலம் அல்லது தற்காலம் எனப்பகுத்துள்ளோமோ அதுப்போல கிரேக்க மொழியில் உள்ள இலக்கியத்தின் காலத்தை பழங்காலம், செவ்வியல் காலம், வெஸ்னிய காலம், இக்காலம் என பகுத்துள்ளன.

              தழிழ் இலக்கியத்தில் பழங்காலம் என்பது தொல்காப்பியத்திற்கு முந்தைய காலமாகும் கிரேக்க மொழியில் கி.மு 5 முதல் கி.மு 4 வரையுள்ள காலம் பழங்காலம் ஆகும். இக்காலத்தில் காப்பியம், உணர்ச்சி பாடல்கள், இரங்கற்பா, நாடகம் தோன்றியது. காப்பியத்தின் தந்தை என்று ஹெமர் அழைக்கபடுகிறார். இவரின் இலியட் ஓடிசி எனும் இரு காப்பியமும் இந்தியாவில் உள்ள மகாபாரதம், இராமயணம் போன்று உலக புகழ்பெற்றது. பழங்காலத்தில் இன்பவியல், துன்பவியல் நாடகங்கள் அதிகமாக தோன்றின. இக்காலகட்டத்தில்
ஹேமர், ஆர்ச்சிலோக்கஸ், பாக்ஸைட், சொலான், சிமோனிட்ஸ் பொன்றவர்கள் குறிப்பிடத்தக்க இலக்கியங்களை உருவாக்கினாh;கள்.

செவ்வியல் காலம்

                   தமிழ் மொழியின் செவ்வியல் காலம் தொல்காப்பியக்காலம் முதல் பக்தி இலக்கிய காலத்திற்கு முன்புவரையாக கருதபடுகிறது. இருப்பினும் சங்ககாலம் தமிழ் மொழியின் செவ்வியல் காலமாகும் தமிழ் மொழி போலவே கிரேக்க மொழியின் செவ்வியல் காலம் கி.மு5 முதல் கி.மு 4 வரையுள்ள காலம்  ஆகும்.
கிரேக்க இலக்கியத்தின் திருப்பு முனை காலமாக இக்காலத்தை; கருதுகின்றனா;.
வரலாற்றின் தந்தை என அழைக்கபடும் ஹெராடோடஸ் இக்காலத்தில்தான் வாழ்ந்துள்ளாh;. துன்பவியல் நாடகம் இக்காலத்தில் அதிகளவில் உருவாக்கப்பட்டன. துன்பவியல் நாடகத்தின் தந்தை என அஸிலஸ் அழைக்கப்படுகிறார்.  கூட்டுணர்ச்சி பாடல்களும் இக்காலத்தில் அதிகம் தோன்றியுள்ளன. கிரேக்க மொழியின் கூட்டுபாடலின் தந்தை என பிண்டர் அழைக்கப்படுகிறார் கூட்டு உணர்சி பாடல்கள் டயோனிஸஸ் கடவுளுக்காக பாடப்பட்டது. மேலும் சிறந்த துன்பவியலின் ஆசான்களாக, சொப்போக்கில்ஸ் மற்றும் யுரிப்பைட்ஸ் அகிய இருவரையும் அழைக்கின்றனர். மேலும் துன்பவியல் நாடகத்தின் முன்னோடிகளாகவும் அழைக்கபடுகின்றனர். ஆரிஸ்டோபென்ஸ் என்பவர் இன்பவியல், துன்பவியல் எனும் இரு  நாடகங்களையும்  உருவாக்கினார் துன்பவியல் பாடல்களை யாட்டுப்பாடல்கள் என்றும்  இன்பவியல் பாடல்களை ஆடுபவர்களின் பாடல் என்றும் அழைக்கின்றனர்.

சிறந்த நாடகவிலார்கள்   

                  தமிழ் மொழியல் பேரகத்தியம் எனும் நூல் இயல், இசை, நாடகம் எனும் மத்தமிழுக்கும் இலக்கணம் கூறியது பல நாடக நூல்கள் தோன்றியுள்ளன. 19 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சங்கரதாஸ் சாவமிகள் தமிழ் நாடகத்தின் தந்தை என அழைக்கபடுகிறார். கிரேக்க மொழியல்  ஆசிலஸ், யுரிபைட்ஸ், செப்பக்கில்ஸ் போன்றவர்கள் சிறந்த நாடகவிலாh;களாக கருதபடுகின்றனா;. ஆசிலஸ் பல போர் நாடகங்கள் பல உருவாக்கியுள்ளார். செப்பக்கில்ஸ் பேர்சியா போரை மையமாக வைத்து பெர்சியஸ் நாடகமாக அரங்கேற்றம் செய்தார். இது போல  பல நாடகங்களை எழுதியுள்ளார். டையோனிசஸ் கோவில் திருவிழாவில் 13 முறை  சிறந்த நாடகங்களை இயற்றி தொடர்ச்சியாக வென்றாh;   காலஸ் எனும் ஊரில் பிறந்தார். 65 வருடங்களாக 125 நாடகங்கள் இயற்றியுள்ளனா;.அவற்றில் 7 நாடகங்கள் மட்டுமே கிடைக்கின்றன.24 முறை டையானிசஸ் திருவிழாவில் வென்றுள்ளார். யுரிப்பைட்ஸ் என்பவர் 92 நாடகங்கள் இயற்றியுள்ளார், அதில் முழுமையாக 19 நூல்கல் கிடைக்கின்றன.
உலகம் போற்றும் கிரேக்க நாயகர்கள்
அறிஞர்கள்- சாக்கரட{ஸ் ,அரிஸ்டாட்டில், பிளட்டோ  எனும் மூவரும் உலக புகழ்பெற்ற அறிஞர்களாக இன்றும் போற்றபடுகின்றனர். காப்பிய பேம்சன்- ஹெமர் அழைக்கபடுகிறார். இந்தியாவின் மாகபாரதம், இராமாயணம் போன்று இலியட், ஒடிசி எனும் இரு நூல்களும் போற்றபடுகிறது. உலகை வென்ற அரசன் மாவீரன் மகா அலெக்சாண்டர் தோன்றிய நாடு, கிரேக்கம் தான். இவ்வாறாக பல சிறப்புகளுக்கு சொந்தகாரர்கள் கிரேக்கர்களே.

நிறைவாக 

                  மிக பழமையான நாகரிகமான கிரேக்கம் பல கூறுகளை தன்னகத்தே கொன்டது. உலகளவில் தணக்கென ஓர் அழியா அடையாளத்தையும், பாரம்பரியத்தையும், வரலாற்றையும் தன்னகத்தே கொன்டுள்ளது. இன்று வரை பிலிப்ஸ் புதல்வனுக்கு இனையாக யாரும் உருவாகவே இல்லை எனலாம். மனம் அழகானதாகயிருந்தால் நாம் காணும் காட்சிகளும் அழகானதாகவே இருக்கும் என்ற அரிஸ்டாடில் தோன்றி வளர்த்த மொழி இந்த கிரேக்கமொழி, இவ்வாறு பல சிறப்புகளைபற்றி கிரேக்க வரலாறுகள் நமக்கு விளக்குகிறது.

துணைநூற் பட்டியல் 

உலகச்செம்மொழிகள். 2011
செம்மொழி தகுதிகள் 2008
கீரிஸ் வாழ்ந்த வரலாறு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக