புதன், 28 ஏப்ரல், 2021

கடையெழு வள்ளல்கள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி



சிறுபாணாற்றுப்படையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் வளம் பற்றியும் கூறியுள்ளனர். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும்  காணலாம்.


தமிழர்தம் உயர்தனி வாழ்வியல் நெறியை அறத்தொடு நிற்றல் எனும் கூற்றில் அடக்கிவிடலாம். அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது  அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும்.


வீரத்தோடு கொடைத் தன்மையும் வாய்க்கப்பெற்றவன் உலகைப் படைத்தவனோடு என்றும் ஒப்பிடப்படுவான் என்பதைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. சங்க காலத்தில் அமரில் வென்று சரித்திரம் படைத்த அரர்சகளின் பெயரே நீரின் சுழியைப்போல் காலவெள்ளத்தில் மறைந்து ஓட, உடைமைப்பொருளை உயிர்களின் பாகுபாடு காணாது கொடையென வழங்கியவர்களின் பெயரானது சிகரத்தின் எழுத்தெனமக்களின் மனதில் பதிந்துள்ளது உடைமை மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் கொடையென வழங்கிய கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், பேகன், நள்ளி இவர்களது கொடைத்தன்மை குறித்த செய்திகளை காணலாம்;.


பேகன் : -


சிறுபாணாற்றுப்படையில் பேகனின் சிறந்த கொடைச்சிறப்பு கூறப்பட்டுள்ளது.

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்ததீறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 

பெருங்கல் நாடன் போகனும்”

(சிறுபாண் - 85 – 87)


“உடாஅ போராவாருதல் அறி;ந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கே”   

(புறம் 141 : 10 - 11)


“மடத்தகை மாமயில் பணிக்குமென்று அருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக”

(புறம் 145 : 1 – 3)


என்ற பாடலடிகளில் பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அவனது மலைநாடு பருவமழை தவறாது பெய்தலால் வளம் மிக்கது. அப்பேகன் மலைவளம் காணச் சென்றபோது, வளம் நிறைந்த அம்மலைச்சாரலில் மயில் ஒன்று அகவியதைக் கேட்டு அது குளிரால் அகவியதெனக் கருதி, அருள் மிகுதியால் அதன் மீது போர்வையைப் போர்த்தினான். இதனை,


“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்” எனும் பாடல் வரி விளக்குகிறது.


இதில் பேகனின் செங்கோன்மைச் சிநப்பு குறிப்பிடப்பட்டுள்ளது காரணம் பேகனின் ஆட்சி மழை போல, காலம் மாறி பெய்யாது என்றும், அவனின் ஆட்சி என்றும் மாறாமல் இருக்கும் செங்கோல ஆட்சி என்றும் பேகனின் ஆட்சி சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காட்டிலுள்ள மயில் அகவியதைக் கேட்டவுடன் அது குளிரினால் தான் வருந்தியது என்று நினைத்துத் தனது போர்வையை அதற்கு ஈந்தான் பேகன்.


மயில் போர்வையைப் பயன்படுத்தி கொள்ளுமா? கொள்ளாதா? என சிறுpதும் நினையாமல், அருள் உணர்ச்சி பெருகி அஃறினை உயிருக்கு அவன் செய்த செய்கை சான்றோர்கள் கொடை மடம் என்று போற்றிக்கூறுகின்றனர்.


பாரி : -


சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்

முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”. 

(புறம் 20)


“பாரி பாரி என்று பல ஏந்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”

(புறம் 107)


“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய

பிறக்கு வெள் அருவி விழும் சாரல்

பிறமம்பின் கோமான் பாரியும்”

(சீறு – 89 - 91)


இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.


காரி : -


“வால் உளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

(சிறுபாண் - 92 - 95)


இப்பாடலில் இவ்வள்ளலைப் பற்றிய செய்தி புதிரையுடன் நாட்டைக் கொடையாகத் தந்தோன் என்றும் கூறுவர்.


“கடல் கொளப் படாது உடலுநர் ஊக்கார்

சுழல்புனை திருந்தடிக் காரி நின்னாடே”

புறம் 122 (அடி 1 – 3)


“மூவருள் ஒருவன் துப்பாகியர் என

ஏத்தினர் தருஉங் கூழே”

(புறம் 122, அடி 5 – 6)


இப்பாடலில் திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன். இவன் தனது குதிரையையும், தன் நாடடையும் அனைவரும் வியக்கும் வண்ணம் இரவலருக்குக் கொடையாக வழங்கினான் என்று சிறுபாணன் கூறுகின்றான்.


மணியையும், தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு, அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர்கேட்டு வியக்குமாறு இரவலர்க்கும் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடையவன் காரி.


உலகத்துச் சான்றோர் வியக்கும்படி கொடை அளித்த காரியின் சிறப்பும், இரவலரிடத்து இனிமையாகப் பேசும் அவனின் குணநலச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.


ஆய் : - வேள்ஆய் (அ) ஆய் அண்டிரன் :


பொதிகை மலைச்சாரலில் உள்ள ஆய் குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஆய், இவ்வள்ளலை, வேள்ஆய், ஆய் அண்டிரன் என்றும் வழங்குவர். இவனுடைய கொடைச்சிறப்பையும், வீரச் சிறப்பையும் சங்க கால நல்லிசைப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆய் தனக்கு இறைவன்பால் இருந்த அன்பை.


“………………நிழல்திகழ்

நீல நாகம் நல்கிய கலிங்கம்

ஆலமலர் செல்வற் காமர்ந்தனன் கொடுத்த”

(சிறுபாண் - 98 -100)


இப்பாடலில் ஒளிமிக்க நீல மணியினையும், நாகம் நல்கிய கலிங்கத்தையும் பெற்றிருந்த ஆய், இறைவனிடம் தனக்கிருந்த பேரன்பால் அவற்றை அவ்விறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இதில் ஆய்யின் பற்றற்ற கொடைத்தன்மை சுட்டப்பட்டுள்ளது. ஆய்அண்பிரன் தன்னிடம் வரும் இரவலர்களிடம் ஆர்வமிக்க மொழிகளைப் பேசும் இயல்பினை உடையவன். “ஆல்ஃஅமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த” இவ்வாயின் மூலம் ஆய்யின் சிறந்த கொடைத் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.




அதியமான் : -



அதிகன் பெரிய மலையில் மலர்கள் மணம் கமழும் மலைச்சரிவில் அழகுடன் விளங்கும் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து, அமிழ்தின் தன்மையைக் கொண்ட அவ்வினிய கனியைத் தான் உண்டு நீண்ட நாள்வாழ விரும்பாமல் ஒளவைக்கும் கொடுத்து உண்ணச்செய்தான், தன் வாழ்நாளை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற சிறப்பினை சிறுபாணாற்றுப்பரட விளக்குகிறது.


அதியர் குடியில் தோன்றி தன்னுடைய வள்ளல் தன்மையால் சங்க நூல்களில் என்றும் அழியாத இடம் பெற்றவன் அதியமான், அதியமானின் கொடைச் சிறப்பை சிறுபாணாற்றுப்படை,


“கமழ் பூஞசாரல் கவினிய நெல்லி

அமிழ்து வளை நீம் கனி ஒளவைக்கு ஈந்த

(சிறு – 100 – 103)


இவ்வாறு விளக்குகின்றது.


இதில் அதியமானின் களங்கமில்லா கொடைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை உண்டால் நரை, திர, மூப்பு இன்றி நீண்ட நாள் உடலுறுதி பெற்று வாழலாம் எனும் செய்தியைச் சான்றோர் மூலம் அறிந்த அதியமான் அதை தான் உண்ணாமல், எந்நாளும் தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவராகிய ஒளவையிடம் கொடுத்தான். இத்தகைய சிறப்புடைய நெல்லிக்கனியை பெற்ற ஒளவை அதியமானின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து போற்றிப் பாடினர். இதில் புலவர்களின் மீது அதியமான் கொண்டுள்ள மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.


நள்ளி : -


கேட்கக் கொடுப்பார் சிலர் கேட்டும் மறுப்பார் பலர், கேட்கும் முன்னரே அவர்தம் குறிப்பறிந்து உள்ளம் குளிரவாரி வழங்குபவன் ஒருவனே அவனே வள்ளல் நள்ளி என்பதைச் சிறுபாணாற்றுப்பi;யில்,


“நட்ஆடார் உவப்ப நடைப்பரிகாரம்

முட்டாது கொடுத்த”………….

(சிறுபாண் 104 – 105)


தன்னை நாடி வந்த வறியவர்களது குறிப்பறிந்து அவர்கள் கேட்டும் முன்னரே அவர்தம் மனம்மகிழ அவர் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்களை வாரி வழங்கியவன் வள்ளல் பெருந்தகை நள்ளி என்பதை ஆசிரியர் நல்லூர் நத்தத்hனார் கூறியுள்ளார். நள்ளிமலை வளஞ்செறிந்த கண்பீர நாடடைச் சேர்;ந்தவன் நள்ளி. சிறுபாணாற்றுப்படையில் நள்ளியின் ‘அறங்கொடை’ சிறுப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


“முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை

துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு

நளிமழை நாடன் நள்ளியும்”

(சிறுபாண் - 105 -107)


இப்பாடலில் தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அவர்களின் இல்லறத்திற்குத் தேவையான பொருட்களைக் குறிப்பறிந்து வழங்கியவனும் தன்னிடம் பொருள் பெற்றுவிட்டு பின் வேறொருவரிடம் சென்று இரவாதவாறு நிரம்பப் பொருள் கொடுக்கும் இயல்பினை உடையவன் நள்ளி.


தன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது வழக்கிய நள்ளியின் வள்ளல் தன்மையை சான்றோர்கள் அறக்கொடை என்று போற்றுகின்றனர்.


ஓரி : -


கொல்லி மலையின் காவலனாய் வீரத்தின் தலைமகனாய் ஈகையின் தவமாய் அவதரித்தவன் வல்வில் ஓரி, வீரத்திற்குச் சான்றோய் ஒரே அம்மைக் கொண்டு ஏழு விலங்குகளை வீழ்த்தியவன் கொல்லியின் அரசன் ஓரி.


வீரத்திற்கு மட்டுமின்றி கருணை ஈரத்திற்கும் வித்தானவன் வள்ளல்  ஓரி, ஓரியின் கருணை, அன்பு, அவனது அம்பென ஏழு பிறவிக்குமான வறுமையை அணடாது விலக்கும் என்பதை நத்தத்தனார்  சிறுபாணாற்றுப்படையில் பின்வருமாறு


“நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த

சிறுபாண் - (108 – 109)


இப்பாடலில் கடையயேழு வள்ளல்களில் ஒருவனான ஓரி பரிசில் பெற வருபவர்களுக்குப் பொன், பொருள் மட்டுமின்றி, நறிய பூக்கள் மிக்க சுரபுனைகளையும், குறும்பொறைகளையும் உடைய நல்ல நாடுகளையே பரிசிலாகக் கொடுத்தான் என்பதைச் சிறுபாணாற்றுப்படையின் வழி அறியலாகிறது.


பூக்கள் நிறைந்த சுரர்ன்னைகளையும், குறிய மலைகளையும் உடைய நல்லநாடுகளைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவன் ஓரி, இதில் ஓரியின் இரக்கக் குணம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்மை நாடி வந்தவர்கள் எந்நாளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக நல்ல நாடுகளையும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான். இதில் ஓரியின் சிறந்த கொடைத் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை

எழுசமம் கடந்த ஏழு உறழ்திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

(சிறுபாண் - 112 – 113)


இப்பாடலில் பேகன் முதலிய தமிழ் வள்ளல்கள் ஏழு பேர் நடத்திய ஈகைத் (கொடை) தன்மையை நல்லியக்கோடனின் வள்ளல் சிறப்பும் கொடைச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாக பலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் புறப்பாடல்களின் சிறப்புத்தன்மையாக வீரத்தையும், கொடையையும் கூறலாம். அவற்றுள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அரசர்களின், வள்ளல்களின் கொடைச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றன.


அவற்றுள் சிறுபாணாற்றுப்படை கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்பையும் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பையும் எடுத்துரைக்கின்றன. கடையேழு வள்ளல்கள் உலக மக்களிடம் மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டியுள்ளனர். இவர்களது கொடைத்தன்மையைச் சான்றோர்கள் மடக்கொடை, அறக்கொடை என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். இவர்களுடைய இயல்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவனாக நல்லியக்கோடனைச் சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது.


நல்லியக்கோடனின் சிறப்புகள் : -


கடையேழு வள்ளல்களுக்குப் பின் தான் ஒருவனே வள்ளன்மையில் அவர்களுக்கும் சமமாக விளங்கிப் பெரும்புகழ் பெற்றவன், பரிசிலர் விரும்பும் பிண்பு நலம் உடையவன், இசை, நாடகம் முதலிய நுண்கலைகளில் ஆர்வம் மிக்கவன், நல்லியக்கோடன் ஒப்புயர்வற்ற பெருவீரனாக விளங்கினான். கடையேழு வள்ளல்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. நல்லியக்கோடன் கடையேழு வள்ளல்களைப் போல் கொடுக்கும் பண்பினன் என்பதுவும் தெளிவாகிறது.


பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி, ஆகிய கடையேழு வள்ளல்களுக்குப் பின் நல்லி என்பவன் தன்னை நாடி வருபவர்களுக்குக் கொடுத்தளிப்பவனாக இருந்தான்; பல்வேறு இசைக்கருவிகளை உடைய கூத்தரைக்காத்தலில் வல்லவனும் ஆகிய சிறந்த புகழை உடையவன் நல்லியக்கோடன். யானைகளைச் செலுத்துதலால் உண்டாகிய தழும்பு பொருந்திய வீரக்கூடில் அமையும் கால்களையும் பெண் யானைக் கூட்டத்தைப் பலர்க்கும் வழங்கும் மழை போன்ற பெரிய கைகளையும் உடையவன்.


“எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

(சிறுபாண் 111 – 115)


என்ற வரிகள்மூலம் நல்லியக்கோடனின் ஈகைத் திறத்தை அறிந்து கொள்ளலாம். வருகின்ற போரில் பகைவரை வென்ற எழுவினை ஒத்த வலிய தோள்களையுடைய கடையெழு வள்ளல்கள் அக்காலத்தில் சுமந்த ஈகையாகிய நல்ல (பாரம்) பாரத்தை இக்காலத்தில் கடலை எல்லையதகக் கொண்ட உலகமெல்லாம் விளக்கும்படி தான் ஒருவனாகவே தாங்கும் வலிய முயற்சியை உடையவன் நல்லியக்கோடன் என்பது தெளிவாகிறது.


நல்ல பெருமை வாய்ந்த மாவிலங்கையை ஆணட அரசர் பலருள்ளும் குற்றம் இல்லாத வாய்த்த வாளினையும் புலிபோலும் வலியினையும் உடைய ஒவியர் குடியில் பிறந்தவன் நல்லியக்கோடன்.


வள்ளல் தன்மை கொண்டு விளங்குபவர் புகழ் இவ்வுலகில் அடங்காத சிறப்பினை உடையது. உலகம் தன் கொடையால் விளங்குமாறு தான் ஒருவனாகவே நின்று வழங்கினான். மாவிலங்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் பலர். அவர்களுள் மிகச் சிறந்தவன் நல்லியக்கோடன் என்பவன் ஆவான். நல்லியக்கோடன் ஒவியர் குடியில் பிறந்து ஈண்டமையின் ஒவியர் மாநாடு என வழங்கிய பெயரே ஓய்மானாடு என மருவி வழங்கியது எனலாம்.


“நன்மா இலங்கை மன்ன ருள்ளும்

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்

(சிறு – 120 – 124)


இப்பாடலில் பலவகை இசைக் கருவிகளை இசைத்து அந்த இசைக்கு ஏற்ப ஆடும் கூத்தர், பல இயம் - பல்லியம், கோடியர் - கூத்தர், புரவலன் - (காய்வதன்) இதன் 5லம் இசை, நாடகக் கலைகளில் நல்லியக்கோடான் முத்தமிழ்க் காவலனாக விளங்கினான் மழை போலக் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் கையை உடையவன்.


கண்களால் காண்பதற்கு விரும்பிய கோட்பாட்டோடு உயர்ந்த குடியில் பிறந்தவன். அவன் தந்தையினுடைய வானளாவிய மலையின் வளத்தையும் பாடிச்சில நாள்களுக்கு முன் நாங்கள் சென்றிருந்தோம். அப்பொழுது வேண்டியதை வழங்கினான் என்பதைப் பாணர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.


விழிக்காத கண்களை உடையதும் சாய்ந்த காதுகளையுடையதுமான நாய்க் குட்டிகள் கறக்கப் பெறாது பால்முலையைப் பற்றி இழுத்துப் பால் உண்ணுதலைத் தன்பசி மெலிவால் தாங்க இயலாது குரைத்தலைச் செய்யும். பாணனின் வீட்டு அடுக்களையில் ஈரமான புழுதியில் உள் துளையுள்ள காளான் பூத்துக் கிடந்து பொலிவு இல்லாமல் இருக்கிறதாம்.


மேலும் பசியினால் வருந்திய ஒடுங்கிய நுண்ணிய இடையினையும் வளையல் அணிந்த கைகளையும் உடைய துணைகொட்டுவொனுடைய மனைவி தன் கைகளால் குப்பையில் கிடந்த கீரையை உப்பு இல்லாமல் வேக வைத்து அதனை மற்றவர்கள் பார்த்தால் (ஏளனம்) செய்வார்கள் என்று எண்ணி தலைவசாலை மூடி பசியால் வருந்தும் தன் பெரிய சுற்றத்தடன் இருந்து முழவதும் உண்ணும் அறிவு முதலியன அழிவதற்குக் காரணமான பசியினால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்படி மதம் பொலியும் அஞ்சாமையாகிய கொள்கையும் சிறிய கண்கணையும் உடைய யானையோடு பெரிய தேரையும் பரிசாகப் பெற்று நாங்கள் இப்போது அவ்விடத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று பாணன் கூறினான்.


பரிசு பெற்றவரும் பாணன் நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன் இருந்த தன் வறுமை நிலையைக் கூறி அவனைக் கண்டதும் நீங்கியது என்பதைப் பரிசு பெற விரும்பி வரும் சிறுபாணனுக்குக் கூறுகிறான்;


“கறவாப் பாலமுலை கவர்தல நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் சுட்டில்

………………………..

………………………..

……………………….

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி

யாமவன நின்றும் வருதும் நீயிரும்

இவண் நயந் திருந்த இருப்பேர் ஒக்கல்

செம்மல் உள்ளமோ செல்குவீராயின்”

(சிறு 131 – 145)


இப்பாடலில் பாணனுக்கு எனப் பரிசு பெற்றவரும் பாணன் மற்றொரு பாணனுக்கு ஆற்றுப்படுத்துகிறது.


மலைநாட்டுத் தலைவனும் புகழ் நிலைத்தற்கு காரணமான குணங்களை, உடையவனுமாகிய நல்லியக்கோடனை நறந்நு அவன் ஊருக்குச் செல்வீராக. அவ்வாறு நீங்கள் சென்றால் அவனுடைய அணை;மனையின் வாசலை அடைவது எளிதாகும் பிறர் எவரும் எளிதில் செல்ல முடியாது. ஆனால் பொருநர்,புலவர், வேதம்ஓதி, பழகிய அந்தணர்களுக்கும் எப்போதும் அடைக்கப்படாதது அவனுடைய வாயில் கதவுகள் என்பதை,


“அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

கடவுள் மால்வரை கண்விடுத்தன்ன

அடைய வாயிலவன் இருங்கடை குறுகி”

(சிறுபாண் 203 – 205)


எனக் குறிப்பிடுகிறார்.


எல்லோருக்கும் கொடுத்தளிக்கும் அந்த வள்ளல் உங்களுக்கு ஆடை வழங்குவான் பின்பு மதுவினை (கள்) அள்ப்பான் நீங்கள் உண்பதற்கு நல்ல உணவு அளிப்பான் அவனே அருகில் இருந்து உங்களுக்குப் பரிமாறுவான்.


உங்கள் பசி குறைந்த பின் மற்ற பகை நாட்டு மன்னர்களிடம் போரினால் பெற்ற பொருள்களை உங்களுக்கு வழங்குவான். அதோடு மட்டும் இல்லாமல் பெரிய அழகிய தேரினை உங்களுக்கு வழங்குவான் என்று ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துகின்றன. நல்லியக்கோடனின் சிறந்த வள்ளன்மைக் குணம் கொண்டவனாகவும், தன்னை நாடி வரக்கூடியவர்களுக்கு கொடுக்கும் கொடை பண்பினை உடையவனாகவும் சிறந்த விளங்கினான் என்பது தெளிவாகிறது.


முடிவுரை

நமது வரலாற்றில் முதல்,இடை, கடையேழு வள்ளல்கள் வாழ்ந்துள்ளனர்: அந்த வகை கடை சங்க காலத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்கள் யார் என்றும், அவர் தம் கொடைத்திறன்குறித்தும் இலக்கிய பதிவுகளின் வழி விரிவாக அறியமுடிகின்றன. பொதுநலனாக வாழ்வதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்கின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக