புதன், 28 ஏப்ரல், 2021

சிலப்பதிகாரத்தில் பரத்தையர் நிலை

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் 

உருவமற்ற காமனின் பெரும்படையினராகிய இளம் பெண்கள் தமது கண் அம்புகளால் இளைய ஆடவர்களுக்கு எதிராய் போர் தொகுத்து வென்று அவர்கள் புறமுதுகிட்டு ஓடாதபடிக்கு அவர்களைத் தடுத்துத் தம்மிடத்தில் மயக்கச் செய்து, தமது மார்பிலும் தோளிலும் எழுதிய தொய்யில் வரிப் புனைவுகளையெல்லாம் அவர்கள் தம் உடலில் அழுந்துமாறு பதிவு செய்து அவர்களைளப் புதிய கோலத்தோடும் தளர்ந்த நடையோடும் அவர்களைத் தம் இல்லத்திற்கு அனுப்பிவைத்;தார்கள்  பரத்தைகளோ. அவ்வாறு கலந்து இன்பம் துய்த்து வந்த ஆடவர்களை வடமீன் போன்ற கற்பினை உடைய அவர்கள்தம் கற்புடைய மனைவியர் கோபங்கொண்டு ஊடல் கொண்டனர்.  

ஆவ்வேளையில் அவர்கள் வீட்டிற்க்கு விருந்தினர் சிலர் வந்திருந்தார்கள் அதுபோன்று விருந்தினர் வந்துள்ள நிலையிலும் கோபத்தால் சிவந்த குவளை மலர் போன்ற அவர்களின் கண்களிலிருந்து செம்மை மாறவில்லை.  ஆதனால் இருந்த வருத்தமும் கோபமும் தீர மாபெரும் நிலவுலகில் மருந்து ஏதும் இல்லையா? ஏன்று கூறிச் செயலற்று நடுங்கி நின்றார்கள் என்றச் செய்தியினை (சிலம்பு வரிகள் 224-234) குறிப்பிடுகிறது.

“உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த

வடமீன் கற்பின் மனையுறை மகளிர்”

என்றுரைக்கிறார் இளங்கோவடிகள்.

ஆகப்பாடல்களில் காட்டும் திருமணத்தால் புணர்ச்சிச் சுதந்திரம் பெண்களிடமிருந்து பறிக்கப்படுகின்றதே தவிர ஆண்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை.  திருமணச் சடங்கின் போது கூட

“கற்பின் வழாஅ நற்பல உதவி

பேற்றோர் பெட்கும் பிணையை அகுக”  (அகம் - 86)

ஏனப் பெண்ணுக்குத்தான் கற்பு வழுவாநிலை வற்புறுத்தப்பபடுகிறதேயன்றி ஆணுக்கன்று

“தமர் நமக்கீந்த தலைநாள் இரவின்

ஊவர் நீங்க கற்பின்எம் உயிருடம்பு”  (அகம் - 136)

ஏன்ற பாடல்வரின் மூலம் தலைவி என்பவள் வெறுப்பு நீங்கிய கற்பினையுடையவள் என்கின்றனர்.

பேண்ணிடம் மட்டும் எதிர்ப்பார்க்கப்படும் இப்பண்பு குறித்து பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவனை அவன் மனைவி கடிந்து கொள்ளும் நேரத்தில் அவள் பேசுவதிலிருந்தும் அறிய முடிகிறது.  புரத்தையிடம் போய் வந்த கணவன் மனைவியை நோக்கி “மாசில் கற்பின் புதல்வன் தாயே” என விளிக்கிறாள்.  அவளே நீ இவ்வாறு பொய்மொழி கூறி எனது முதுமையைக் குறித்து ஏளனம் செய்யாதே என்கிறாள்.

பேண்ணிற்குக் கொடுக்கக்கூடிய உயர்ந்த அடைமொழியான “குற்றமற்ற கற்பினையுடைய என்புதல்வன் தாயே”; தன் மனைவியை மதியாது பரத்தையிடம் சென்று வந்த கணவனின் கூற்றாக அமைவது அக்காலத்தில் பெண்களிடம் எதிர்பார்க்கப்பட்ட பொறையைத்தான்.


“கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் 

துறைகேழ் ஊரன் கொடுமைம நாணி 

நுல்லவன் என்னும் யாமே

ஆல்லன் என்னும் என்தடமென்தோளே”

இதனுள் “நீர் நிலைகளில் கரைகளில் இருக்கும் இழிந்த பேய்க்கரும்பு உயர்ந்த கரும்பு போலவே பூக்கின்ற துறைகளை உடைய ஊரினைச சார்ந்தவனே.

ஆஅப்பேய்க் கரும்பின் தன்மையைப் போலது பரத்தையின பண்பை நீ விரும்பி அவருடன் ஊடல் கொள்வது.  ஊயர்ந்த கரும்பினை போன்றவன் எமது தலைவியின் பண்பு நலன்களாகும்.  (ஐங்குறு - 12)


“ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்துப் 

பொருகளிறு மிதித்த நெரிதான் வேங்கை 

குறவர் மகளிர் கூந்தாற் பெய்ம்மார்

நுpன்றுகொய மலரும் நாடனொடு 

ஓன்றேன் தோழி ஒன்றிசினானே.”

யுhனையால் மிதிப்பட்டு காயும் வேங்கைப் பூக்களைக குரவர் நாடன் நநின்று மரத்திலிருந்த பறிக்கும் தன்மை இழுப்பட்ட போனது.  அது போல பரத்தையின் பண்பை நாடிச் சென்ற தலைவனின் செய்கையால் ஊரார் தூற்றும் அலரால் தலைவியின் மனமானத மிதிப்பட்டு பேனாது என்கிறார்.  (குறுந்தொகை– 208)

“வண்ண வொண்தாழை நுடங்க வாலிழை

ஓண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் 

குண்ணுறுங் குவளை நாறித் 

துண்ணென் றிசினே பெருந்துறைப் புனைவே”

துலைவி புனாலடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனல் எண்ணென்றது என்பதினை இச்செய்திக் குறிப்பிடுகிறது.  (ஐங்குறு– 73)

இதன் மூலம் பரத்தையின் செயல்களில் ஒழுக்கம் சிறப்புற்று இல்லை தலைவியே சிறந்தவள் என தோழி எடுத்துரைக்கிறாள்.


“பரத்தை மறுத்தல் வேண்டியும் கிளவி 

முடத்தகு கிழமை உடைமை யானும் 

ஆன்பிலை கொடிய என்றாலும் உரியள்.”

துலைவன் தலைவியை நீங்கிப் பரத்தையின் பால் நாட முற்படும் போது தலைவனை நோக்கிப் பரத்தையின் பால் செல்லுதலை மறுத்த வகையில் அன்பில்லாமல் கொடியவன் என்று தோழி தலைவனைக் கூறியதாகும்.  (தொல் - 156)

துலைவன் பரத்தையரை நாடிச சென்றப் பிறகும் அவனை தக்கவாறு ஃஆற்றுப்படுத்தி அவனை நல்வழியில் கொண்டு வருவது தலைவிக்கே உரியதாகும் என்கின்றனர்.


“தாய்போல் கழறித் தழீஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப

கவலொடு மயங்கிய காலை யான.  (தொல் - 171)

தலைவன் பரத்தையரை புனலாடிய பிறகு தலைவியிடம் வருகிறார்.  இச்செய்தியினை அறிந்த தலைவி தலைவனுக்கு வாயில் மறுக்கிறார்.


“பங்கயப் பூம்புன னாடன் பராங்குசன் பாழியொன்னார்

முங்கையர்க் கல்லல்கண் டான்மணி நீர்வையை லார்துறைவா

வேங்கையைத் தீம்புன லாட்டிய வீரம் புலர்த்திவந்து 

முங்கையிற் சீரடி தீண்டிச் செய்யீர் செய்யு மாரருளே”  (இறை. ஆக – 282)

தலைவனே நீ உன் காதலியாகிய காதல் பரத்தையுடன் நீரில் நெருநல் உற்று புனலாட்டிய ஈரம் இன்னும் உலரவில்லை எமக்கு இச்செய்தி அறியாத வண்ணம்; எம்முடன் இணைய வந்துள்ளாய் என தலைவனை சினம் கொண்டு தலைவி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்.

இச்செய்திகளின்  மூலம் சங்க காலத்தில் இருந்த பரத்தையின் நிலைப்பாட்டினை எடுத்துரைக்கின்றன.


ஐமஎழில் உண்கண் மடந்மையொடு வையை 

ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,

புரத்தை ஆயம் துரப்பவும், ஒல்லாது 

குவ்வை ஆகின்றால், பெரிதே காண்தகத்

தோல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,


கரும்புஅமல் படப்பை, பெரும்பெயர்க் கள்ளுர்த்,

திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய 

அறினிலாளன்,‘அறியேன்’ என்ற 

திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,

முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி.  (அகம்; -256)


 அழகு விளங்கத் தொன்மையான பூக்கள் நிரம்பிய வயல்களையும், கரும்பு நிறைந்த கழனிகளையும் உடைய சிறப்புமிக்க ஊர் கள்ளுர் அங்கு அழகிய நெற்றியையுடைய இளையவன் ஒருத்தியின் அழகிய நலத்தினைக் களவிலே உண்டவன் ஒருவன்பின் அவளைக் கைவிட்டான் அத்தோடு மட்டுமல்லாது அந்த ஒழுக்கமிலான் “இவளை யான் பார்த்தும் அறியேன்” என்று  நீதியில்லாத கொடிய சூளினையும் ஊர் மன்றத்திலே உரைத்தான் அவையத்தார் சாட்சிகளை வினவி அவன் பொய்யன் என்பதை நன்கு உணர்ந்தான்  தளிர் அடர்ந்த பெருமரத்தின் கிளையில் அவனை இறுகக் கட்டிவைத்து அவன் தலையில் தண்ணீர் ஊற்றித் தீர்ப்பு வழங்கினர் இது இவர்களின் ஒழுக்கக் கோட்பாட்டின் மீறலினை எடுத்துரைக்கிறது.  (அகம் - 256)


“பெருநீர் வையை அவளொடு வூடி,

புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்

குரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் 

புல்மீன் கொள்பவர் முகந்த இப்பி 

நூர்வுரி நறவின் மகிழிநொடைக் கூட்டும்”


“பேர்இசைக் கொற்கைப் பொருநன், வென்வேல்

கடும்பகட்டு மானை நெடுந்தேர்ச் செழியன்,

மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய

மலிதரு கம்பலை போல,

அலர்வூ கின்று, அது பலர்வாய்ப் பட்டே.

தலைவனே நேற்றைய தினம் நீ கூடக்காஞ்சி மரத்;தின் மகரந்தப் பொடியைத் தன் கூந்தலில் அணிந்த செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களை உடைய பரத்தையோடு சோலையி;ல் விளையாடினாய்.  அதோடு பெருகி வரும்.  ஐவகை பேராற்றில் நீர் விளையாட்டு நிகழ்த்தினாய்.  அவளோடு நீ இணையும் போது பூசிக் கொண்ட சந்தனம் இன்னும் உலர்ந்த தன்மையில் இருந்து மாறவில்லை இந்த கோலத்தோட நீ இங்கு வந்து நிற்கிறாய் இச்செயலை எங்களிடம் நீ மறைக்க முயல்கிறத அது முடியாது.

புhண்டியன் நெடுஞ்செழியன் தனது துறைமுகமான கொற்கை துறைமுகத்தில் இருந்துபரதவர் மீனுக்கு அலையினைப் போடுவர் அவ்வேளையில் முத்து சிற்பிகளும் அகப்படும்.  ஆத்தகைய நேரடியான கள்ளுக் கடைக்குச் சென்று விலையாகக் கொடுப்பர்.  

ஆத்தகைய செல்வம் நிறைந்த துறைமுகத்தைக் கொண்டிருக்கும் நெடுஞ்செழியன்.  அவனது போர்படையாக பெரிய யானைகளையும் எயர்ந்த தேர்ப்படைகளையும் கொண்டு இருப்பர்.  இவர் பகைவர் நாட்டுடன் போர்புரிந்து வெற்றிப் பெற்று அப்போது எடுப்பப்பட்ட ஆரவார பேரொலியைக் காட்டிலும் நீ பரத்தையை நாடிச்சென்று அவளுடன் இணைந்து விளையாடியச் செய்தி ஊர் முழுவதும் பல ஆரவார செய்திகளை ஏற்படுத்தியுள்ளது.  

இச்செய்தியானது தலைவிக்கு மிகவும் துன்பத்தையும் மன உடைச்சலையும் தரும் விதத்தில் நீ அவளை ஆட்படுத்தி உள்ளாய் இக்காரணங்களால் தலைவி உனக்கு வாயில் மறுக்கிறாள் என தோழி எடுத்துரைக்கிறார்.  (அகம் - 296)


“பரத்தமை  தாங்கலோ இவன் என வறிதுநீ

புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை

அது புலந்து உறைதல் வல்லியோரே

செய்யோள் நீங்க சில்பதம் கொழித்து 

தாம் அட்டு உண்டு தமியர் ஆகி 

தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப

வைகுநர் ஆகுறல் அறிந்தும்

அறியார் அம்ம அஃது உடலுமோரே!”

மீன்கள் இயங்கும் நீர்நிறைந்த பொய்கையில் ஆம்பல் மலரை முறுக்குண்ட கொம்புகளுடன் மேய்ந்த எருமைக்கடா சகதியில் கிடந்து இரவெல்லாம் தூங்கியது.  குத்தகைய பண்பினைக் கொண்டவன் தலைவன் இருப்பினும் பரத்தையரை நாடிச் செல்லும் தலைவனைத் தலைவி கண்டிக்கக் கூடாது.  ஆப்படிக் கண்டித்தால் என்ன நேரும் என்பதை ஒரு தோழி தலைவனிடம் எச்சரிக்கிறாள்.  துலைவன் நிரந்தரமாகத் தலைவியை விட்டுப்பிரிய தலைவி தம்மிடமிருந்து சிறிதளவு வரிசியைப் புடைத்துத் தாமே சமைத்துண்டு தனியாளாய் ஆகிமெலிந்து வருந்தும் நிலை ஏற்படும்.  ஆப்போது தேன்போலும் இனிய மொழியினையுடைய குழந்தைகள் பால் இன்றி வற்றிய முலையினைச் சுவைத்துப் பார்த்து ஏக்கம் கொள்வர் என கூறிகின்றனர்.  (அகம் - 316)


“மதிஏர் ஒள்ஙதல் வயங்குஇழை ஒருத்தி

ஆகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த 

ஆய்இதழ் மழைக்கண் நோய்உற நோக்கித்,

துண்நறுங் கமழ்தார் பரீஇயினன், நும்யொடு

ஊடினள் - சிறுதுணி செய்துஎம்

முணல்மலி மறுகன் இறந்திசி னோனே.”

மதிபோன்ற ஒளிபொருந்திய நெற்றியையும் அணிகலன் களையும் உடைய உனக்குரிய பரத்தை, உன்னை இகழ்ந்து சொல்லி , இதழ் போன்று குளிர்ந்த கண்ணால் வருத்தம் தோன்றப் பார்த்து உன் மார்பில் அணிந்த மாலையை அறுத்து உன்னோடு ஊடல் கொண்டு சண்டையிட்ட எமது மணல் நிறைந்த வீதியின் வழி சென்றால் அல்லவா? இது தான் உம்முடைய தலைமைப் பண்போ? ஏம்மைப் போற்றாது அகன்றது நீ செல்க.  (அகம்-306)


“ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்,

பேர் அமர் மழைக்கண் பெருந்தோள் சிறுநுதல்,

நுல்லள் அம்ம, குறுமகள் - செல்வர்

கடுந்தேர் குழித்த ஞௌ;ளல் ஆங்கண்,

நெடுங்கொடி நுடங்கும் மட்ட வாயில்,


“இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன,

நுலம்பா ராட்டி நடைஎழில் பொலிந்து,

வுpழவில் செலீஇயர் வேண்டும் - வென்வேல் 

இழைஅணி யானைச் சோழர் மறவன்.”

அழகு பெற்ற தேமலையும், குளிர்ச்சிப் பொருந்திய கண்களையும், சிறிய நெற்றியையும், பெரிய தோளையும், உடைய இளைய பரத்தை அழகில் சிறந்தவள்.  வேற்றி தரும் வேலினையும், அணிபூண்ட யானைகளையும், உடைய சோழ மன்னனின் படைத்தலைவனும் ஒடக்கோலால் அளந்தறிய முடியாத, காவிரியினைச் சார்ந்த தோட்டங்களையும், மதகுகளையும் உடைய போர் என்னும் ஊரின் தலைவனாகிய பழையன் என்பவன்.   புபைவர் மீது செலுத்திய வேல் தப்பாது போல, அப்பரத்தையால் பார்க்கப் பெற்ற ஆடவர் எவரும் தப்பமாட்டார்.  (அகம் - 326)

“நரைமூ தாளர் கைபிணி விடுத்து

நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் 

பொலன்பூண் எல்வி நீழல் அன்ன,

நலம்பெறு பணைத்தோள் நல்நுதல் அரிவையொடு,


மணம்கமழ் தண்பொழில். ஆல்கி, நெருநை

நீதற் பிழைத்தமை அறிந்து

கலழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.

மருத நிலத்தைச் சேர்ந்த முதியவர் சண்டை செய்கின்றவர்களின் கைகளைப் பிடித்து விலக்கி கள்ளின் தெளிவைப் பரதவர்க்கு அளித்து அவரை அமைதிப் படுத்தினார்.  போன் அணிகள் அணிந்த எவ்வி என்பவனது நீழல் என்னும் வளமான ஊரினைப் போன்ற அழகுடைய மூங்கில் போன்ற தோரும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையுடன் மணம் கமழும் சோலையில் தங்கி நேற்று நீ செய்ததை உணர்ந்து எம் தெய்வக் கற்பினாவாகிய தலைவி அழுத கண்ணுடன் உள்ளாள்.  இது முறையாகுமா?  (அகம் - 366)


அடிக்குறிப்புகள்

1. திருக்குறள் பக்-234 குறள் எண் - 1141, 1145, 1147

2. சிலப்பதிகாரம் பக்-50 பாடல் வரிகள் - 224-234

3. அகநானூறு பக்-114 பாடல் - 86, 136

4. ஐங்குறுநூறு பக்-34 பாடல் - 12

5. குறுநதொகை பக்-249 பாடல் - 208

6. ஐங்குறுநூறு பக்-101 பாடல் - 73

7. தோல்காப்பியம் பக்-202 பாடல் - 282

8. மேலது பக்-210 பாடல் - 171


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக