புதன், 28 ஏப்ரல், 2021

சிறுபாணாற்றுப்படையில் வெளிப்படும் பாணர் வாழ்வியல்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர் நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம்கலைகளால் மக்களை மகிழ்விப்பர்.


இக்கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்  


பழங்காலத்தில் பாணர்கள் என்னும் குடியினர் இருந்தனர் பாணர் குடியிருக்கும் பகுதி பாண்சேரி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பாடல் பாடுவதுஇ நடனம் ஆடுவது போன்றவற்றைச் செய்வார்கள். அவர்களைப் பல மன்னர்கள் இ குறநில மன்னர்கள், செல்வர்கள் முதலியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை ‘விறலியர்’ என்பார்கள் பாணர்களின் முக்கிய இசைக்கருவி யாழ் என்பது அதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தன. சகோடயாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவை ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கிறது.


பாணர்களில் சிலர் மன்னர்களுக்காக தூதுகூட சென்றியிருக்கிறார்கள். சங்ககாலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரைக்கும் காணர் குடி இருந்திருக்கிறது.

நம்பியாண்டர் நம்பியைக் கொண்டு ராஜராஜசோழர் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப்பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை (மதங்கசூயாமணி) வைத்துப்பண்முறை வகுத்தனர்.


மாறவர்மன் சுந்தர பாண்டியர் சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழனுடைய திருமுடி ஆகியவற்றைப் பாணனுக்குப் பரிசிலாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது.


பாணர்க்கு வழங்கும் தொழிற்பெயர்கள் : -


இசைக்கருவியில் பண்ணப்படுவது பண்.

பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்

பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.

கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.


அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்துநூல்கள்;.


சிறுபாண் : -


ஏழு நரம்புகள் கொண்ட சீறியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள்.


பெரும்பாண் : - 


21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீடடிக்கொண்டு பாடுபவர்கள்.


பாணர் பிரிவுகள் : -


அக்காலத்தில் இவர்கள் இசைப்பாணர்கள், யாழ்ப்பாணர்கள், மண்டைப்பாணர்கள், பொரும்பாணர், சிறும்பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இக்காலத்தில் பாணான், மேஸ்திரி, தையல்காரர்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். சமூக அந்தஸ்திற்காக சிலர் பாண்டிய வேளாளர் என்று கூறி வருகின்றனர்.


திருமண உறவுகள் : -


பாணர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே அததை மகள், மாமன் மகள்களை திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இலக்கியங்களில் பாணர் : -


சங்க இலக்கியங்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பாணர்களைக் குறித்த பல செய்திகள் காணப்படுகின்றன.


பக்தி இலக்கியத்தில் பாணர் : -


அக்காலத்தில் பகதி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறுப்படுகிறது.


பாணர்களின் சிறப்பு : -


யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே யாழ்ப்பாணர் என்றழைக்கப்பட்டனர். பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம் தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊரக்கே யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது.


பாணர்கள் வீழ்ச்சி  : -


சங்காலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப்பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனத். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப்பரிசில் பெற்று வந்தனர். பொரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழுவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பரறுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையி;ன் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மி அதிகமாக பிற்காலச் கமணம் வலியுறுத்தத் தொடங்கியது. iஇச என்கிற கலை மேன்மையான விடயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாகஈ மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விடயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிhர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை “இழிசினர்” என்ற கீழ்ச்சாதியின்ருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.


காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்ர் ஏறக்குறைய இழிந்தே போகும் தறுவாயிலிருந்தவர்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் “பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ்இசைப்பவர்கள் இல்லையே” என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம். “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது இஸ்லாமியக் கொடுங்கோலன் ஒளரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான்.


பொருளாதார நிலை : -


திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, நாகர்கோயில், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடும் வயல்களுமாக சிறப்போடு பாணர் வாழ்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சொத்துகளையும் இழந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதாரம் முதலியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் நிலை காணப்படுகிறது.


முடிவுரை

முற்காலத்தில் யாழ் இசைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது, காலப்போக்கில் விழாக்காலங்களில் தேர் அலங்கார வேலைகள், அலங்காரக் கடைகள், ஆண்டவனுக்குரிய ஆடைகள் தைத்தல், பந்தல் போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


அரசாங்க மாற்றத்தால் கோயில்கள் மூலம் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. தையல் தொழில், பந்தல் தொழில், கூலித் தொழில் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். மற்ற சழுதாய மக்கள் இறந்தால் அவர்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் பாடைகட்டிக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் பீடி சுற்றுதல், தீப்பொட்டி ஒட்டுதல் போன்ற தொழிலைச் செய்து கொண்டுள்ளனர். இச்சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சட்மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகரமன்ர, பஞ்சாயத்து உறுப்பினர் என்று யாரும் கிடையாது. இச்சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர்களும் இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக