புதன், 28 ஏப்ரல், 2021

இலக்கியங்களில் செல்வம் நிலையாமை கருத்தியல்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


 


மனிதர்கள் எப்பொழுதும் செல்வத்தின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் வாழும்போது பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் செல்வத்தினை சேர்பபதிலேயே தன்னை முழுமையாக செல்வத்தினை சேர்ப்பதிலேயே தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். நிலையில்லை என்பதனை அவர்கள் அறியும்பொழுது உலகினைப் புரிந்துக் கொள்வார்கள்.

செல்வ நிலையாமை

ஒரு காலத்தில் மனைவியால் அறுசுவையை உடைய உணவை உண்டவன் பின்னொரு காலத்தில் ஏழையாகி உணவக்காகப் பிச்சையெடுக்கும் நிலைமை கூட வரலாம் செல்வம் பெருகப்பொருக அவற்றை சேர்த்து வைத்தல் கூடாது. பிறருக்கு கொடுத்து உதவுதல் வேண்டும். பலரோடும் பகிர்ந்து மகிழ்ச்சியோடு உண்ணுதல் வேண்டும்.

யானையின் பிடர் அழகுற அமர்ந்து கொற்றக்குடை நிழலற்ற உலா வந்த படைத் தலைவர் தீவினையால் துன்புற்றுச் செல்வத்தை இழந்து தம் மனைவியையும் பகைவன் பறித்துச் செல்ல துன்பம் நேரிடும்.

“நின்றன நின்றன் நில்லா என உணர்ந்து 

ஒன்றின ஒன்றின வல்வேல,செயின் செயிக-

சென்றன சென்றன,வாழ்நாள்,செறத்து உடன்

வந்தது வந்தது கூற்று!  (1)

ஒவ்வொரு நாளும் வாழும் நாள் விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கிறது. நாள்விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வாழும்காலம் குறைந்து கொண்டிருக்கிறது. உயிரைக்கொண்டு செல்லும் காலனும் நெருங்கி வந்து கொண்டே இருக்கின்றான். எனவேச் சேர்த்துவைத்தவை நிலையாக இருக்காது  என்பதை முன் உணர்ந்துப் பொருத்தமான அறங்களை வேகமாக செய்தல் வேண்டும்.

ஏதேனும் புதிய வரவு நம் கைக்குக் கிடைத்தால் வயதான காலத்தில் அது பயன்படும் என்று இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளல் கூடாது. அதனை வந்தப் போதே வறியவர்க்குக் கொடுத்து விடுதல் வேண்டும். அவ்வாறு கொடுத்தவர் பிறழ்தல் இல்லாத அருளில்லாத எமன் பாசக் கயிற்றால் கட்டி நரகத்திற்கு இட்டுச் செல்லுதலில் இருந்து தப்பிச் சொர்கம் சென்று அடைவர் இல்லை. மிகுதியான பொருளை நாளும் சேர்த்து வரும் பணக்காரர்களே தானமாக அவற்றை வழங்கி விடுங்கள். நாளை மரணப்பறை கொட்டுவதற்கு முன்பே கொடுத்து விடுங்கள்.


“தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து,நும் நாள் உண்ணும்,ஆற்ற

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

பிறந்தும், பிறவாதா ரில்” (2)

எமன் சூரியனை அளக்கும் கருவியாகக் கொண்டு உம்முடைய வாழ்நாள் அகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணும், உலகில் பிறந்தவர் அனைவரும் அறம் செய்தல் வேண்டும். அல்லாதோர் பிறவாதவரே, ஆகையால் உரிய அறங்கள் மிகுதியாகச் செய்து அருள் உடையவர் ஆகுங்கள்.

செல்வம் அழியும்: 

தாய் மரணமுற்று ஒருநாள் அழியப் போகிறோம் என்பதை எண்ணாத சிற்றறிவு உடையவர்,யாம் பெரிய பணக்காரர் என்று செருக்கித் திரிவர், அவருடைய பெரும்செல்வம், இரவில் கருமேகக் கூட்டத்தின் இடையில் திடும் என்று தோன்றிச் சிறிது நேரத்தில் மறைந்து விடும், மின்னலைப்போல இருந்தே இடம் தெரியாமல் எல்லாம் அழிந்து போகும்.

“உண்ணான்,ஒளிநிறான்,ஒங்க புகழ் செய்யான்

துன்ன அருங் கேளிர் துயர் களையான்,கொன்னே

வழங்கான், பொருள் காத்து இருப்பானேல்,அஆ!

இழந்தான் என்று எண்ணப்படும்” (3)

தான் ஈட்டியப் பொருளைக் கொண்டு வயிறார் உண்ணாதவனாயும்,மதிக்கப்டும் செயல்களைச் செய்யாதவனாயும், உயர்ந்த புகழுக்குரிய நல்லவற்றைப் புரியாதவனாயும் தம் நெருங்கிய உறவினர்களின் துன்பத்தை நீக்காதவனாயும் யாருக்கும் எதுவும் கொடுக்காதவனாயும் தம் பொருளைக் காத்திருக்கும் கருமியாய் ஒருவன் இருப்பானயின் ஒருநாள் ஐயோ!தம் பொருளை எல்லாம் இழந்துவிட்டானே என்று எண்ணும் நிலை ஏற்படும்.

யாருக்கும் எதுவும் கொடுக்காமலும் நல்ல உடை உடுக்காமலும்,நல்ல உணவு உண்ணாமலும்,தம் உடம்பை மிக வருத்தியும் அழியாத நல்ல அறங்களைச் செய்யாமலும் பொருளை ஈட்டிக் காத்து வருபவர் தம் செல்வத்தை ஒருநாள் இழந்து விடுவர். அரும்பாடுப்பட்டு நாள்தோறும் சேர்க்கும் தேனை ஒருநாள் முற்றுமாக இழந்து விடும் தேனீ இதற்குச் சரியான சாட்சியாகும்,

நிலையற்ற பொருள்களை நிலை நிற்பன என்று கருதும் அறியாமையானது இழிவுடையது ஆகும்.

“கூத்தாட் அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 

 போக்கும் அதுவிளிந் தற்று” (4)


ஒருவரிடம் பெருஞ்செல்வம் குவிவது நாடக  அரங்கிற்கு மக்கள் வருவது போன்றும் அச்செல்வம் குறைவது நாடக அரங்கிலிருந்து மக்கள் போவது போலவும் ஆகும். செல்வம் நிலையற்றது: அது வந்து சேர்ந்த நாளில் நிலையான அறச்செயல்களைச் செய்துவிட வேண்டும்.திருவருட்பா செலவ நிலையாமையைப் பல உதாரணங்களை காட்டி விள்க்குகிறது. உயிரற்றாகி இன்பம் தராமல் சஞ்சலத்திற்கே இருப்பிடமாகிச் சிறிதே தோற்றமுடையதாகி வெளிஉலகில் மயக்கத்தை உண்டாக்கி விட்டு, ஒடும் இயல்புடைய செல்வமானது நஞ்சு போன்றும் ஏமாற்று நாடகமாகவும்,வெள்ளமாகவும்,கடலில் தோன்றும் அலையாகவும், வலையாகவும் முதுவேனிற்காலத்து முகிலாகவும், உடம்பாகிய வண்டி இயங்குவதற்கானச் சக்கரமாகவும் நீண்ட வாய்க்காலில் ஒடும் நீராகவும்,கற்பு என்னும் உறுதியைப் பெறாத பெண்களைப்போல ஒரு நிலையில் நில்லாமல் உழல்கின்றது என்று கூறிய செல்வ நிலையாமையைச் சுட்டுகிறது.

“கூத்தாட்வைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற

சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே” (5)

என செல்வம் வெகுவிரைவில் அழியும் என்பதனை வள்ளுவர் (332) திருவருட்பா விளக்குகிறது.செல்வம் என்பது என்றுமே ஒருவனிடம் நிலையில்லாதது அது வந்துகொண்டும் போய்க்கொண்டும்தான் இருக்கும். திருவள்ளுவர் கூறுவது போல அது வரும்போது ஒவ்வொன்றாய் வரும். ஆனால் போகும்போது விரைவில் எல்லாமேப் போய்விடும்.

“கூத்தாட் பகைவ்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 

 போக்கும் அதுவிளிந் தற்று (6)

நிலையில்லாதச் செல்வம் உள்ளபோதே நிலையான அறத்தைச் செய்து ஞானமாகிய செல்வத்தைப் பெற்றுவிட வேண்டும். அவ்வாறு பெறாவிடில் ஈட்டிய செல்வத்தைப் பிறர் கொண்டு செல்வர். தேனீக்கள் பல மலர்களிலிருந்தும் நெடுநாள் சேகரித்து வைத்திருந்த தேனை எவ்வாறு ஒருநாள் தீயார் எடுத்துக் கொண்டு செல்வார்களோ அவ்வாறு ஈயார் ஈட்டிய செல்வத்தை வலியார் எடுத்துக்கொள்வார் தீயார் தேனைக் கொள்ளும் போது ஈயார் மடியவும் செய்வர்.


“ஈட்டிய தேன்பூ மணங்கண் பிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொள்ளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே” (7)


 செல்வம் உள்ளபொழுது அதன்பால் பற்றுக் கொள்ளாது வறியார்க்கு ஈந்த இன்பம் பெற வேண்டும் என்பது திருமூலர் திருவுள்ளம்.

“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட 

மறுசினை நீக்கி உண்டாகும்-விறிஞராய்க்

 சென்று இரப்பர் இடத்தக் கூடி எனின் செல்வமென்று

உண்டாக வைக்கப்பாற்று அன்று” (8) 

என்ற பாடலில் செல்வம் என்பது நிலையில்லாத ஒன்று.இது ஒருவரிடம் மட்டும் நிற்பது கிடையாது. செல்வம் பெற்று வாழ்பவர் ஒருநாள் ஏழ்ம்மை நிலை பெறலாம். ஏழ்ம்மை நிலையில் உள்ளவன் ஒருநாள் செல்வனும் ஆகலாம் என்று கூறுகிறது. இதனை வள்ளுவர்

“கூத்தாட் அவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் 

  போக்கும் அது விளத்தற்று” (9)

ஒருவனிடம் பெருஞ்செல்வம் சேர்ந்தது என்பது கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து எவ்வாறு சேருமோ அது போன்று செல்வம் வரும். பின்பு கூத்தாடும் இடத்தை விட்டுக் கூட்டம் கலைவது போன்று செல்வம் ஒருவனிடம் இருந்து சென்று விடும் என்று வள்ளுவர் கூறுகிறார். 

செல்வம் என்பது நிலையில்லாதது மனிதனின் வாழ்நாட்கள் கழிந்து போகின்றன கூற்றுவன் விரைந்து வருகின்றன இறப்பு என்பது உறுதி என்பதை நினைத்து வாழும் நாட்களிலேயே அறங்களை விரைந்து செய்ய வேண்டும் என்றன.

“அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்

அதற்கு ஆங்கே செயல்” (10)

என்ற குறட்பாவில் செல்வம் நிலைத்து நிற்காது அவற்றை மறந்து அறங்களைச் செய்க என்றும் வீணாகக் கழிந்து கொண்டிருக்கும் வாழ்நாட்களில் நிலையில்லாதத் தன்மையைக் கொண்ட செல்வத்தை மனிதர்கள் சேர்த்துப் பாதுகாப்பது பயனற்ற செயல் என்பதை தெரிய முடிகிறது.

நிலையில்லாதச் செல்வத்தை நிலைபேறுடையது எனப் பற்றிப் பிடித்துப் பாதுகாவாமல் பலருக்கும் கொடு எனக் கூறியதால் இது பெருங்காஞ்சி ஆயிற்று பிறருக்குக் கொடுத்து வாழிகின்ற வாழ்வே பொருள் பொதிந்த வாழ்வாகும். நிலையில்லாத அப்பொருளைக் கொண்டு நிலைத்து புகழைப் பெறுதலே சிறந்த செயலாகும். ஒருவரது செல்வங்களை சூறையாடலாம் அணிந்து கொண்டிருக்கிற ஆடை அணிகலன்களைச் சூறையாடலாம். மிகப்பெரிய பாறைகளையும் மரங்களையும் கூட வெட்டி வீழ்த்தலாம். ஆனால் ஒருவர் பெற்ற கல்வியைச் சூறையாடவோ, வெட்டி வீழ்த்தவோ முடியாது. செல்வத்தை பெற்றோரிடமிருந்து ஏமாற்றிப் பெற முடியும். செல்வந்தர்களைக் கொலை செய்து பெறமுடியும்.


ஆட்சி அதிகாரங்களில் கபளீகரம் செய்து பெறமுடியும். செல்வந்தர்கள் ஏழைகளை உழைக்கச் செய்து, தான் உழைக்காமல் பெற முடியும். ஆனால் கல்விச் செல்வத்தை உழைக்காமல் வஞ்சித்து,கொலை செய்து பெற முடியாது. கடினப்பட்டு உழைத்துத் தான் பெறமுடியும்.ஆகவே கல்விச் செல்வம் மட்டுமே மற்ற எல்லாச் செல்வங்களை விடவும் குற்றமற்ற உண்மையான,அழிவில்லாத செல்வமாகும் என்கிறார் வள்ளுவர்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை” (11)

கல்விச் செல்வத்தை அரசனானாலும் ஏழையானாலும், பணக்காரனானாலும், உழைத்துத் தான் பெறமுடியும். கல்வியை கற்றவர்களுக்கு வேலையில்லை என்பதோ,செல்வம் இல்லை என்பதோ தோன்றுவதில்லை. செல்வந்தர்கள் புகழை நாடியே செல்ல வேண்டும்.ஆனால் கற்றவர்களைத் தேடியே செல்வம் வரும். கல்வியறிவில்லாத செல்வந்தர்கள் நிறைந்த நாட்டில் அடிமை நிலை, ஏற்றத்தாழ்வு, போட்டி, பொறாமை காணப்படும். இருக்கின்ற பொருளை பிற உயிர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்துக் கொடுத்து வாழும் அருளானது அறநூல்களில் கூறப்பட்டுள்ள நெறிகளில் மேலானதாகப் போற்றப்படும். 

நிலையில்லாதப் பெருமையினை உடைய செல்வ வாழ்க்ககையினைப் பெறுகின்ற ஒவ்வொருவரும் அத்தகைய சிறப்பான வாழ்வு நிலை பெற்ற இருக்கவேண்டுமெனில் நல்ல பண்பகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும். உண்ணுகின்ற உணவுக்குச் சுவையினைத் தரக் கூடியத உப்பம் பலவகைப் பொடிகளும் ஆகும். ஆனால் அந்த உப்பும், பல்வகைப் பொடிகளும் உணவாக முடியாது. அதுப் போலவேத் தான் மனித வாழ்க்கைக்குச் செல்வம் தேவை. அந்தச் செல்வமே வாழ்க்கையாகிவிட்டது. செல்வமும் ஒரே இடத்தில் தங்காமல் பலரிடமும் சென்ற கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் வறுமை நீங்கி செழுமை தோன்றும்.

நெருப்பினில் நெய்யைப் பெய்தாற் போன்று பொன் பொருள் என்னும் ஆசையை மேன்மேலும் பெருக்கிக் கொண்டாய்! பொன்னாசையால் யாவற்றையும் இழந்து மண்ணுலகில் துன்புற்றவர்களைக் கண்டிலையே? பொன்னாசையுடையவர் துன்பக்கடலை அன்றி வேற எதனைக் கண்டார்கள்? பொன் இருந்தால் அதை பாதுகாப்பாக வைப்பதற்குத் தாயாலும் அறிந்துக் கொள்ளாத வகையில் ஓர் இடம் வேண்டும். அவ்வாற வைத்தாலும் அந்த இடத்தை தெரியவொட்டாது ஏய்த்தால் என் செய்வாய்? ஐவத்த இடத்தில் அப்பொருள் கரியாகிப் பாழடைந்தால் என் செய்வாய்! பெருஞ்சினத்தல் மாற்றார் அச்செல்வத்தைப் பறிக்க முனைந்தால் என்செய்வாய்! அவ்வாறு காவல் செய்யும் போது ஆணவமாய் கொடியக் கூளி முன் நின்று நினதலையில் ஏறும்! அதற்கு என்ன செய்வாய்?அப்போது உன் ஆன்ம நேயம் வேண்டி உலோபம் என்னும் குறும்பன் உன் முன்னே வருவான். 

  பொன்னும் பொருளும் எத்தனையோ பேர்களை விட்டு அகலுதலை நீ  கண்டதில்லையோ! கூத்தாட்டும் அவைக் கூடத்திலிருந்துக்கூத்து முடிந்ததும் அந்த அவைக் கலைந்து வெற்றிட மாதலைப் போன்று செல்வமானது பறிபோதலை நீ பார்த்தது இல்லையோ! இந்நிலவுலகத்தில் நீண்ட மயக்கத்தைத் தருவது பொன் பொருளே எனத் தெளிந்து அத்தகைய வீண் மயக்கத்தை விட்டிலையே! சிற்றுயிர்கள் இத்தகையச் செல்வத்தைக் கொண்டு உயிர்வாழ்வதில்லை என்கிற இயல்பினையும் எண்ணிப் பார்க்கவில்லையே! எனவே நெஞ்சை! இத்தகைய பொன்னாசையின் மீது ஆசை வைக்காதே.

பணக்காரர்கள் செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்தால் திருப்பிக் கொடுக்க மாட்டார்களோ என்ற எண்ணத்தில் பிறருக்கு உதவியும் செய்யாமல், செல்வத்தைத் தனது வங்கிக் கணக்கிலோ,தன்னிடமோ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அச்செல்வம் ஒரே இடத்தில் தேங்குவதால் பணப்பற்றாக்குறை தொழில் துறையில் பெருக்கமின்மை ஏற்பட்டு வேலையில்லாத திண்டாட்டம், உணவுத் திண்டாட்டம் போன்றவை ஏற்படுகிறது. இச்செயல்களைத் தவிர்த்து கடமையுணர்ந்து செயல்பட்டால் நாடு வளம் பெறும். மேலும் இவர்களைச் சமுதாயம் பழிக்கும்.ஆகவே நீடித்த இன்பத்தைத் தரக்கூடியது ஒழுக்கம். அத்தகைய ஒழுக்கமான வாழ்வினை வாழ்ந்தால் வாழ்வும் செழிக்கும் வரலாறும் தழைக்கும் என்கிறார் வள்ளுவர்.

“அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்யே செயல்” (12)

பக்தப் பிரகலாதனைப் போன்றத் தெய்வபக்தியும், மன்மதனைப் போன்ற ஏகபத்தினி விரதமும் ஒருவர் கைக்nhணடிருந்தால் அவரது ஜீவன் இந்த உலகத்திலேயே முக்தி அடைந்து எல்லா அம்சங்களிலும தேவ பதவி அடைந்து மகிழ்ச்சி கொண்டிருக்கும் என்கிறார் பாரதி. ஒருவர் எந்தப் பொருளின் மீதும் பற்றில்லாத தன்மையுடன் இந்த மண்ணுலகில் வாழ்கின்ற வரையிலும் உறுதி கொண்டிருக்க வேண்டும். அந்தப் பற்றற்றத் தன்மை வெற்றியடைய ஞான நிலையில் தவம் மேற்கொள்ள வேண்டும். உடலை விட்ட உயிர் நீங்குகின்ற வரை பற்றில்லாமல் வாழ்ந்தால் அந்த உயிர்க்கு மறு பிறவி கிடையாது. பற்றுக்களை முற்றிலும் துறப்பது கடினம். அந்தச் செயலில் வெற்றி பெற்றவிட்டால் பிறவித் துன்பம் நீங்கும். இல்லையேல் அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்” (13)

என்று கூறுகிறார். மாணிக்கத்தால் ஆகிய மணிமுடி,தோள் வளையம் மார்பில் தொங்கும், பதக்கங்கள் மற்றும் வேறு வகைகள் தூய்மையான பொன்னால் ஆகிய முத்துமாலை, கையில் அணியும் பொற்கடகம் ஆகிய இவை அனைத்தும் அழியும் பொருள்கள் தான்.


மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் வண்ண மண்டபம்,மதில் சுற்றிய அரண்மணை மற்றும் உள்ள செல்வங்கள் எல்லாம் நம் கூடவே வருவதில்லை. கானல் நீரை உண்மையான நீர் என்று எண்ணி மான்கள் அதன் அருகில் சென்று ஏமாறுவது போல் உலகில் வாழும் மக்கள் (மூடர்கள்) தம் கண்ணால் காணும் செல்வங்கள் நிலையானவை என எண்ணி மகிழ்வர்.ஆனால் அவை எல்லாம் அழியும் தன்மை கொண்டது. ஆனால் மெய்யறிவு பெற்ற ஞானிகளோ இவைகளைக் குறித்த வீம்பு என்னும் நூலைக் கட்டி திரைக்குள்ளே இருந்து ஆட்டுபவன் (இறைவன்) அவ்வுயிரை இயக்க மறுத்தால், உடலும் கீழே விழுந்து அழியும் தன்மை உடையது.


செல்வ வாழ்க்கை


அன்பு மனைவி ஊட்டுகிறாள் அறு சுவை  உணவு அவன் அறிகிறான்   வயிறு நிறைகிறது. மனம் குளிர்கிறது, வாழ்க்கை தளிர்கிறது. எதுவும் இனிக்கிறது,   இன்று செல்வம் அழிந்தது, அது அவனை விட்டு ஒழிகிறது, வறியவன் என்று அவனை வாழ்வார் உணர்கின்றனர், கூழுக்காக கையேந்தி நிற்கிறான், பிறர் வீட்டுப் படிக்கட்டு ஏறும்போது எல்லாம் அந்த வீட்டு மகள் அவனுக்குத் தாயாகிறாள், அம்மா தாயே என்று அழைக்கிறான், அவள் உனக்கு என்ன வேண்டும் என்றாள்.முன்பு உணவு சுவைத்தது, இன்று கை விரல் சுவைக்கின்றன.


ஒரு குழந்தையாகிக் கைவிரல்களைக் சுவைக்கிறான் அவன் காலம் பார்த்தாயா! எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டான்? சேல்வ வாழ்க்கை முன்பு, அல்லல் சேர்க்கை இன்று செல்வம் நிலைக்கும் என்றும் செருக்குக் கொள்ளாதே ஒரு பருக்கைக் சோற்றுக்கு தெருத் தெருவாக அலையும் நேரம் வரும். பணம்!அதனை அடக்கி ஆளவில்லை என்றால், பின்னால் வருந்துவாய், மதம் கொண்ட யானை! அது இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது. தினமும் அறம் செய்து வாழ்ந்திருந்தால் அழிந்து இருக்க மாட்டான். அறம் அவனுக்கு கைக்கொடுத்து இருக்கும் துணை நின்றிருக்கும். அறத்திற்கு இணை வேறு எதும் இல்லை. 

அறம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும் நீ செய்த தவறு என்ன? நீயும் உன் மனைவியும் மட்டும் மகிழ்ந்து உண்மீர் அரிச்சோறுதான், வரிசைப்படுத்திச் சுற்றத்தவரோடு அதனைச் சேர்ந்து உண்ண வேண்டும். அந்த மகிழ்ச்சி உனக்குப் புகழ்ச்சி, செல்வம் தட்டை அன்று, உருளை அது ஊருண்டு கொண்டே செல்லும். வண்டியின் சக்கரமாய் இடம் மாறு, உள்ளபோது உவந்து உண்ணுதல் வேண்டும். உறவினரோடு சேர்ந்து உண்ணுதல் வேண்டும்.

செல்வன் ஏழையாவான்;:

அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? பட்டத்து யானைமீது பகட்டாகச் செல்வன், சேனைத் தலைவன்” என்று ஏனையோரை மிரட்டினான் இன்று அவன் பகைவரிடம் சிறைப்பட்டுவிட்டான். நிறையுடைய அவன் பத்தினி பகைவன் கைப்பட்டு விட்டாள்.


“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

 செல்வத்துள் எல்லாம் தலை” (14)

ஒருவன் எப்படிப்பட்டச் செல்வனாக இருந்தாலும் அவன் என்றாவது ஒருநாளைக்கு ஏழையாவான். 

கட்டியவளை இழந்து, ஒட்டி உறவாட உறவினரும் இன்றி இன்று ஆடி அடைந்து நாடி தளர்ந்து உலவுகின்றான். இவன் ஒரு காலத்துப் பேரரசன் என்றுச் சொல்ல தோற்றுமா அன்று இவன் நாட்டை ஆண்டான்;; ,இன்றோ அவனை வறுமை ஆள்கிறது அன்று காலாட்டினான், இன்றோ காலம் அவனை ஆட்டி வைக்கிறத, காரணம் செல்வம் இழந்தான். ஏன ஆசிரியர் கூறுகிறார். அதோ அவனைப் பார், கஞ்சப்பயல்! காசு கொடுத்து எதையும் அவன் வாங்கி உண்ணமாட்டான், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பான், பில்பணம் கொடுக்கும் போத மெதுவாகக் கை கழுவச் சென்றுவிடுவான். பணம் தருவதிலிருந்து இடம் நழுவி விடுவான்.

“நாலு நல்ல காரியம் செய்ய வா” என்றால் அது”நமக்கு ஆகாது” என்றும் “ஒத்துக்காது என்று சொல்வான். ஒளிதரும் செயல்களைச் செய்யமாட்டான். புகழ்அடைய செயல்படுக, இல்லாவிட்டால் நின்ற பிறப்பே தேவை இல்லை” என்று வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை

வாழ்க்கையில்  ஒரு மனிதன் பெற்றவை இப்பிறவிகள் அந்தப் பிறவியின் பயனாக அவன் நன்மையை செய்தல் வேண்டும். அதனை விடுத்து செல்வம் ஒன்றே தனது நோக்கமாக உள்ளன அந்த செல்வமானது நிலையில்லாதது என்பதை அறிதல் அவசியமாகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக