புதன், 28 ஏப்ரல், 2021

சங்க இலக்கியத்தில் பாணர்கள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



சங்க இலக்கியம் பாணர், பொருநர், கூத்தர், விறலியர் எனப் பல்வகைக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகிறது. இவர்கள் ஆடல் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். பாணர் எனும் சொல் பண் பாடுவோர் எனும் அடிப்படையில் தோன்றியுள்ளது. சங்க இலக்கியம், இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பாணர்களைச் சுட்டுகிறது.


ஏழு நரம்புகளும் இயல்வது பண் என்றும், நரம்புகள் குறைந்து இயல்வது திறம் என்றும் கூறப்படும். திறங்களுள், ஆறு நரம்புடையது பண்ணியல் என்றும், ஐந்து நரம்புடையது திறம் என்றும், நான்கு நரம்புடையது திறத்திறம் என்றும் பெயர்பெறும், நிறை நரம்புடையவை, குறை நரம்புடையவை எல்லாவற்றையுமே பண் என்று குறிப்பதுமுண்டு.


ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டளவில் இயற்றப்பெற்ற தேவாலங்களில் எல்லாப்பண்களும் கையாளப்பட்டிருக்கலாம். ஆனால் தேவாரப்பாடல்கள் பலகாலம் மறைந்துகிடநது, பின்னால் நம்பியாண்டார் நம்பி காலத்தில் இப்பண்களை ஆராய்ந்து திட்டம் செய்தபோது தேவாரப்பாடல்கள் இருபத்துமூன்று பண்களிலேயே இசை வகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. தேவாரங்களில் காணப்பெறாத நான்கு, ஐந்து பண்கள் ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ளன.


பாணர்மாலையர் - பாண்குல மகளிர்


பாணன் - பாண்சாதியிணன், வீணன், சிவப்பத்தனான ஒர் அசுரன்


பாணாற்றுப்படை - ஒரு வள்ளலிடத்தில் பரிசு பெற்று வரும் பாணனொருவன் மற்றொரு பாணணை அவ்வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச் செலுத்துவதைக் கூறும் புறத்துறை


பாணாறு - பாணாற்றுப்படை


பாணான் - தையற்காரச் சாதியான்


பாணு - பாட்டு


பாண் - பாட்டு, பாணாற்றுப்படை, பாணர்சாதி, புகழ், வார்த்தை, தாழ்ச்சி


- செந்தமிழ் அகராதி


ந.சி. கந்தையா


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்


பாணர்கள் : -


இசைக் கலைஞர்கள் பற்றிப் பல செல்திகளை அறிய முடிகிறது. இவர்கள் பாணர் எனப்பட்டனர் “பண்” என்பதனடியாகப் பிறந்தது இச்சொல்லாகும் மன்னர்களும் வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாராட்டிப் பரிசளித்தனர். “பாண்பசிப் பகைஞர்” என்று வள்ளல்கள் பாராட்டப்பட்டனர்.


சில வள்ளல்களைச் சார்ந்து பாணர்கள் இருந்துள்ளனர் “பாணர் பெருமகன்” என அவர்கள் புகழ்ப்படுவர். பாணர்கட்குப் பொற்றாமலரையையும், பாடினிகட்குப் பொன்னிரி மாலைகளையும் வள்ளல்கள் கொடுத்தனர். (பொரு. 159 – 162)

பாணர்கள் பழுமரம் நாடும் பறவைகள் போல வள்ளல்களை நாடிச்சென்றனர்.

மலைபடு – 369 - 570

அழல் புரிந்த அடர் தாமரை. (புறம் 29 : 1 – 5)

ஐது அடாடந்த நூல் பெய்து, (புறம் 109 – 17 – 18)

புனவைனைப் பொலிந்த பொலன்நறுற் தெரியல் (புறம் 221 – (1 – 10)

பானுமயிர் இருநடதலை பொலியச் சூடிப், 239 : 17

பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 398 : 18 – 29


இவர்கள் பரிசு பெற்று வருகையில் எதிர்வரும் தம்மினத்தவர்களை அவ்வள்ளல்கள்பால் ஆற்றுப்படுத்தினர். பெருநகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன் இவர்களில் சிலர் மீன் பிடித்தலும் உண்டு. பாணர்கட்கு நிலமளித்தலுமுண்டு பிற்காலத்தில் இது “பாணப்பேறு” எனப்பட்டது. இவர்கள் அனைத்து மக்களாலும் எதிர்கொள்ளப்பட்டுப் பேணப்பட்டனர் என ஆற்றுப்படை நூல்கள் கூறுகின்றன.


பண் : -


இனிமை பயக்கும் இசை தோன்றும்படியாகச் சுரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவதாற் பிறப்பது பண் எனப்படும். இதுவே வடமொழியில் இராகம் என்று கூறப்படும்.


நெஞ்சு, மிடறு, நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை, ஆகிய ஸ்தானங்களில் ஏழிசைகள் தோன்றும் என்றும், இவ்வேழிசைகளில் எடுத்தல், படுத்தல், நலிதல் என்றும், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு ஆகிய கிரியைகளைப் பண்ணுவதால் பண் பிறக்கும் என்றும் இசையிலக்கணம் கூறும், முதல், முறையை, முடிவு, நிறைவு, குறைவு, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினெரு பாகுபாடுகள் பண்ணிற்கு இலக்கணமாகும்.


109 – (17 – 18)

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே


221 – (1 – 10)

பாடுநாக்கு ஈந்த பல்புக ழன்னே;

ஆடுநர்க்கு ஈத்தபேரன் பினனே;

அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;

திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;

மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;


இசைக் கவிஞர்கள் பற்றியப் பல செய்திகளை அறியமுடிகிறது இவர்கள் பாணர் எனப்பட்டனர். “பண்” என்பதனடியாகப் பிறந்தது இச்சொல்லாகும் மன்னர்களும் வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாரட்டிப் பரிசளித்தனர். “பண் பசிப் பகைஞர்” என்று வள்ளல்கள் பாராட்டப்பட்டனர் சில வள்ளல்களைச் சார்ந்து பாணர்கள் இருந்துள்ளனர்.


பாணர் பெருமக்கள் என அவர்கள் புகழ்ப்படுவர் பாணர்கட்குப் பொற்றாமரையையும், பாடினிகட்குப் பொன்னி மாலைகளையும் வள்ளல்கள் கொடுத்தனர்.


பண் உனும் இவ்வரிய தத்துவம் சங்க காலத்திலேNயு மிகவும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் சங்க நூல்களில் உள்ளன. பரிபாடலில் பாக்களை இயற்றியவர் பெயரும் அவற்றிற்குப் பண் அமைத்தவர் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன.


புறநானூற்றுச் செய்யுள் ஒன்றால் (149) பண்களுக்குரிய பொழுது இன்னாது என்ற மரபு இருந்ததாகவும் அறிகின்றோம். அரங்கேற்று காதை பல பண்களுடைய பண்டைய வடிவம் இலக்கணத்தோடு கிடைக்கின்றது.


பண்களின் மொத்தத் தொகை நூற்றமூன்று (103) இவற்றுள் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என்பவை நாற்பெரும் பண்கள். குரல் - இனி உறவு என்னும் இளிக்கிரமமே எல்லாப் பண்ணிற்கும் அடி நிலையாகும்.


சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் ஆகியவையும் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் வரும் பல பாடல்களும் இவர்களின் வாழ்க்கையின் விளக்கமாக அமையும். இவர்கள் திருவிழாக்களின்போது மக்களை மகிழ்வித்தனர். மன்னரின் அவைக்களத்தில் பாடி மகிழ்வித்தனர்.


மன்னரின் அவைக்களத்தில் பாடி மகிழ்வித்தனர் தலைமக்களிடையே தூதுவர்களாக விளங்கினர். பெருநகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. இவர்களில் சிலர் மீன் பிடித்தலும் உண்டு. பாணர்கட்கு நிலமளித்தலுமுண்டு பிற்காலத்தில் இது “பாணப்பேறு” எனப்பட்டது. இவர்கள் அனைத்து மக்களாலும் எதிர்கொள்ளப்பட்டுப் பேண்ப்பட்டனர் என ஆற்றுப்படை நூல்கள் கூறுகின்றன.


சங்க இலக்கியங்கள் வழி தொல்காப்பியத்தில் கோட்பாட்டாக்கம் பெறும். திணை எனும் கருத்து தொன்மையான தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது. இது நிலவுமைக் காலத்துக்கு முந்தைய இனக்குழு சமுதாயத்தின் பங்களிப்பாகும். தமிழ்ச் செவ்வியல் மரபின் தனித்தன்னையை அடையாளப்படுத்தும் முக்கியக் காரணியாகவும் இது வியங்குகிறது. வடபுலத்துச் சமய மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் இடம்பெறச் தொடங்கிவிட்ட சங்க மரபில் திணைக் கருத்தின் தொடர்ச்சியும் செல்வாக்கும் அதன் சிறப்பைப் புலப்படுத்துகின்றன. சிலம்பிலும் பக்தி இலக்கியங்களிலும் காப்பியக் கட்டமைப்பிலும் தணைக் கருத்து தொடர்ந்து செல்வாக்கு பெற்று விளங்குகிறது. இனக்குழு சமுதாயத்தின் தகவுகள் சிதைந்து நிலவுமைச் சமுதாயத்தில் வேந்தர்களும் கடவுளரும் ஏற்றம் பெற்ற காலத்திலும் திணை மரபு போற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. திணை என்பது பாவியல் சார்ந்த கோட்பாடாக வளர்ச்சி பெறுவதற்கு முன்னர் இயற்கையோடு இயைந்த வாழ்வியல் கூறுகளையும் அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது இதற்குக் காரணம்.


திணை எனும் சொல் சங்க இலக்கியத்தில் பலவேறு பொருள்களில் வழங்கப் பட்டிருப்பினும் குடி பொருளில் (புறம் 24, 27,159,373 குறுந். 72, பதிற், 31,72) ஆளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குடி என்பது மக்களை மட்டுமின்றி இயற்கை மற்றும் கடவுளரோடு இணைந்த ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வற்ற பொதுமைக் சூழமைவைக் கட்டுவதாகும். இத்தகைய ஒருங்கிணைந்த குடியைச் சுட்டிய திணை எனும் கருத்தே பின்னர் திணைக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது.


துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை என மாங்குடி கிழார் குறிப்பிடுகிறார் (புறம் 335). சங்க இலக்கியப் பாடுநர் குழாங்களாகப் பாணர், புலவர், கோடியர். வயிரியர், கண்ணுளர், கிணைஞர், பொருநர், அகவுணர் ஆகியோரை அடையாளப்படுத்துகிறார் அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், ப. 191) இத்தகைய குடிகள் குறித்த விரிவான ஆய்வுகள், தமிழ்த் திணைக் கோட்பாட்டிற்கான மூல ஊற்றுக்களைக் கண்டறியத் துணைபுரியும்.


தமிழ்ப் பாணர் பற்றிய வெ. வரதராசன் (தமிழ்ப் பாணர் வாழ்வும் வரலாறும்) கா. சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும்) அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும்), மொதையன் (சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும்), பக்தச்சலபாரதி (சங்க காலப் பாணர்களும் கோண்டு பர்தான்களும்), பிரபஞ்சன் (பசி உருக்குலைந்த பாண் சமுகம்), கமில் சுவலபில், ஜார்ஜ் ஹார்ட், கைலாசபதி போன்றோரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. கவிஞர் இன்குலாப்பின் ‘iஒளவி’ நாடகம், பாணர் குடியிருப்பையும் பாணர் வாழ்வியலையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. இலக்கிய நோக்கு மட்டுமின்றி. வரலாறு, மெய்யியல், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பார்வை தமிழ்த் தொல்குடியினைரப் பற்றிய தொடராய்விற்கு இன்றியமையாதது.


இனக்குழச் கமுதாயத்தில் பாட்டு என்பது இசையோடும் ஆட்டத்தோடும் இனயந்ததாக வெளிப்படுவது. இதிலிருந்து மாறுபட்டு பாட்டு என்பது புலமைச் செயற்பாடாக எண்ணப்பட்ட நிலையில்தான் செய்யுள் மரபு தொடங்குகிறது. இனக்குழுச் சமுதாயத்தில் பாட்டு என்பது பாணர் குடிகளுக்கு உரியதாக இருந்தது. இந்த மரபு நிலவுடமைக்  காலத்திலும் தவிர்க்க இயலாததாய் ஆதவையான மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வகையில்தான் சங்க இலக்கிய ஆக்கங்கள் பாணர் மரபைத் தழுவியவையாக அமைந்துள்ளன. இதுவே திணைக் கோட்பாட்டின் நிலையேற்றிற்கும் காரணமாக அமைந்தது. பாணர் மரபிலிருந்து விடுபட்டு பாடல் என்பது பிரக்கைஞபூர்வமான ஒரு புலமைத் தொழிற்பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியது என கா. சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும் ப. 34) குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.


புராதன பாடல் வளர்ச்சியல் மூன்று கட்டங்கள் இருப்பதை அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரகும் மாற்றமும், ப. 9, 10) எடுத்துக் காட்டுகிறார். iஅவ 1. நேரடியாகப் பாத்திரங்கள் பாடியவை. 2. பாத்திரங்களாகப் பாணர்கள் பாடியவை 3. பாணர்கள் போலப் புலவர்கள் பாடிவை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாணர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருப்பினும், சங்க இலக்கியத்தில் பாணர் பாடியதாகக் குறிப்பிடும் எந்தக் பாடலையும் காணமுடியவில்லை. மேலும் கற்பில் கூற்றுக்குரிய வர்களாகவும் (தொல். பொருள். 494) வாயில்களாகவும் (தொல். பொருள் 191) பாணர்களைத் தொல்காப்பிய அகத்திணை சுட்டுகிறது. இதற்குச் சங்கப் பாடல்களும் சான்று பகருகின்றன.


ஐங்குநுறூற்றில் பணான் பத்து எனும் தலைப்பில் பத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் இடம்பெறும் ஆற்றுப்படை எனும் துறை சங்க காலத்திலேயே தனி இலக்கிய வகையாக வளர்ச்சி பெறுவதையும் பத்துப்பாட்டில் காணமுடிகிறது. சங்கப் பாடல்கள் எழுதப்பட்ட காலத்திற்கும். அவை தொகுப்பாக்கம் பெற்ற காலத்திற்கும் திணைறும் கருத்து இலக்கணக் கோட்பாட்டாக்கம் பெற்ற காலத்திற்கும் உள்ள இடைவெளிகள் நன்கு ஆராயப்படாமல் பாணர் மரபின் மூலத்தையும் தொடர்ச்சியையும் நன்கு அறிய இயலும். 

பாணர்களின் வாய்மொழி சார்ந்த இசைப் பாடல்கள் படிப்படியாகப் புறந்தள்ளப் பட்டு புலவர்களின் ஆக்கங்கள் ஏற்றம் பெறுவதைத் தெளிவாகக் காணமுடிகிறது. தொல்காப்பியத்தில் பண்ணத்தி போன்ற இலக்கிய வகைக்கு வழங்கப்பட்டுள்ள இடம் ஒரு வகையில் பாணர் மரபைத் தவிர்க்க முடியாத ஓர் ஏற்பாடாககே கருத வேண்டியுள்ளது.


பாண்களின் பாட்டு மட்டுமின்றி, பாணர் குடியினரும் புறந்தள்ளப்படும் நிலையைக் காணமுடிகிறது. அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும், ப. 192 – 203) குறிப்பிடுவது போல, பாணர்கள் பெரும்பாலும் குறுநிலக் கிழாரோடும் புலவர்கள் வேந்தரோடும் அடையாளப்படுத்தப் படுகின்றனர். பரிசளிப்பு முறையில் பாணர் புலவரிரடயே வேறுபாட்டைக் காணமுடிகிறது. பாணர்கள் கல்லாவாய்ப் பாணர் எனக் குறிக்கப் பெறுவதும், புலவர்கள் செந்நாப்புலவர் என ஏத்தப் பெறுவதும் நிகழ்கிறது.


தனித்தன்மை வாய்ந்த திணைக்கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய பாணர்கள் தமிழகத்தின் தொல்குடியினர். இவர்களின் வசிப்பிடம் பாண்சேரி, பாண. குடி எனப்பட்டது. இவர்கள் இசையை வாழ்வாகக் கொண்டவர்கள்;. கூடி வாழும் இயல்பு கொண்ட குழு மனத்தவார். குழவாகச் சென்று மக்களை மகிழ்வித்தவர்கள். இக்குழவில் பாடினி, விறலி, கூத்தர் இடம் பெறுவதுண்டு. இனக்குழச் சமுதாயத்தின் பொதுமை வாழ்வு இவர்களுக்குரியது. நிலவடமைச் சமுதாயத்தில் வறுமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டவர்கள்.


பண்டை பாணர் மரபு பழங்குடிகளின் மூதறிவாளர்களிடமிருந்து தோன்றுகிறது. மந்திர ஆற்றல், குறி சொல்லுதல், சடங்குகள், நிகழ்த்துதல், மருத்துவம் பார்த்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட முதுவாய் மக்கள் மரபில் பாணர்களை நோக்க இயலும் புறநானூற்றில் இடம்பெறும் முதுவாய் இரவல் (புறம். 48) ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.


ஆற்றுப்படை நூல்கள் பாணர்களின் கூற்றாகப் புலவர்களால் பாடப்பட்டவை, இப்பாடல்கள் மன்னரைச் சிறப்பிக்கும் நோக்கில் பாடப்பட்டவை. பாணர் வாழ்வியல் ஒரு இலக்கியப் போக்காகவே இவற்றில் அமைகிறது. அரசுகள் நிறுவப்பெற்ற சமுதாயத்தில் பாணர்களின் பங்கு என்ன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். ஆயினும், ஆற்றுப்படை நூல்கள் சமகாலத்திய பாணர் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கான அடிப்படைகளை வழங்கியுள்ளன.


மயிலை சீனி. வேடங்கடசாமி ‘சிறுபாணன் சென்ற பெருவழி’ என்ற கட்டுரையினை (1961) வரலாற்று நோக்கில் எழுதியுள்ளார். சிறுபாணாற்றுப்படையில் இடம்பெறும் எயிற்பட்டினம். வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களளை இக்கால ஊர்களோடு அடையாளப்படுத்தி, பாணன் சென்ற வழியினைப் படம் வரைந்து விளக்கியுள்ளார். கட்டுரையாளர் இவற்றில் எயிற்பட்டினம் நெற்தல் நிலப்பட்டினம். வேலூர் முல்லை நில குடி, ஆமூர் மருதநில ஊர். மேற்சுட்டிய குடியிருப்புகளின் தன்மை அங்குள்ள மக்களின் இயல்புகள், அவர் தரும் உவ ஆகியவற்றைப் பாணன் விவரிக்கிறான். தாம் சென்ற வழி குறித்துப் பாணர்கள் சுட்டுவதாக அமைந்த செய்திகள். அவர்களுக்கிருந்த நிலவியல், மக்கள் வாழ்வியல் பற்றிய அறிவைத் துல்லியமாக உணர்த்துகின்றன.


பெரும்பாணற்றுப்படையில் உமணர், ஆயர், உழுவார், அந்தணர் அவர்தம் குடியிருப்புகள், தொழில்கள், உணவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. உமணரின் உப்பு வண்டிகள், மிளகுப் பொதி சுமந்த கழுதை சாத்து, விருந்து ஓம்பும் எயினர், மறவர் வீர வாழ்வு, ஆயர் வாழ்வு, உழவர் பெருமை, வலைஞர் வாழ்வு என மக்கள் வாழ்வியலை நுணக்கமாக அறிந்தவராகப் பாணர் படைக்கப்பட்டுள்ளனர் மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியவனாகவும் பாணர் படைக்கப்பட்டுள்ளான். மக்களை மகிழ்விக்கும் கலைஞராகவும். மக்களோடு அணுக்கமாகத் தொடர்பு கொண்ட நாடோடிக் குழவாகவும் பாணர்களின் வாழ்வை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன.


பாணரின் பன்முகப்பட்ட அறிவுத் திறனும் மக்கள் தொடர்பும் ஆட்சியானர் களுக்குப் பயன்தரத்தக்கவை. நிலவுடைமை சார்ந்த அதிகாரத்திற்கான ஏற்பு மனநிலையைச் சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஆட்சியாளர்களின் பொருமையை மக்களிடையே பரப்பு வதற்குமான தொடர்பாளர் களாகப் பாணர்கள் தேவைப்படுகின்றனர். இதனால்தான் பாணர் மரபுகளும் சங்க காலத்தில் தேவைப்பட்டிருக்கின்றன.


சங்க காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரை பாணர் மரபு பல்வேறு காரணங்களால் பல்வேறு நிலைகளில் போற்றிக் கொள்ளப்பட்ட நிலையும் கவனத்திற்கு உரியது. சிலப்பதிகாரத்தில் பாணர்களின் பெருமைக்குரியமரபு குறிக்கப் படுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில்.


“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழம்


வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்


அரும்பெறன் மரபின் பெரும்பாண் இருக்கையும்”


என பாணர் குடியிருப்பு சுட்டப்படுகின்றது ஆயினும், பதினென்கீழ்க்கணக்கு நூலில் பண் அமைத்துப் பாடுபவர்களும் யாழ் இசைப்பவர்களும் இல்லாத நிலைக்கு வருந்தும் குரலைக் காண முடிகிறது. தேவாரம் எழுந்த காலத்தில் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் சிவனடியார். திருஞான சம்பந்தரோடு பல தலங்களுக்கும் சென்று பாடியைதத் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடுகிறது. இதுபோன்றே, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுவதை வைணவ மரபிலும் காண்கிறோம். நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு ராசராசன் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப் பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை (மதங்கசூளாமணி) வைத்துப் பண்முறை வகுத்த செய்தியும் பாண் மரபின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. பாணர் மரபினர் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சூற்றி, சாக்கை, அறிஞ்சி என்பவராக பணியாற்றியுள்ளதை ராசராசன் கல்வெட்டுகள்வழி அறிய முடிகிறது. தமிழ் இசை குறித்த அண்மை ஆய்வுகளில் பாணர் மரபை மீட்டெடுக்க இயலும்.


பாணர் மரபை இனவரைவியல் தரவுகளை முன்வைத்து பக்தவச்சல பாரதி ஆய்ந்துள்ளார். கோண்டுவானா பகுதியில் வாழும் பர்தார்களின் வாழ்வியலையும். அவர்தம் இசைத் தொடர்பையும் பாணர்களோடு இவர் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளார். இக்காலத்தில் பாணர்கள் தமிழகத்தில் ஒரு சிறுபான்மைச் சாதியினராக அடையாளம் பெறுவதையும். இசையோடு எவ்வகையிலும் தொடர்பற்ற பல்வேறு உதிரித் தொழில்களைச் செய்து கொண்டு அன்றாட வாழ்விற்குப் போராடும் நலிந்த பிரிவினராக வாழ்வதை தர்ஸ்டன், தெயரமசிவம் ஆகியோர் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இனக்குழச் சமுதாயத்தின் தனித்தன்மை வாய்ந்த பாணர் மரபு. நிலவுடைமை சமுதாயத்தில் படிப்படியாகச் சிதைக்கப்படுகிறது. வறுமை வாழ்வுக்கு ஆளான நெருக்கடியான நிலையிலும் இனக்குழவின் பொதுமை மரபுகளையும் வாழ்வியல் அறங்களையும் வற்புறுத்தும் போக்கைப் பாணர் மரபு பேணுவதைக் காணமுடிகிறது. பாணர் மரபுகளை அழித்துக் கொண்டு தமிழகத்தில் எழுச்சி பெற்ற வேந்தர் மரபை அவர்களால் வீழ்த்த இயலவில்லை, தம் திஜணைவாழ்வைப் பாதுகாக்கவும் அவர்களால் முடியவில்லை. ஆpனும் திணைக் கோட்பாட்டின்வழி பாண் மரபின் மேன்மைகளை மீட்டுரவாக்கம் செய்ய இப்போது நாம் முயற்சி செய்யலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக